கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நாசர்-ராதாரவி-விஷால் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

பிறகு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்,செயலாளர்கள் கதிரேசன், S.S. துரைராஜ், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் விக்ரமன், நடிகர் நடிகைகள் சுஹாசினி, ரேவதி, லிஸி, சரண்யா பொன்வண்ணன், குஷ்பூ, ஷீலா, காஞ்சனா, அம்பிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஸ்ரீப்ரியா, விக்ரம் பிரபு, ராதாரவி, குட்டிபத்மினி, ஜீவா, கணேஷ், ஆர்த்தி, மற்றும் அனைத்து சங்கங்களைச் சார்ந்தவர்களும் மறைந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நாசர் பேசும்போது…

ஒரு தனி மனிதரின் ஒரு தலைமுறை முடிந்திருக்கிறது, ஒரு சகாப்தம் முடிந்திருகிறது, தொண்ணுறு ஆண்டுகளிலேயே இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தது போல் செயல்கள் செய்திருக்கிறார்.

பாடம் நடத்தியிருக்கிறார் என்பதை விட, பாடமாக இருந்திருக்கிறார் என்பதே பொருந்தும். சினிமா இந்தளவுக்கு தழைத்திருகிறது என்றால் அதற்கு கலைஞர் அவர்கள் தான் காரணம். இவ்வாறு பேசினார்.

எஸ்.பி.முத்துராமன் பேசும்போது,

அதுபோல இந்த காலத்தில் கலைஞர் வசனம் என்று பெயர் போட்டால் தான் படம் பார்க்கவே வருவார்கள்.
இறுதி காலத்தில் ராமானுஜர் அவர்களுக்கும் வசனம் எழுதினார்கள், கலை, பத்திரிக்கை, அரசியல், சினிமா மற்றும் எழுத்து போன்ற ஐந்து துறைகளிலும் ஜொலித்தவர் கலைஞர் என்று கூறினார்.

விஷால் பேசும்போது,

மாமனிதருக்கு மரியாதை செய்ய வேண்டியது நமது கடமை. பொது வாழ்க்கை, சினிமா, அரசியல், போன்ற எதுவாக இருந்தாலும், கலைஞர் அவர்களை மறக்க முடியாது.

இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொண்டு வந்த முதல் தலைவர் கலைஞர் என்று புகழாரம் சூட்டினார். அவரைப் பற்றி பேச வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

ராதாரவி பேசும்போது,

கலைஞர் என்ற பட்டப் பெயர் கொடுத்ததே எனது தந்தை எம்.ஆர்.ராதா அவர்கள் தான் என்பதை பெருமையுடன் கூறிகொள்கிறேன்.

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எல்லோரிடமும் பேசக்கூடிய ஒரு தலைவர். ஐம்பது ஆண்டு காலம் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து தமிழ் மொழி, கலாச்சாரம், தமிழர்கள் இவையாவும் இருக்கும் வரை கலைஞர் இறக்க மாட்டார் என்றார்.

அனைத்து சங்கங்களைச் சார்ந்தவர்களும் மறைந்த மாண்புமிகு கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இடம் காமராஜர் அரங்கம்,சென்னை

Nassar Radharavi and Vishal speech Kalaignar Karunanidhi Memorial Gathering by FEFSI

அதிமுக விழாவில் கருணாநிதி படம்; ரஜினி கோரிக்கையை முதல்வர் ஏற்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி தமிழ் திரையுலகம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் கலந்துக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது…

கலைஞர் அவர்களால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் தொண்டர்கள், முழுமையாக அரசியலுக்கு வந்தவர்கள் பல ஆயிரம் பேர்கள், அவரால் தலைவரானவர்கள் பல நூறு பேர்கள்.

யாரும் தவறாகக் கொள்ளக் கூடாது, அ.தி.மு.க. வின் ஆண்டு விழா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் புகைப்படம் வைக்கப்படுகிறது, பக்கத்திலேயே கலைஞர் புகைப்படமும் வைக்க வேண்டும்.

அ.தி.மு.க. உருவானதே கலைஞரால் தான். அவர் கட்சியில் இருந்து தூக்கப்பட்டார்.

அதற்கு பின்னால் யார் யார் இருந்தார்கள், யார் யாருடைய சூழ்ச்சி இருந்தது என்பது வரலாறு தெரிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.” என்று பேசினார்.

இந்த தற்போது ஆளும் அதிமுக அரசு ஏற்றுக் கொள்ளுமா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதை ஏற்பாரா? என்பதை பார்ப்போம்.

Karunanidhi Photo to be placed at ADMK Annual celebration Rajini request to CM

கலைஞரை பார்க்க வராத தமிழக மக்கள் மீது ரஜினி கோபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் ரஜினிகாந்த் பேசும்போது….

தமிழ் சினிமாவில் கலைஞரின் பயணம் பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை.

தமிழகத்தின் இரண்டு பெரிய இமயங்களை உருவாக்கியவர் கலைஞர். நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை ஸ்டாராக்கியது மலைக்கள்ளன் படத்தில், சிவாஜி கணேசனை ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியதும் கலைஞர் தான்.

கலைஞர் மறைந்தார் என்ற செய்தி கேட்டவுடனே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவருடன் நான் கழித்த நேரங்கள் என் நினைவில் வந்துகொண்டே இருந்தது. டிவியில் பார்த்தேன் மக்கள் கூட்டம், இருந்தாலும் பரவாயில்லை என்று சென்றேன்.

ஆனால் என்னால் பார்க்கமுடியாமல் திரும்பி வந்துவிட்டேன். மீண்டும் அதிகாலையிலேயே காலையில் சென்றேன்.

பல ஆயிரம் கூட்டங்கள் மட்டுமே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். எங்கே அவரது உடன் பிறப்புகள், அவர்களுக்காக எவ்ளோ உழைத்திருக்கிறார்.

தமிழக மக்கள் மீது கோபம் வந்தது. ஆனால் அதன் பிறகு அலை அலையாய் கட்டுகடங்காத கூட்டத்தைப் பார்த்து வியந்தேன். தமிழக மக்கள் என்றுமே நன்றி மறவாதவர்கள்.” என உருக்கமாக பேசினார்.

Rajini angry on Tamilnadu Peoples for less crowd at Karunanidhi funeral

 

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.; மீண்டும் ஜெயா அரசுக்கு எதிராக ரஜினி வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை, காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

அதில் கருணாநிதியின் மகனும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.

அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது….

கலைஞர் இல்லாத நாட்டை என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. தமிழ்நாடு பெரிய அடையாளத்தை இழந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு பெரிய விழா என்றால் இனி யாரை அழைப்பார்கள் என்று தெரியவில்லை.

தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் பெரிய மனிதர் என்று யாரை சந்திக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

மேலும், நாற்பத்தைந்து வயதில் ஒரு கட்சிப் பொறுப்பை ஏற்று எத்தனை சோதனைகள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை துரோகங்கள், எல்லாவற்றையும் தாண்டி கழகத்தை கட்டிக் காப்பாற்றி ஐம்பது ஆண்டு காலங்கள் தலைமை தாங்கிய பெருமை தலைவர் கலைஞர் அவர்களுக்கு உண்டு.

ஐம்பது ஆண்டுகளில் அரசியலில் தன்னந்தனியாக மேடையில் நின்று அரசியல் களத்தில் யாராவது வந்தால் என்னோடு நட்புகொள் அல்லது என்னை எதிர்கொள் அப்போதுதான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்று அரசியல் சதுரங்கத்தில் தாளங்கள் போட்டு புகுந்து விளையாடியவர் கலைஞர்.

அத்தனை வஞ்சனைகளையும் தாண்டி தன் உடன்பிறப்புகளுக்காக வாழ்ந்தார். அவர் அரசியல் பயணங்களைப் பற்றி பேச இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள் வரும்.

இலக்கியம் பார்த்தால் அதில் அவர் செய்யாத சாதனை இல்லை. இருட்டில் இருந்த சரித்திர நாயகர்கள் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர்கள், சிற்றரசர்கள், போன்ற வெளிச்சம் படாத வீரர்களையெல்லாம் தன் சொல்லாலும், எழுத்தாலும், பாமரர் முதல் பண்டிதர் வரை கொண்டுபோய் சேர்த்தவர் கலைஞர்.

பதவியில் இல்லை, வயது முதிர்வு, ஆனாலும் முப்படை வீரர்களும் தகுந்த மரியாதைக் கொடுத்தார்கள்.

இருப்பினும் ஒரு குறை எனக்கு, அண்டை மாநில முதலமைச்சர்கள், அத்தனை தலைவர்கள் இருக்கும்போது தமிழ்நாட்டு முதல்வர் இருக்க வேண்டாமா? மந்திரி சபையே இருக்க வேண்டாமா? இதைப் பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்.

நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா? ஜெயலிதாவா? இருப்பினும் அவருக்கு மெரினாவில் மேல்முறையிட்டுக்கு போகாமல் இடம் கொடுத்தது ஆறுதல். ஸ்டாலின் குழந்தைப் போல் கண்ணீர் வடித்தது பார்த்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கவலை வேண்டாம். அந்த மாமனிதரின் ஆத்மா உங்களுக்கு வழிகாட்டும். அவருடன் நிறைய நாட்கள் செலவழித்திருக்கிறேன், நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்பதில் மகிழ்ச்சி.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

25 வருடங்களுக்கு முன்பு “பாட்ஷா” பட வெற்றி விழாவில் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழ்நாட்டை காப்பாத்த முடியாது என வாய்ஸ் கொடுத்தவர் ரஜினி.

அப்போதைய தேர்தலில் அதிமுக படு தோல்வியை தழுவியது.

தற்போது மீண்டும் மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிராக ரஜினி தன் வாய்ஸை உயர்த்திருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Again Rajini voice against ADMK Government at Kalaignar memorial gathering

*ஓடு ராஜா ஓடு* படத்திற்காக தெருத் தெருவாக ஓடிய நடிகர் சங்க தலைவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள படம் ஓடு ராஜா ஓடு.

இப்படத்தில் ஜோக்கர் படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த குருசோமசுந்தரம் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் நாசர், ‘லென்ஸ்’ அனந்த்சாமி, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் செட்டப் பாக்ஸ் பிரச்சினையை சொல்வதுடன் சமூக விழப்புணர்வை ஏற்படுத்தும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிடி. செல்வகுமார் பெற்றுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது விழா மேடையில் நடிகர் நாசர் பேசும்போது தன் பட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.

“இப்போது சினிமாவுக்கு வரும் இயக்குநர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் வித்தியாசமான படங்கள் நிறைய வருகின்றன.

எல்லாப் படத்திற்கும் நாம் முழு உழைப்பையும் தந்துவிட மாட்டோம். ஒருசில படங்கள் மட்டுமே நாம் ஈடுபாட்டுடன் நடிக்கும் வகையில் இருக்கும். அந்தவகையில் இப்படத்தில் நான் அதிக ஈடுபாட்டுடன் நடித்தேன்.

படத்தலைப்பைப் போலவே, படப்பிடிப்பில் பல நாட்கள் நானும் தெருத்தெருவாக ஓடினேன்.

இலவசமாக எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஓடினோம்” என நாசர் பேசினார்.

கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய விக்ரம் மகன் துருவ் மீது 3 வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் விடிய விடிய பார்ட்டி நடத்தி முடித்துவிட்டு நடிகர்கள் அதிகாலையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது வாடிக்கையாகி விட்டது.

அதுபோன்ற சம்பவம் தற்போது மீண்டும் நிகழ்ந்துள்ளது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ், தமது நண்பர்களுடன் சென்னை மந்தைவெளியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு அதிகாலை 4 மணியளவில் ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் சுசுகி பலேனோ காரை ஓட்டிக் கொண்டு, ஆர்.கே. சாலை நோக்கி சென்றுள்ளார்.

அப்போது, அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படும் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற ஆட்டோ ஒன்றின் மீது மோதியதுள்ளது.

இதில், போஸ்டர் ஒட்டும் பணியை முடித்துவிட்டு, தமது ஆட்டோவில் அமர்ந்திருந்த ஓட்டுநர் காமேஷ் படுகாயமடைந்தார்.

ஆட்டோ மீது மோதியும், வண்டியை நிறுத்தாமல் டிடிகே சாலையில் இருந்த முர்ரேஷ் கேட் சாலையில் அதே வேகத்தோடு துருவ் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வீட்டருகே உள்ள பிளாட்பார்மில் மோதிய கார், பள்ளத்தில் சிக்கியதை அடுத்து நகர்த்த முடியாமல் நின்று போனது.

இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தினர். விக்ரமின் மகன் துருவ் விபத்தை ஏற்படுத்திவிட்டு வந்தது தெரியவந்ததையடுத்து, வழக்கை அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றினர்.

இதையடுத்து, துருவ் மீது அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், விபத்து மூலம் கொடிய காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ், அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் அவரை கைது செய்து பின் காவல்நிலைய பிணையில் விடுவித்தனர். துருவ் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் காமேஷின் தலை, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டதால் அவர் ஆம்புலன்ஸ் மூலம், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

More Articles
Follows