60 மணி நேரம் அசராமல் உழைத்த பீச்சாங்கை கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பீச்சாங்கை வெற்றியை தொடர்ந்து நடிகர் பீச்சாங்கை கார்த்திக் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அவர் நடிக்கும் படத்திற்கு.

ஷூட்டிங் ஸ்பாட்க்கு சரியான நேரத்திற்கு வராத சில நடிகர்கள் மத்தியில் நடிகர் பீச்சாங்கை கார்த்திக் படப்பிடிப்பு தளத்திலேயே மாரி மாரி நடித்துக்கொண்டிருக்கிறாராம். புதிய இயக்குனர் மிலன் இயக்கும் கமர்ச்சியல் படத்தில் அதிகாலை 6 மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பித்து இரவு 3 மணி வரைக்கும் படப்பிடிப்பு நடைபெற்றது , அதைத்தொடர்ந்து திருவள்ளூர் சென்று விளம்பர படம் ஓன்றில் இன்று அதிகாலை 6:30 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவடைகிறது. அங்கிருந்து புறப்பட்டு நேசன் மற்றும் சிம்புதேவன் போன்ற பெரிய இயக்குனருடன் உதவி இயக்குனராக பனி புரிந்த டீ.ஆர்.பாலா டுவீலர் பந்தயத்தை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மறுநாள் அதிகாலை 6 மணி அளவில் தொடங்கி இரவு 8 மணிக்கு நிறைவடைகிறது. மறுபடியும் இயக்குனர் மிலன் படப்பிடிப்பு இரவு 9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணிக்கு நிறைவடைகிறது தொடர்ந்து 60 மணி நேரம் இடைவிடாத பட பிடிப்பில் நடித்துள்ளார்..

தொடர்ந்து 60 மணி நேரம் படப்பிடிப்பு நடைபெறுகிறதே உங்களுக்கு சோர்வாக இல்லையா என்று கார்த்தியிடம் கேட்ட போது எனக்கு வேலை பார்ப்பது ரொம்ப பிடிக்கும் எனக்கு இதுவரை சோர்வாகவில்லை என்று கூறினார்

பீச்சாங்கை கார்த்திக்கை வைத்து படம் எடுத்தால் ஹீரோ ஷூட்டிங் ஸ்போட்க்கு லேட்டா வர பிரச்சனையே இருக்காது படப்பிடிப்பும் விரைவில் முடியும் தயாரிப்பாளருக்கும் எந்த வித நஷ்டமும் ஆகாது. சினிமாவில் இப்படிப்பட்ட ஹீரோ இருப்பது ஆச்சரியம்தான்.

வெல்வெட் நகரம் பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா ஆகியோரைப் போல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வரலட்சுமி.

தற்போது விஜய்யுடன் தளபதி 62, தனுஷின் ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘மிஸ்டர் சந்திரமௌலி’, ‘ சண்டக்கோழி-2’ ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் வெல்வெட் நகரம் என்ற படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கி வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டர் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் பலரது கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கலாம்.

பிரபுதேவா-நிவேதா ஜோடியுடன் இணைந்தார் தெறி வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபுதேவா நடித்த `யங் மங் சங்’, `லக்‌ஷ்மி’ உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபுதேவா முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

இவருடன் நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ்மேனன் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

கடந்த வருடம் வெளியான தெறி படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார் மகேந்திரன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஜெபக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நேமிஷந்த் ஜபக் தயாரிக்கிறார்.

இமான் இசையமைக்கவுள்ள இப்படத்தை முகில் என்பவர் இயக்கவுள்ளார்.

சொடக்கு மேல பாட்டுக்கு ஆட்டம் போட்டு சுளுக்கு எடுக்கும் சாயிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் இயக்கி வனமகன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் சாயிஷா.

அதில் தன் நடனத்தாலே ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார்.

தற்போது ஆர்யாவுடன் கஜினிகாந்த், விஜய்சேதுபதியுடன் ஜுங்கா, கார்த்தி உடன் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள ’சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

தான் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்தால் ரசிகர்களுக்கு சுளுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை.

அப்பாவுடன் வாழும் அதிர்ஷ்ட்டத்தை பெறாதவன் நான்.. சிவகார்த்திகேயன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை டூ வெள்ளித்திரை வந்த சிவகார்த்திகேயன் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இவரது தந்தை காவல் துறை அதிகாரியாக பணி புரிந்தவர். அவர் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது.

கடந்த 2003 – ம் ஆண்டு மறைந்த சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் பற்றி அவருடன் பணியாற்றிய உதவியாளர் சௌந்தரராஜன் என்பவர் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் சிவகார்த்தியின் அப்பா உயிரிழக்கும் கடைசி நிமிடத்தில் தான் மட்டுமே அவருடன் இருந்ததாகவும், அந்த நினைவுகளை மறக்க முடியாது என்றும் அவரது இறந்த நாளில் தெரிவித்துள்ளார்.

அதற்கு ட்விட்டரில் பதிலளித்த சிவகார்த்திகேயன்…

என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் அவரை பேசுகிறீர்கள் என்றால் அது அவர் பெருமையையும் உங்கள் நல்ல மனதையும் காட்டுகிறது என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவருடன் பல வருடங்கள் சேர்ந்து வாழும் அதிர்ஷ்டத்தை கிடைக்கப் பெறாதவன் எனவும் அவரின் நினைவுகளுடன் வாழ்ந்து வருவதாகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ரஜினி என்ற வசீகரம் வென்று விட்டது; காலா குறித்து விவேக் கமெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்-தனுஷ்-ரஞ்சித் கூட்டணியில் உருவான காலா திரைப்படம் கடந்த ஜீன் 7ஆம் தேதி வெளியானது.

இதில் ரஜினியுடன் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டீல், அருந்ததி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வெளியான முதல் நாளன்று உலகளவில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலை அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விவேக், காலா படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், காலா பார்த்தேன். சூப்பர் ஸ்டாரை வித்தியாசமாக கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டுகள்.எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும்,’ ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது ’ என தெரிவித்துள்ளார்.

காலா பார்த்தேன். Super starஐ வித்யாசமாக கையாண்ட படக் குழுவினருக்கு பாராட்டுகள்.எல்லோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ஆயினும், ரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது. @rajinikanth @dhanushkraja

— Vivekh actor (@Actor_Vivek)

More Articles
Follows