வடசென்னை மக்களை அசிங்கப்படுத்திட்டீங்க..; பார்ட் 2 வேண்டாம் ப்ளீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த படம் வடசென்னை.

இதில் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா, அமீர், சமுத்திரகனி, கிஷோர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இது 3 பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகம் மட்டும் வெளியாகிவிட்டது.

இப்படத்திற்கு பலர் பாராட்டு தெரிவித்தாலும் ஏகப்பட்ட கெட்ட கெட்ட வார்த்தைகளை படத்தில் வடசென்னை மக்கள் பேசுவதாக காட்டியிருந்தார் டைரக்டர்.

மேலும் வடசென்னை என்றாலே அசிங்கம், கொலை, குற்றம் ஆகியவற்றை பிரதானமாக காட்டியிருந்தார்.

இந்நிலையில் பா.ரஞ்சித்தின் கூகை இயக்கம் சார்பில் ‘வடசென்னை’ குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் பதில் அளித்தார்.

அப்போது கூட்டத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர், “வடசென்னை’யைப் பற்றி இவ்வளவு கேவலமாகச் சித்தரித்துக் காட்டியுள்ளீர்கள்.

இரவு நேரத்தில், ’வடசென்னைக்கு ஆட்டோக்காரர்கள் கூட வரமாட்டார்கள். எனவே தயவுசெய்து ’வடசென்னை’ 2 எடுக்கவே எடுக்காதீர்கள்.

போதும். முதல் பாகத்திலேயே ஒட்டுமொத்த வடசென்னை மக்களை இப்படி அசிங்கப்படுத்திவிட்டீர்கள்” என்றார்.

எஸ்டிஆருக்கு ரெட் கார்ட்.? விஷாலை கண்டிக்கும் சிம்பு ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டு 27 நாட்களே மட்டுமே நடித்து கொடுத்தார் என்றும், படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் அந்த தயாரிப்பாளர் குற்றம்சாட்டி இருந்தார்.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவிடம் விளக்கமும் கேட்டது. அவரது படங்களுக்கு தடையும் போட்டது.

தனக்கு நஷ்ட ஈடு கொடுக்காமல் புதிய படங்களில் சிம்பு நடிக்கக்கூடாது என்று மைக்கேல் ராயப்பன் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

ஆனால் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் சிம்பு நடித்து அந்த படமும் ரிலீசாகிவிட்டது.

தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இந்நிலையில் மைக்கேல் ராயப்பன் மீண்டும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “சிம்புவை வைத்து படம் எடுக்கக்கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது.

பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கம் ஓரிரு நாளில் கூடி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுவதாக தெரிவித்து உள்ளது” என்றார்.

இந்த நிலையில் விஷாலும், மைக்கேல் ராயப்பனும் சிம்பு படத்தை வெளிவரவிடாமல் தடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் அவர்கள் சிம்புவுக்கு ஆதரவாக பேசி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Simbu fans condemns Vishal and Producer Michael Rayappan

மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படம் மூலம் ஹீரோவானவர் நடிகர் விஷ்ணு விஷால்,

அண்மையில் இவர் நடித்த ராட்சசன் படம் மாபெரும் வெற்றி பெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவருக்கும், நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி என்பவருக்கும், கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

வழக்கமான கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இவர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இதுகுறித்து விஷ்ணு டுவிட்டரில் கூறியிருப்பதாவது : நானும், ரஜினியும் ஓர் ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தோம். தற்போது எங்களுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.

எங்களது மகனுக்கு ஒரு நல்ல பெற்றோராக இருந்து, அவனுக்கு எல்லாவற்றையும் செய்தோம், இனியும் செய்வோம். பல ஆண்டுகள் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம், இனி நல்ல நண்பர்களாக இருப்போம்.

எங்களது மகன் மற்றும் இருவரது குடும்பங்களின் நலன் கருதி எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

ஷங்கரின் *இந்தியன்2* படத்தில் கமலுடன் இணையும் சிம்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

22 ஆண்டுகளுக்கு பிறகு கமல் மற்றும் ஷங்கர் இருவரும் இந்தியன் 2 படத்திற்காக இணைகின்றனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, முத்துராஜ் கலை பணிகளை கவனித்து வருகிறார்.

இதன் செட் அமைக்கும் பணிகளை நேற்று முதல் பூஜையுடன் படக்குழு துவங்கியது.

அடுத்த டிசம்பர் முதல் இதன் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. (நம் தளத்தில் இல்லை)

இதுபற்றி கேட்டதற்கு… கமல் கேரக்டர் மற்றும் உறுதியாகியுள்ளது. துல்கர் மற்றும் சிம்பு உள்ளிட்டோரை யாரும் அனுகவில்லை. என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே சூட்டிங் தொடங்கும் முன் மற்ற கலைஞர்கள் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Will STR aka Simbu joins Kamalhassan for Indian 2

செகன்ட் ஹீரோவை காதல் (மறு) திருமணம் செய்யும் சௌந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2010ம் ஆண்டில் தொழிலதிபர் அஸ்வின் என்பவரை ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு வேத் என்ற பெயரில் 2 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

ஆனால் குழந்தை பிறந்த ஓராண்டில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
அதன் பின்னர் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.

தற்போது தந்தை ரஜினியுடன் வசித்து வருகிறார் சவுந்தர்யா.

இந்நிலையில் சௌந்தர்யா 2வது திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம்.

இந்த திருமணத்திற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

செளந்தர்யா திருமணம் செய்துகொள்ள இருப்பவரின் பெயர் விசாகன்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வணங்காமுடி என்ற தொழிலதிபரின் மகன் ஆவார். தற்போது தந்தையுடன் இருந்து இவரும் தொழிலை கவனித்து வருகிறாராம்.

இவரும் சவுந்தர்யாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தாகவும் பின்னர் பழக்கமாகி இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும், விரைவில் திருமணத்தை மிக எளிமையாக நடத்தவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சௌந்தர்யாவை விவாகரத்து செய்ய அஸ்வின் சில மாதங்களுக்கு முன்பே 2வது திருமணம் செய்துக் கொண்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya Rajinis 2nd marriage She going to marry an actor

Breaking இலவசங்கள் நிச்சயம் தேவை.; சர்கார் சர்ச்சை குறித்து ரஜினி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முருகதாஸ் இயக்கி விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் அரசு கொடுத்த இலவசங்களை மக்கள் தீயிட்டு எரிப்பதாக காட்சிகள் இருந்தன.

இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் போர்கொடி உயர்த்த சர்கார் படம் மறுதணிக்கை செய்யப்பட்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சற்றுமுன் ரஜினிகாந்த் அவர்களிடம் கேட்கப்பட்டது.

சர்க்கார் பட விவகாரத்தில் அரசு பேச்சுவார்த்தைக்கு பதிலாக எடுத்த எடுப்பிலேயே தியேட்டரை தாக்குவது, பேனரை கிழிப்பது மிகவும் தவறான செயல். பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம்.

100% மக்களுக்கு இலவசங்கள் தேவை தான் (ஏழைகளுக்கு). ஆனால் அது யாருக்கு சென்றடைகிறது என்பதை பார்க்க வேண்டும். ஓட்டுக்காக இலவசங்களை கொடுக்க கூடாது. என்றார்.

மேலும் பாஜக. குறித்து கேட்டதற்கு….

பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் கருதினால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தானே. பாஜக ஆபத்தான கட்சியா என்பதை நான் இப்போது கூற முடியாது, அதை மக்கள் முடிவு செய்யட்டும் – ரஜினி

நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை, முழுமையாக இறங்கியதும் முழு பதில் சொல்வேன்.

10 பேர் ஒருவரை (பாஜக.) வை எதிர்த்தால் யார் பலசாலி? என விளக்கம் அளித்தார்.

Free is must says Rajinikanth in Sarkar deleted scenes issue

More Articles
Follows