தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆனால் அதற்குள் ரஜினியின் கபாலி பட வாய்ப்பு வரவே, அதில் பிஸியாவிட்டார்.
எனவே சூர்யா மற்ற படங்களுக்கு தன் கால்ஷீட்டை ஒதுக்கி விட்டார்.
அதற்குள் மீண்டும் ரஜினி பட வாய்ப்பு வரவே, காலா படத்தை இயக்க சென்றுவிட்டார்.
இப்படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிக்கவுள்ள படத்தை ரஞ்சித் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
செல்வராகவன் படத்தை முடித்துவிட்டு கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.
அந்த படங்களை முடித்துவிட்டு பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
இந்த படங்கள் தொடர்ந்து தனுஷ் படத்தை ரஞ்சித் இயக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.
இப்படம் சமூகம் கலந்த அரசியல் கதையாக இருக்குமாம். ஏற்கெனவே கொடி என்ற படத்தில் அரசியல்வாதியாக கலக்கியிருந்தார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.