ஸ்பெஷல் ஷோ கட்; அமைச்சர் எச்சரிக்கையால் விஜய் ரசிகர்கள் டென்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய்-நயன்தாரா இணைந்துள்ள படம் ‘பிகில்’

ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி பிகில் திரைக்கு வருகிறது.

விஜய் படங்கள் என்றாலே அதிகாலை சிறப்பு காட்சிகள் இருக்கும். ஆனால்

பெரும்பாலான திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில் தீபாவளியையொட்டி வெளியாகும் பிகில் மற்றும் கைதி உள்ளிட்ட எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சிறப்பு காட்சி என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை மீறி சிறப்பு காட்சி திரையிட்டால் சம்பந்தப்பட்ட தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வும் எச்சரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர்.

இதனால் அதிகாலையில் தளபதி தரிசனம் கிடைக்காதே என விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

சில ஊர்களில் இந்த படம் வெற்றி பெற ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்தில் அஜித்துடன் இணையும் நஸ்ரியா & அருண் விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வலிமை படத்திற்காக மீண்டும் நேர்கொண்ட பார்வை பட கூட்டணி இணைகிறது.

அதாவது அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் இணைந்துள்ளனர்.

அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்க பல ஆக்சன் காட்சிகள் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய கேரக்டரில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வில்லனாக நடிக்க அருண் விஜய்யை பரிசீலிக்கிறார்களாம்.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்தில் நஸ்ரியா நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தலைமுடியை பாப் கட்டிங் செய்து ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் வலிமை என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார்.

எனவே நஸ்ரியா நடிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Nasriya and Arun Vijay joins with Ajith in Valimai

மீண்டும் சூர்யா-ஹரி கூட்டணி; கன்பார்ம் செய்தார் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் சிங்கம். இப்படத்தை இயக்கியவர் ஹரி.

தற்போது பல பார்ட் 2, பார்ட் 3 படங்கள் வந்தாலும் இந்த படம் மட்டுமே பழைய கதையுடன் தொடர்ச்சியுடன் இருந்து வருகிறது. அதே நடிகர்கள் தொடர்ந்து சிங்கம்2, சிங்கம் 3 படங்களில் வருகின்றனர்.

இதுவரை 3 பாகங்கள் வந்துள்ள நிலையில் 4வது பாகம் வெளிவருமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் கைதி பட பிரஸ்மீட் ஹைதராபாத்தில் கார்த்தி கலந்துக் கொண்ட போது ஹரி இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.

எனவே இது சிங்கம் 4-ம் பாகமாக இருக்குமோ? என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

Karthi confirms Suriyas next is with director Hari

அஜித் & ரஜினியை அடுத்து விஜய்யுடன் இணையும் சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியவர் சிவா. எனவே இவரை சிறுத்தை சிவா என்ற அழைத்து வருகின்றனர்.

இதன் பின்னர் இவர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனராகி ‘வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்’ ஆகிய படங்களை இயக்கினார்.

இவை சூப்பர் ஹிட்டாகவே தற்போது ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார்.

தலைவர் 168 என்று அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இமான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அண்மையில் ஒரு விழாவில் கலந்துக கொண்ட சிவா… சீக்கிரமே விஜய் கூட படம் பண்ணுவேன் என தெரிவித்துள்ளர்.

இதனால் லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்துவிட்டு சிவா உடன் விஜய் இணைவார் என எதிர்பார்க்கலாம்.

After Ajith and Rajini movies Siva likes to join with Vijay

விஜய்யும் வித்தியாசமான ரசிகர்களும்…. புரிஞ்சுக்கவே முடியலையே.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற அக். 25ல் வெளியாகவுள்ளது.

இப்படத்தை வரவேற்க வித்தியாசமான விஷயங்களை செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

அண்மையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்துவிட்டதால் பேனர்களை தவிர்த்து வருகின்றனர். எனவே நெல்லை மாவட்டம், மீனாட்சிபுரம் பெண்கள் பள்ளி உட்பட 4 இடங்களில் 12 சிசிடிவி கேமராக்கள் அமைத்து கொடுத்துள்ளனர்.

இது ஒரு புறம் நல்ல விஷயமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் வித்தியாசமான வேண்டுதல்களை செய்து வருகின்றனர்.

நாகை மாவட்ட விஜய் ரசிகர்கள் மயிலாடுதுறையில் இருக்கும் பிரசன்ன மாரியம்மன் கோவிலில், மண் சோறு சாப்பிட்டனர்.

மற்றொரு பகுதியில் பிகில் வெற்றி பெற வேண்டி கிரேன்களில் பறவை காவடி எடுத்துள்ளனர்.

என்னப்பா.. இந்த விஜய் பேன்ஸ் அப்படியும் பண்றாங்க இப்படியும் பண்றாங்க என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Vijay fans doing different things for the success of Bigil

பிகில் ரிலீசாகுமா?; காப்புரிமை வழக்கு மீண்டும் தொடர ஐகோர்ட் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது.

இந்த பட சூட்டிங் நடைபெறும்போது வேறொரு உதவி இயக்குனர் செல்வா என்பவர் இப்பட கதை தன்னுடையைது என்றும் படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து இப்பட இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், காப்புரிமை சம்பந்தப்பட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்து வழக்கை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.

இதன் பின்னர் வழக்கை வாபஸ் பெறவும், மீண்டும் புதிதாக வழக்கு தொடர அனுமதி கோரியும் உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் செல்வா.

இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது. ஆனால் புதிதாக வழக்கு தொடர அனுமதி மறுத்து விட்டது.

எனவே புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து செல்வா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், காப்புரிமை மீறல் தொடர்பாக புதிய வழக்கு தொடர அனுமதி மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, புதிய வழக்கு தொடர அனுமதியளித்து விட்டார்.

எனவே பிகில் ரிலீசில் சிக்கல் உண்டாக வாய்ப்பு இருக்கலாம் என தெரிகிறது.

Madras high court order in Bigil movie release issue

More Articles
Follows