‘விக்னேஷ் சிவன் கொடுத்தா வாங்குறேன்…’ நயன்தாரா ஓபன் டாக்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவை தன் அழகாலும் நடிப்பாலும் கலக்கி வருபவர் நயன்தாரா.

இவர் பல விருதுகளை வென்று ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று சைமா (SIIMA) விருது விழாவில் 2015ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான (நானும் ரெடிளதான்) விருதை பெற்றார்.

அப்போது பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த விருதை நயன்தாராவுக்கு கொடுக்க காத்திருந்தார்.

ஆனால் அந்த விருதை விருது பெற காரணமாக இருந்த அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் கையால் பெற வேண்டும் என நயன்தாரா தெரிவித்தார்.

இதை தொடர்ந்து விழாவில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

‘சம்பள பாக்கி இருக்கு… அதான் அப்படி…’ சிம்பு தரப்பு பதிலடி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விண்னைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்றவுடனே ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

‘அச்சம் என்பது மடமையடா’ என்ற தலைப்பிடப்பட்ட இப்படம் விறுவிறுப்பாக நடந்தது.

ஆனால் ‘தள்ளிப் போகாதே’ பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றும் சிம்பு படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும் கெளதம் மேனன் அண்மையில் தெரிவித்தார்.

இதுகுறித்து, சிம்பு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது..

“கெளதம் மேனனை சிம்பு ரொம்பவே மதிக்கிறார். ஆனால், சம்பள பாக்கி இருக்கிறது.

அதனைக் கொடுத்துவிட்டால் மீதமுள்ள காட்சிகளை முடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

‘வீரப்பன் படத்துக்காக டைம், மணி வேஸ்ட் பண்ணாதீங்க…’ முத்துலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கில்லிங் வீரப்பன் என்ற படத்தை கன்னடத்தில் எடுத்தார்.

அப்படத்தின் தமிழ் பதிப்பு ‛வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற பெயரில் தமிழகத்தில் நேற்று வெளியானது.

இப்படம் தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி. அப்போது அவர் பேசியதாவது…

“வீரப்பன் படத்தில் வரும் கதைகள் முற்றிலும் தவறானது. என்னைப் பற்றியும், எனது கணவர் பற்றியும் தவறாக சித்தரித்துள்ளார் இயக்குனர்.

இப்படத்தை யாரும் பார்க்க வேண்டாம். உங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து வீணாக்காதீர்கள்.

என் கணவர் பற்றிய உண்மை சம்பவங்களை நானே விரைவில் படமாக எடுக்கிறேன்.

அப்போதுதான் பல உண்மையான விஷயங்கள் தெரிய வரும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும், என் கணவருக்கும் எவ்விதமான தொடர்பு கிடையாது.” என்றார்.

மேலும் ராம் கோபால் வர்மா மீது கர்நாடக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் முத்துலட்சுமி. தமிழகத்திலும் விரைவில் வழக்கு தொடர உள்ளதாக குறிப்பிட்டார்.

அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும் நன்றி…’ – அருண் விஜய் நெகிழ்ச்சி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்ற வருடத்தின் சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான சைமா விருதுகள் நேற்று நடந்த SIIMA விருது விழாவில் வழங்கப்பட்டது. அப்போது சிறந்த வில்லன் விருது நடிகர் அருண் விஜய்க்கு கொடுக்கப்பட்டது.

என்னை அறிந்தால் படத்தில் அருமையாக மிரட்டி நடித்திருந்தார் இவர்.

விருது பெறுவதற்காக மேடையேறிய அருண்விஜய் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

அப்போது…. ‘ரொம்ப சந்தோஷம். நிச்சயமாக இது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான்.

என்னை அறிந்தால் படத்தில் நடிக்கும்போது ஒரு சகோதரனாகவும் ஒரு நண்பனாகவும் என்னை ஊக்கப்படுத்தியவர் அஜித் சார்.

அவருக்கு இப்போது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் எனக்கு பேராதரவு அளித்த அவரது ரசிகர்களுக்கும் நன்றி’ என்றார்.

இவ்விழாவில் சிவகார்த்திகேயனின் ரெமோ பட செஞ்சிட்டாளே சிங்கிள் ட்ராக் பாடலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு மெகா விருந்து..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பிரபுசாலமன் மற்றும் தனுஷ் இணைந்துள்ள ‘தொடரி’ விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கொடி’ படமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட இருக்கிறார்களாம்.

தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி வெளியிட்டால் ரசிகர்களுக்கு மெகா விருந்தாக இருக்கும் என்பதால் அன்றைய தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் தனுஷ் உடன் த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன்.

‘கபாலி விநியோகஸ்தரே கவலைப்படாதீங்க…’ உறுதியளித்த கவர்னர்-முதல்வர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்பெல்லாம் படம் தயாரிப்பதுதான் கடினம். அதை ஈசியாக ரிலீஸ் செய்து விடுவார்கள். ஆனால் தற்போது மெகா பட்ஜெட் படங்களை கூட எளிதாக எடுத்து விடுகின்றனர். அதை ரிலீஸ் செய்வதற்குள் படாத பாடு பட்டு வருகின்றனர்.

தியேட்டர்கள் கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில், படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாள்களில் திருட்டு டிவிடியும் வந்து விடுகிறது.

இந்நிலையில் ரஜினியின் ‘கபாலி’ பட புதுச்சேரி ரிலீஸ் உரிமையை பெற்ற லெஜண்ட்ஸ் மீடியா ஜி.பி.செல்வகுமார், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி ஆகியோர்களை நேரில் சந்தித்துத்துள்ளார்.

அப்போது சினிமாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் திருட்டு டிவிடியை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினார்.

மனுவை பெற்றுக் கொண்ட கவர்னரும் முதல்வரும் திருட்டு டிவிடியை ஒழிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்

More Articles
Follows