தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இது குறித்து நடிகர் சங்கம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
.
“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி ‘ஸ்டெர்லைட் ஆலை’யை மூட வலியுறுத்தியும் மற்றும் ‘காவிரி மேலாண்மை வாரியம் ‘ மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.
இந்த கண்டன அறவழி போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம். ” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.
# தென்னிந்திய நடிகர் சங்கம்
Nadigar Sangam protest for Sterlite and Cauvery Management Board issue
Note: நடிகர் சங்கத்தின் கண்டன அறவழி போராட்டம் நடத்த 8.4.18 ஞாயிறு அன்று காலை 9மணி முதல் 6மணி தான் போலீஸ் அனுமதி கோரப்பட்டது. அதற்கு காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை தான் போலீஸ் அனுமதி கிடைக்க பெற்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.