தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தான் வைத்திருந்த சொத்துகள் அனைத்தையும் ஏழை மக்களுக்கு எழுதிக் கொடுத்தவர்.
இவரின் சேவைகளை பலரும் பாராட்டி வந்தனர்.
ஆனால் ரஜினி ஒரு படி மேலே சென்று இவரை தந்தையாக தத்தெடுத்தார்.
அதாவது… 1999ம் ஆண்டு காமராஜர் அரங்கில் நடைபெற்ற பாலம் கல்யாண சுந்தரம் பாராட்டு விழாவில் ரஜினி பங்கேற்றார்.
தான் வாழும்போதே தன் சொத்துகளை எழுதித் தரும் மகானுக்கு நான் மகனாக வேண்டும். எனக்கு 2 மகள்கள் உள்ளனர், தந்தை இல்லை.
எனவே, நீங்கள் எனக்குத் தந்தையாக இருக்க வேண்டுமென போயஸ் கார்டன் இல்லத்திற்கு பாலம் கல்யாண சுந்தரத்தை அழைத்துச் சென்றார் ரஜினி.
“போயஸ் கார்டன் இல்லத்தில் ராஜா போல வாழ்ந்தாலும் வசதியான சிறையில் இருப்பதைப் போல உணர்ந்தேன்.
என் சமூக சேவைக்கு அது தடையாக இருந்தது. பொது மக்களுக்கு உதவிசெய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை” என கூறி ரஜினி வீட்டில் இருந்து வெளியேறினார் கல்யாண சுந்தரம்.
இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் 70வது பிறந்த பிறந்தநாளையொட்டி அவரைச் சந்திக்க வந்துள்ளார் கல்யாணசுந்தரம்.
ரஜினி வீட்டில் இல்லாததைத் தெரிந்துகொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு புறப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம்…
“ரஜினி நல்ல மனிதர், தூய்மையானவர். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நன்றாக இருக்கும், வளம் பெறும் என “பாலம்” கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.
Paalam Kalyana Sundaram praises Rajinikanth