விஜய்-சூர்யாவை தொடர்ந்து டாப் ஹீரோவுடன் கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமாவிலும் கீர்த்தியின் மார்கெட் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

விஜய்யுடன் தற்போது நடித்து வரும் இவர், விரைவில் முத்தையா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் நான் ஈ புகழ் நானியுடன் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நேனு லோக்கல் என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

நானி மற்றும் கீர்த்தி ஆகிய இருவருக்கும் தமிழகத்திலும் நல்ல மார்கெட் உள்ளதால் இப்படம் தமிழிலும் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

கவர்னர் கிரண் பேடியை லதா ரஜினிகாந்த் சந்தித்தது ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுவை மாநிலத்தின் கவர்னராக பொறுப்பேற்றது முதல் அம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கிரண்பேடி.

புதுவை மாநிலத்தின் நல்லெண்ணத் தூதராக நடிகர் ரஜினிகாந்தை நியமிக்க வேண்டும் என கிரண்பேடி தனது விருப்பத்தை பலமுறை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கிரண்பேடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை தெரிவிக்க இல்லையென்றாலும் நல்லெண்ண தூதராக ரஜினி பதவி ஏற்பது பற்றி அவர்கள் பேசியிருப்பார்கள் என கூறப்படுகிறது.

இச்சந்திப்பின் புகைப்படங்களை வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் கிரண்பேடி என்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலில் ‘வித் அவுட்’டில் பயணித்த நடிகர் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2016 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்நாடு பிரிமீயர் லீக்’ கிரிக்கெட் போட்டி’ விரைவில் நடைபெறவுள்ளது.

இதில் ஒரு அணியான ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணியின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரேந்தர் சேவாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த அணியின் இயக்குனர் தயாநிதி அழகிரி, ‘மதுரை மைக்கல்’ சிலம்பரசன், அனிருத், அணியின் உரிமையாளர் ரபிஃக், இந்திய அணியின் முன்னாள் வீரர் எல். சிவராமகிருஷ்ணன், ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணியின் பாடலை இசையமைத்த இசையமைப்பாளர் தமன், அப்பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதில் சிம்பு பேசியதாவது…

“ரயில் பயணத்தில் ‘வித் அவுட்’ என்னும் ஒன்று இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்தியதே கிரிக்கெட் தான்.

மாநில அளவில் நான் பங்கேற்க இருக்கும் கிரிக்கெட் போட்டிக்காக, ரயிலில் பயணச்சீட்டு கூட இல்லாமல் நான் பயணித்து இருக்கிறேன்.

அந்த அளவிற்கு கிரிக்கெட் மீது எனக்கு எல்லையற்ற ஈர்ப்பு உண்டு.

கிரிக்கெட் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் சாருடன் நான் இந்த மேடையில் நிற்பேன் என்று சிறிதளவும் எதிர்பார்க்கவில்லை.

இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய நண்பர் தயாநிதிக்கு நன்றி.

‘ஆட்டைக்கு ரெடியாக இருக்கும் ‘மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்’ அணி என்றுமே “சிறப்பு” என்று பேசினார் சிம்பு.

பஞ்ச தந்திரம் பார்ட் 2; பிள்ளையார் சுழிபோட்ட கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நான் ஈ’ புகழ் சுதீப் நடித்து நாளை வெளியாகவுள்ள முடிஞ்சா இவன புடி படத்தை கேஎஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது.

இதற்கான கதை கருவுக்கு பிள்ளையார் சுழி போட்டதே கமல்ஹாசன் தானாம்.

முதல் பாகத்தில் நடித்த ஐந்து மனைவிகளை அவர்களின் கணவன்மார்கள் பொய் சொல்லி ஏமாற்றியிருப்பார்கள்.

எனவே இந்த பாகத்தில் ஏமாற்றிய கணவன்களை மனைவிகள் பழிவாங்குவது போல் கதையமைக்குமாறு கே.எஸ்.ஆரிடம் சொல்லியிருக்கிறாராம் கமல்.

எனவே விரைவில் நாம் எப்பொழுதும் சிரித்து மகிழ அடுத்த படம் ரெடியாகிவிடும்.

சௌந்தர்யா ரஜினியின் அடுத்த படம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் முதல் மோசன் கேப்சரிங் படமாக கோச்சடையான் உருவாகியது. 2014ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், நாகேஷ் நடித்த இப்படத்தை ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கியிருந்தார்.

தற்போது தனது அடுத்த படத்தை எடுக்க தயாராகிவிட்டராம்.

இப்படம் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதன் ஸ்கிரிப்ட் பணிகள் முடிவடைந்து விட்டதால், விரைவில் படத்தில் பணியாற்றவுள்ள கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

‘லிங்கா’ வலையில் மாட்டிக் கொண்ட ‘முடிஞ்சா இவன புடி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேஎஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார்.

ராக்லைன் வெங்கடேஷின் நண்பரான சூரப்பா பாபு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி என்ற படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் லிங்கா தொடர்பான பிரச்சினையில் இப்படம் சிக்கிக் கொண்டுள்ளது.

லிங்காவின் நஷ்ட தொகையை மதனுக்கும் சிங்காரவேலனுக்கும் தரவேண்டிய பணத்தை என்னிடம் தாருங்கள்.

இல்லாவிட்டால் படத்தை வெளியிடவிடமாட்டோம், என்று பிலிம்சேம்பர் செயலாளர்களில் ஒருவரான அருள்பதி மிரட்டுவதாக தயாரிப்பாளர் சூரப்ப பாபு நேற்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் ‘எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்க அருள்பதி யார்?’ என்று சென்னை விருகம்பாகம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் சிங்காரவேலன்.

மேலும் இது தொடர்பாக அருள்பதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார் சிங்காரவேலன்.

காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள அம்மனுவின் புகைப்படம் இதோ….

More Articles
Follows