சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில தலைவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு தலைவர் தான் டாக்டர் எம். ஜி.ராமச்சந்திரன். தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எப்போதும் வாழ்ந்து வருகிறார். அவரின் பாடல்களும் காலத்தால் அழியாதவை. பல ஆண்டுகள் மற்றும் தலைமுறைகள் கடந்தாலும் இன்னும் ஆழமாக மனதில் நிற்கக் கூடியவை. தற்போதைய தலைமுறை நடிகர்களில் வணிக ரீதியில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன், ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் தனது கனா படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார்.தனது இரண்டாவது தயாரிப்பிற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று பெயரிட்டிருக்கிறார். பிளாக் ஷீப் யூடியூப் சேனல் மூலம் புகழ் பெற்ற கார்த்திக் வேணுகோபாலன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

“எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன்வந்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக ஜொலிக்க முடியும் என அவர் நம்புகிறார். ‘கனா’ ஒரு தீவிரமான எமோஷன் சார்ந்த திரைப்படம் என்றால், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஒரு முழுமையான நகைச்சுவை பொழுதுபோக்கு படம். படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடுமையாகவும், நேர்மையாகவும் உழைத்து வருகிறோம்” என்றார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்.

இந்த படத்தில் ரியோ ராஜ், ஆர்.ஜே. விக்னேஷ், ஷிரின் காஞ்ச்வாலா, புட் சட்னி ராஜ்மோகன், ராதாரவி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர். யு.கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷபீர் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். எஸ். கமலநாதன் கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.

பேட்ட மாளவிகா இவ்வளவு ஹாட்டா..; இணையத்தை சூடேற்றும் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் பேட்ட.

இதில் மாலிக் கேரக்டரில் நடித்த சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மலையாள நடிகை மாளவிகா மோகன்.

இவர் ஆஸ்கர் விருதுபெற்ற இயக்குனர் மஜித் இயக்கிய “பியாண்ட் த கிளவுட்ஸ்” படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் .

இந்நிலையில் நேற்று நடந்த ஜீ சீனி அவார்ட்ஸ் விருது விழாவுக்கு சென்றுள்ளார்.

அப்போது படுக்கவர்ச்சியான உடை அணிந்து சென்றுள்ளார் .

அந்தப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் எப்போ வர்றாரோ; ஆனால் பவர் ஸ்டார் இப்போ வந்துட்டார்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துவிட்டார். சட்டமன்ற தேர்தலே என் இலக்கு எனவும் தெரிவித்து விட்டார்.

ஆனால் இப்போது அரசியல் களத்தில் பவர் ஸ்டார் குதித்துள்ளார்.

தமிழக மக்களால் பவர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் சீனிவாசன்.

இவர் பாராளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளார்.

மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது… , “1½ ஆண்டுகளுக்கு முன்பே நான் இந்திய குடியரசு கட்சியில் (அத்வாலே) இணைந்துள்ளேன். கட்சி துணைத்தலைவராக இருக்கிறேன்.

தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு, மக்கள் பணியாற்ற உள்ளேன். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்ய போகிறேன்.

மற்ற நடிகர்களை போல் பதுங்காமல், நான் துணிந்து களம் காண்கிறேன். இந்த பவர்ஸ்டாரை மக்கள் ஆதரிப்பார்கள்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிம்புவின் ‘மாநாடு’ படம் நிறுத்தம்..? சுரேஷ் காமாட்சி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’.

இப்படத்தை தொடர்ந்து ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு.

இதில் சிம்புவுடன் ஜெய் மற்றும் ராஷி கண்ணா நடிக்கவுள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கவுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது..

இதுகுறித்து இப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதாவது…

‘வதந்திகளை நிறுத்துங்கள். ஒரு படத்தை தொடங்குவது அவ்வளவு எளிதானது அல்ல. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என கூறியுள்ளார்.

‘காப்பான்’ பிரதமருடன் நடித்தது மகிழ்ச்சி.. சூர்யா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, சாயிஷா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் காப்பான்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் மோகன்லால் தனக்கான காட்சிகளை முடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்துக்காக மோகன்லாலின் முகநூல் பக்கத்தில் இருந்து லைவ் வீடியோ ஒன்றுவெளியானது.

இதில் மோகன்லால் மற்றும் சூர்யா கலந்துக் கொண்டனர்.

அப்போது சூர்யா பேசும்போது… ’பிரதமராக மோகன்லால் சார் நடித்திருக்கிறார். அவரைப் பாதுகாக்கும் கமாண்டோ வீரராக நான் நடித்திருக்கிறேன்.

மோகன்லால் சாரோடு நடித்தது பெரும் மகிழ்ச்சி. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என சூர்யா பேசினார்.

விமல் – வரலட்சுமி இணைந்துள்ள கன்னிராசி படத்திற்கு யு சர்ட்டிபிகேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமல் மற்றும் வரலட்சுமி இணைந்து நடித்துள்ள படம் ‘கன்னிராசி’.

இவர்களுடன் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

முத்துக்குமரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

இப்பட சூட்டிங் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலைல் சென்சாரில்ல் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

எனவே விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows