ராம் கோபால் வர்மாவின் பாராட்டை பெற்ற பட்டறை டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இருண்ட பக்கங்களை திரையில் கொண்டு வரும் படைப்பாளிகள், உலகின் நடப்பு நிகழ்வுகளை சினிமாவில் சொல்லக்கூடிய ஒரு பரந்த பார்வையை கொண்டுள்ளனர். மிகச் சிறந்த நேர்மறையான முறையில் ‘ராவான’ திரைப்படங்களை வழங்கிய, என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, எப்போதும் திறமையாளர்களை ஊக்குவித்து வந்திருக்கிறார். நடிகர் ஜே.டி. சக்ரவர்த்தியை 1996ல் வெளியான அவரது ‘சத்யா’ திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். இந்த படம் விருதுக்கான நடிப்பை அவரிடம் இருந்து வெளிப்படுத்தியது. அப்படிப்பட்ட ராம் கோபால் வர்மாவுடம் இருந்து பட்டறை படக்குழுவுக்கு பாராட்டுக்கள் கிடைத்திருக்கிறது. அவர் டீஸரில் வந்த கலர் ட்ரீட்மெண்ட் மற்றும் மாறுபாடுகளை பாராட்டினார்.

இந்த உற்சாகத்தை பகிர்ந்து கொண்ட இயக்குனர் கூறும்போது, “இது நம்ப முடியாத ஒரு தருணம், நான் அவரது படங்களைப் பார்த்து வளர்ந்தவன். குறிப்பாக சத்யா திரைப்படம் ஒரு இயக்குனராக எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த படம். அதை பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. அவர் இந்த படத்தை பற்றி நல்ல வார்த்தைகளை கூறியதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

பட்டறை சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிக மோசமான அச்சுறுத்தலான பெண்கள் கடத்தலை பற்றி பேசும் படம். இயக்குனர் கே.வி.ஆனந்த் உடன் பணியாற்றிய இயக்குனர் பீட்டர் ஆல்வின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். டீஸர் பற்றிய ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்து பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது, மேலும் படக்குழுவிற்கு நேர்மறையான ஊக்கத்தை அதிகரித்துள்ளது.

பேட்ட படத்தில் கார்த்திக் சுப்பராஜின் மனைவியும் நடிச்சாரே தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய படம்தான் பேட்ட.

இதில் ரஜினிக்கும் அவரது ரசிகர்களுக்கும் தேவையான அனைத்து மாஸ் காட்சிகளையும் வைத்திருந்தார். எனவே பேட்ட படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பேட்ட படத்தில் ரஜினிகாந்த் வில்லனை பழிவாங்க வட இந்தியா செல்வார். அப்போது ரஜினிக்கு உதவி செய்பவராக ஒருவர் நடித்திருப்பார் அவர்தான் கார்த்திக் சுப்பராஜின் அப்பா கஜராஜ்.

அதுபோல் கார்த்திக் சுப்பராஜின் மனைவியும் ஒரு காட்சியில் நடித்திருந்தார். தெரியுமா?

ஹாஸ்டர் வார்டனாக ரஜினி சேரும்போது அவரிடம் ஒரு பெண் அப்பாய்ண்ட்மெண்ட் கொடுப்பார். அவர்தான் கார்த்திக் சுப்பராஜின் மனைவி. அவரது பெயர் சத்ய பிரேமா.

Karthik Subbaraj wife Sathya Prema too acted with Rajini in Petta movie

 

இயக்குனருக்கு தேவைப்படும் சவாலான நடிகர் ஹரீஷ் கல்யாண்… ரஞ்சித் ஜெயக்கொடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எல்லா இடங்களிலும் இசை வசந்தத்தை பரப்பி வருகிறது. முதல் சிங்கிள் பாடலான ‘கண்ணம்மா’ 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது.

தற்போது, சாம் சிஎஸ்ஸின் வழக்கத்திற்கு மாறான அடுத்த பாடலை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

அந்த பாடலை பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது,

“கதை எழுத ஆரம்பித்த போதே பாடல்கள் கதையின் தீவிரத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்க வேண்டும், படத்துக்கு வேகத்தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.

குறிப்பாக, இந்த பாடல் ‘ஏய் கடவுளே’ படத்தில் முக்கியமான இடத்தில் வரும். குறிப்பாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குரலில் வசனமாக ஆரம்பிக்க, ஹரீஷ் கல்யாண் அதை தொடர்ந்து இந்த பாடலை பாடியுள்ளார்.

இசையின் காதலர்கள் எப்போதும் இசை மற்றும் ஒலியில் வரும் புதிய யோசனைகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பார்கள். அதன்படி, ‘ஏய் கடவுளே’ அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து பணியாற்றுவது மிகச்சிறப்பான தருணமான உணர்கிறார் இயக்குனர் ரஞ்சித். மேலும் அவர் தனது நடிப்பால் கதையை மிகச்சிறப்பாக திரையில் கொண்டு வருவதோடு, ஒரு பிரபல நட்சத்திரமாகவும் மாறி இருக்கிறார் என்று அவரை மிகவும் புகழ்கிறார்.

“ஹரீஷ் கல்யாணை பற்றிய மிகவும் விசேஷமான விஷயம், அவர் தனக்கு முன்பே இருக்கும் இமேஜை உடைத்து, வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒன்றை வெளியே கொண்டு வருவதை லட்சியமாக கொண்டிருக்கிறார்.

சாக்லேட் பாய் மற்றும் ரொமாண்டிக் பியூட்டி என்று அழைக்கப்படுவதை அனுபவித்துக் கொண்டே அவர் தனது புதிய மண்டலத்துக்குள் தன்னை புகுத்தி கொள்கிறார்.

இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் அவரை புதிய பரிமாணத்துடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என நான் நம்புகிறேன். பெரும்பாலான நேரங்களில், ஒரு புதிய மண்டலத்தில், புதிய யோசனைகளுடன் பயணம் செய்ய விரும்பும் எந்த ஒரு இயக்குனருக்கும் ஒரு சவாலான நடிகர் தேவை.

அந்த வகையான இயக்குனர்களின் முதல் தேர்வாக ஹரீஷ் கல்யாண் இருப்பார் என நான் நம்புகிறேன்” என்றார்.

மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது.

கவின் ஒளிப்பதிவில், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பில், சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

ஹரீஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஜோடி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, அவர்களுடன் மாகாபா ஆனந்த், பொன்வண்ணன், பாலசரவணன் மற்றும் பன்னீர் புஷ்பங்கள் புகழ் சுரேஷ் என திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

ரன்வீர் சிங்-கபீர் கான் இணையும் 83 படம் 2020ல் கோடையில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரன்வீர் சிங் நடிப்பில் இயக்குனர் கபீர் கான் இயக்கத்தில் மது மந்தேனா, விஷ்ணு இந்துரி, கபீர் கான் ஆகியோர் தயாரிப்பில் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் வழங்கும் “83” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும் 10 ஏப்ரல் 2020 அன்று “83” திரைப்படம் வெளியாகும் எனத் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகுமார்-அஞ்சலி-அதுல்யா இணையும் நாடோடிகள் 2 பட ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2009 ம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள்–2 ” உருவாகி வருகிறது.

இதில் சசிகுமார் – அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு – ஏகாம்பரம்

கலை – ஜாக்கி

எடிட்டிங் – ரமேஷ்

பாடலாசிரியர் – யுகபாரதி

சண்டை பயிற்சி – திலீப் சுப்புராயன்

நடனம் – திணேஷ், ஜான்

தயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்.

தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்

எழுதி இயக்குகிறார் – சமுத்திரகனி.

விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

படமும் விரைவில் வெளிவர இருக்கிறது.

விஜய்சேதுபதி & சூரி கூட்டணிக்கு ஸ்கெட்ச் போட்ட டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு மற்றும் பழமையான நிறுவனங்களில் ஒன்று விஜயா புரொடக்சன்ஸ்.

இவர்கள் எம்ஜிஆர் சிவாஜி முதல் ரஜினி கமல் போன்ற முக்கிய நடிகர்களை வைத்து படம் தயாரித்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள்.

மேலும் அண்மையில் விஜய் மற்றும் அஜித் படங்களையும் தயாரித்துள்ளனர்.

தற்போது தன் அடுத்த படைப்புக்கு தயாராகிவிட்டது.

இந்த படத்தை விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்குகிறார்.

விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் தற்போது நடிகர் & காமெடியன் சூரி இணைந்து நடிக்க உள்ளார்.

சுந்தர பாண்டியன், ரம்மி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து சூரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்..

இசையமைப்பாளர் டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

More Articles
Follows