“ஹீரோ” படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பற்றி பேசும்போது படக்குழு மொத்தமும் திவீர ரசிக மனப்பான்மைக்கு போய்விடுகின்றனர். அனைவருமே அவரின் இசைக்கு மயங்கி அவரது பின்னணி இசையையும், பாடல்களையும் வானளாவ புகழ்கின்றனர். ஆனால் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவோ இதற்கு நேர்மாறாக கூறுகிறார். எனது இசை படத்திற்கு மிகப்பெரும் பலமென மொத்த படக்குழுவும் கூறுகிறார்கள் ஆனால் அது முற்றிலும் உண்மையில்லை. படம் உருவாகி வந்திருக்கும் விதத்தை கண்டு நான் பிரமித்துபோய்விட்டேன். படத்தின் ஒவ்வொரு துளியிலும், பங்கேற்றிருக்கும் அத்தனை உறுப்பினர்களும், தங்கள் உடலாலும் ஆத்மாவாலும் முழு உழைப்பை தந்து ஒரு மிகப்பெரும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். என்னிடம் கதை சொன்னபோது இருந்ததை விட இப்போது மிகப்பிரமாண்டமான முறையில் இப்படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் எனக்கு வேறு வழியே இல்லை நான் எனது மிகச்சிறந்த உழைப்பை தரவேண்டிய நிலைக்கு உந்தப்பட்டேன். PS மித்ரன் படத்தில் இசைக்கு உருவாக்கி தந்திருக்கும் வெளி என்னை பல புதிய முயற்சிகளுக்கு இட்டுச்சென்றது. முற்றிலும் புதிதான சில இசைக் கோர்வையை இதில் முயன்றிருக்கிறேன். அதில் ஒன்று 18 நிமிட நீண்ட காட்சியின் பின்னணி இசைக்கோர்வை ஆகும். அந்த காட்சியின் பின்னணி கோர்வை ரெக்கார்டிங்கில் எங்கள் குழுவில் மொத்தப்பேரும் கடும் உழைப்பை தந்திருக்கிறார்கள் இது ஒரு பெரும் சவலான பணியாக இருந்தது. இசை வெளியீட்டிலேயே இதனை நான் கூறியிருந்தாலும் மீண்டும் மீண்டும் கூறுவதில் எனக்கு மகிழ்ச்சியே. மிக சமீபத்தில் எனக்கு பெரிதும் மனநிறைவை தந்த படமாக “ஹீரோ” இருந்தது.
மேலும் அவர் படம் பற்றி கூறும்பொழுது…
சமூகத்தில் இந்த தருணத்திற்கு தகுந்த செய்தியை அழுத்தி சொல்லும் படமாக ஹீரோ இருக்கிறது. படக்குழு அதை சரியாகவும், நேர்த்தியான படைப்பாகவும் தந்திருக்கிறார்கள். பொன்மொழி ஒன்று இருக்கிறது. “ஹீரோக்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்” என்று, என்னைப் பொறுத்தவரை இந்த “ஹீரோ” திரைப்படம் “ஹீரோக்கள் பிறப்பதில்லை சூழ்நிலைகளே அவர்களை உருவாக்குகிறது” என்பதை சொல்லும். படத்தை பார்க்கும் போது பார்வையாளர்களும் அதனை உணர்வார்கள் மேலும் படம் அவர்களை ஒரு நீண்ட சிந்தனைக்கு இட்டு செல்வதாகவும் இருக்கும். மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜீன் சார், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா மற்றும் நடித்துள்ள அனைவரும் மிகச்சிறந்த பங்களிப்பை தந்துள்ளார்கள். தயாரிப்பாளர் கோட்டாப்பாடி J ராஜேஷ் இல்லையென்றால் இப்படம் இவ்வளவு பிரமாண்டமாக உருவாகியிருக்க முடியாது. அவரால் தான் இப்படம் மிகப்பெரிய அளவில் மார்கெட்டிங் செய்யப்பட்டு பிரமாண்டமான முறையில் வெளியிடப்படுகிறது.
2019 டிசம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் “ஹீரோ” திரைப்படத்தை கோட்டப்பாடி J ராஜேஸ், KJR Studios சார்பில் தயாரித்துள்ளார். PS மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் இயக்கத்தில் நடிக்க ஆசை – கல்யாணி ப்ரியதர்ஷன் !
வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பொன்னான வாய்ப்பு தனக்கு கிடைத்ததில் கல்யாணி ப்ரியதர்ஷன் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளார். அவரது தமிழ் சினிமா அறிமுகம் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் “ஹீரோ” திரைப்படம் மூலம் இந்த வாரம் அரங்கேறுகிறது. “ஹீரோ” டிசம்பர் 20, 2019 அன்று வெளியாகிறது.
டிரெய்லரில் மிகச் சிறு காட்சிகளிலே அவர் காட்டப்பட்டிருந்தாலும் அவரது அழகும், துள்ளல் உடல்மொழியும் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. “ஹீரோ” படத்தில் அவரது கதாப்பாத்திரம் குறித்து கூறும்போது…
நான் ‘மீரா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ‘மீரா’ மிகவும் முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண். எதையும் பேசவும், செய்யவும் முன் பலமுறை யோசித்து செய்யும் பெண். நிஜ வாழ்வில் அதற்கு நேரெதிரானவள் நான். துடுக்குத்தனத்துடன் நினைத்ததை அப்படியே உளறி விடுவேன் எனக் கூறிச் சிரிக்கிறார்.
மேலும் படத்தின் மையம் கல்வி நிலையை பற்றி பேசுவதை குறித்து கூறும்போது…
நான் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் படித்தவள் இரண்டு இடங்களிலும் கல்வி சொல்லித்தரப்படும் முறையை அறிந்தவள். அந்த வகையில் “ஹீரோ” இன்றைய இந்தியாவின் கல்வி நிலையை அழுத்தமாக அலசும் படைப்பாக, எது சரியானதென்பதை வலியுறுத்தும் படைப்பாக இருக்கும். மேலும் ரசிகர்களை நம் நாட்டின் கல்வி நிலை குறித்த நீண்ட சிந்தனைக்கு இப்படம் இட்டு செல்லும் என்றார்.
“ஹீரோ” படக்குழுவினருடன் பணியாற்றியது குறித்து கூறும்போது….
இயக்குநர் PS மித்ரன் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்துவதில் பெரும் திறமைக்காரராக இருக்கிறார். ஒவ்வொரு சிறு காதாப்பாத்திரத்தையும் கச்சிதமாக படைத்திருக்கிறார். நான் சொல்வதை விட படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் அவரை பெரிய அளவில் கொண்டாடுவார்கள். சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனம் கொண்ட மனிதர் படப்பிடிப்பில் உள்ள ஒவ்வொருவரையும் அன்பாக பார்த்து கொள்வார். ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் அவரிடம் ஒரு திறமையான இயக்குநர் மறைந்திருக்கிறார். ஒரு நாள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். “ஹீரோ” படத்தின் பின்னால் மறைந்திருக்கும் “சூப்பர் ஹீரோக்கள்” பற்றி இசை விழாவிலேயே பேசியிருக்கிறேன். உணர்வை சில்லிடவைக்கும் யுவன் சங்கர் ராஜாவின் இசை, ஜார்ஜ் C வில்லியம்சின் கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு என, இத்தனை சரித்திர நாயகர்கள் ஒன்றிணைந்திருக்கும் படத்தில், நான் நடித்திருப்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. என் மேல் நம்பிக்கை வைத்து என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு தயாரிப்பாளர் ராஜேஷ் சாருக்கு நன்றி. இப்படத்தின் மீதான அவரது நம்பிக்கை அசாதாரணமானது. படத்தை இத்தனை பிரமாண்டமாக உருவாக்கியதாகட்டும், இப்போது மிகப்பெரிய அளவில் வெளியிடுவதாகட்டும் அவருக்கு நிகர் அவரே என்றார்.
2019 டிசம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் “ஹீரோ” திரைப்படத்தை கோட்டப்பாடி J ராஜேஸ், KJR Studios சார்பில் தயாரித்துள்ளார். PS மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய, திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி , இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் ‘கடைசி விவசாயி’
நாயகர்களை நம்பி ஓடிக் கொண்டிருந்த திரையுலகில், சின்ன பசங்களையும் நடிக்க வைத்து ஹிட் கொடுக்க முடியும் என ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் நிரூபித்தவர் இயக்குநர் மணிகண்டன். அதனைத் தொடர்ச்சியாக ’குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ என கதையை மட்டுமே நம்பி பயணிப்பவர். ‘ஆண்டவன் கட்டளை’ படத்துக்குப் பிறகு, நீண்ட மாதங்களாகவே தன் அடுத்தப் படத்தில் பணிபுரிந்து வந்தார். ‘கடைசி விவசாயி’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் பிரதான கதாபாத்திரம். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். பல்வேறு திரையுலகினரும் இந்தப் படத்துக்காக காத்திருக்கிறேன் எனக் கூறியிருப்பதே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் மணிகண்டன், “விவசாயத்தை ஒரு தொழிலாக பார்க்காமல், ஒரு வாழ்வியலாக பார்க்க வேண்டும். அதில் எவ்வளவு பேர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், அது எப்படி இருக்கிறது என்பது தான் கதையின் கரு. ஒரு கிராமத்தில் நல்ல விஷயங்களே நடக்காமல் இருக்கிறது. குலதெய்வம் கும்பிடாமல் இருக்கிறது என்று அதை கும்பிட ஊர் தயாராகும். அதை கும்பிடும் வழிமுறைக்கு அனைவரும் ஒரு மரக்கா நெல் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தெரியவரும், அந்த ஊரில் யாரும் விவசாயம் செய்யவில்லை என்று. 20 வருடமாக குலதெய்வத்தை கும்பிடவில்லை என்பதால் யாருக்குமே இந்த நெல் விஷயம் ஞாபகத்தில் இருக்காது. அப்போது அந்த ஊரில் வயதான பெரியவர் ஒருவர், சின்ன நிலத்தில் தனக்கான விவசாயத்தை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார். 85 வயது மதிக்கத்தக்க பெரியவர், அவருக்கு காதும் அவ்வளவாக கேட்காது. அவர் உண்டு, தோட்டமுண்டு என்று இருப்பார். அந்த ஊரே அவரிடம் போய் நெல் கேட்கும். அவர் என்ன செய்கிறார், குலதெய்வக் கோயில் கும்பிடுவது எப்படி மாறியுள்ளது, வழிபாட்டு முறையில் நமக்கு இருக்கும் நம்பிக்கை என அனைத்தும் திரைக்கதையாக இருக்கும்.கிராமத்தில் ஒரு துக்கத்தைச் சொன்னால் கூட நையாண்டியாக சொல்வார்கள். ஆகையால் படத்தில் காமெடியை தவிர்க்கவே முடியாது. படம் முழுக்க காமெடி இருந்துக் கொண்டே இருக்கும். நாகரீகம் வளர்வதற்கு முன்னாள் இருந்த மனிதர்களும், நாகரீகத்தில் உச்சத்தில் இருக்கும் மனிதர்களும் வரும் போது எப்படி காமெடி இல்லாமல் இருக்கும். அதே போல், அந்த உரையாடல் நம்மை யோசிக்க வைக்கும் விதமாகவும் இருக்கும்.
உசிலம்பட்டியைச் சுற்றி சுமார் 16 கிராமங்களில் படமாக்கியிருக்கேன். அங்கிருக்கும் விவசாய முறை ரொம்ப பழசு. நம்ம தமிழர்களோட விவசாய முறையை இன்னும் கையில் வைத்திருப்பது கரிசல்காட்டு விவசாயிகள் தான். அவர்களை கடைசி விவசாயிகளாகத் தான் பார்க்கிறேன். இந்தப் படத்தின் தலைப்பைப் பார்த்து விவசாயம் முடிந்துவிடப் போகிறதோ என்று நினைத்துவிடாதீர்கள். கிராமத்தில் இருப்பவர்களையே நடிக்க வைத்துள்ளேன். நேரடி ஒலிப்பதிவு என்பதால் அவர்களுடைய குரலிலேயே முழுப்படமும் இருக்கும். விஜய் சேதுபதியும், யோகி பாபுவும் சின்ன கேரக்டர் பண்ணியிருக்காங்க. இருவரது கேரக்டருமே ரொம்ப அருமையாக வந்துருக்கு. ஏன் அவர்களை நடிக்க வைத்தேன் என்று படம் பார்த்தால் தெரியும்” என்று தெரிவித்தார்.
2020-ம் ஆண்டு ஜனவரி மாத வெளியீட்டுக்கு தயாராகி வரும் இந்தப் படத்துக்கு தன் இசையால் உயிரூட்டியிருக்கிறார் இளையராஜா. கலை இயக்குநராக தோட்டாதரணி பணிபுரிந்துள்ளார். படத்தின் களம் கிராமம் என்றாலும் அதில் நீதிமன்றம், கோவில் திருவிழா போன்ற பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கியுள்ளனர். மேலும், இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான அரங்குகளில் கூட நேரடி ஒலிப்பதிவிலேயே இந்தப் படம் உருவாகியுள்ளது.சினிமா ரசிகர்களுக்கு இந்த ‘கடைசி விவசாயி’ ஒரு விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
ரஜினி விஜய் அஜித் உள்ளிட்ட 22 டூப்ளிகேட் நடிகர்களின் ‘டம்மி ஜோக்கர்’
ரேடியண்ட் விஷ்வல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் கதையின் நாயகனாக நடித்து “டம்மி ஜோக்கர்” என்ற திகில் மற்றும் நகைச்சுவை படத்தை தயாரித்துள்ளார் செந்தில்குமார்.
மேலும் இதில் நம்மகுமார், ராஷ்மி, விஷ்வா, குட்டிப்புலி சரவண சக்தி, வைசாலி, தர்மா, தவசி, தஷ்மிகா, டி.எம்.சந்திரசேகர், சிவபாலன், தவமணி, குட்டி திரிஷா, திருப்பூர் சந்தானம், நந்துஸ்ரீ, தர்ஷன், மதுரை சாந்தி இன்னும் பலர் நடித்துள்ளனர்.
ஆலன் பிரகாஷ் இசையையும், திருப்பதி ஆர்.சாமி ஒளிப்பதிவையும், ஜி.வேணுகோபால், ராஜா இருவரும் பாடல்களையும், ராம் படத்தொகுப்பையும், ஜாய் மதி நடன பயிற்சியையும், கவனித்துள்ளனர்.
வினோ நாகராஜன் இதன் கதை எழுதி, திரைக்கதை அமைத்து, வசனம் எழுதி உள்ளார் ரேடியண்ட் விஷ்வல்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில்குமார் தயாரிக்கிறார்.
தமிழ் சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிவாஜி கணேசன் நடித்த “பராசக்தி” படத்தை இயக்கிய கிருஷ்ணன் – பஞ்சு, வெள்ளி விழா கொண்டாடிய “அன்னக்கிளி” படத்தை இயக்கிய தேவராஜ் – மோகன் நூறு நாட்கள் ஓடிய ” பன்னீர் புஷ்பங்கள் ” படத்தை இயக்கிய பாரதி – வாசு, “உல்லாசம் “படத்தை இயக்கிய கேடி – ஜெர்ரி , ” விக்ரம் வேதா ” படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி வரிசையில் இரட்டை இயக்குனர்களாக வினோநாகராஜன் _ என். கல்யாணசுந்தரம் இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கி உள்ளார்கள்.
படத்தை பற்றி இயக்குனர்கள் இருவரும் பேசியதாவது…
” 22 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தந்தையை தேடி அந்த கிராமத்திற்கு வருகிறான். அவனுக்கு அந்த ஊரில் கதாநாயகனும் நண்பர்களும் உதவி புரிவதாக கூறுகிறார்கள். ஊர் முழுக்க விசாரிக்கையில் பேய் பங்களாவை காட்டுகின்றனர் ஊர் மக்கள்.
மேலும் அந்த பங்களாவினுள் தங்க புதையல் இருப்பதாகவும் அதனுள் தான் இவன் தந்தை சென்றதாகவும் சொல்கிறார்கள்.
அவனுக்கு அப்பா… நமக்கு புதையல் என்று கணக்கு பண்ணி அவனுக்கு உதவுவது போல் பங்களாவுக்குள் எல்லோரும் நுழைகின்றனர். இவர்கள் உள்ளே வந்ததும் கதவு மூடிக் கொள்கிறது.
எவ்வளவோ முயன்றும் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. அனைவரும் திகிலடைகின்றனர்.
அவன் தந்தையை கண்டுபிடித்தார்களா? புதையல் அவர்களுக்கு கிடைத்ததா? இப்படி செல்லும் கதை ஒரு கட்டத்தில் செம காமெடிக்கு மாறும். முன்னனியில் இருக்கிற பிரபலமான 22 நடிகர்கள் போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் நடிக்க வைத்துள்ளோம்.
அவர்கள் அடிக்கிற லூட்டி காமெடியின் உச்சகட்டமாக இருக்கும். காரைக்குடியிலும் அதனை சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் படமாக்கி உள்ளோம்” என்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை டிசம்பர் 18ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பாக்யராஜ், கலைப்புலி தானு, அபிராமி ராமநாதன் மற்றும் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
22 duplicate actors starring in Dummy Joker
டிசம்பர் 20ல் தம்பி & ஹீரோ படங்களுடன் மோதும் ‘கைலா’
தானா நாயுடு என்பவர் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் கைலா.
பிரபல நாயகி கௌசல்யா மற்றும் அன்பாலயா பிரபாகரன் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
பேய் மற்றும் பழிவாங்கல் கதை அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பாஸ்கர் சீனிவாசன் இயக்கி தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் லைகா என்ற கேரக்டரில் ஒரு சிறுமி நடித்துள்ளார்.
இந்த படத்தில் பல வருடங்கள் பூட்டப்பட்ட பங்களாவில், தங்கி ஆராய்ச்சி செய்பவராக நடித்துள்ளார் தானா.
அதாவது அங்கு நடக்கும் சில ஆமானுஷ்யமான சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதையாம்.
இந்த படத்தில் பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா,, செர்பியா, ஆதியா, சிசர்மனோகர் ரஞ்சன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
விஞ்ஞான பூர்வமான உருவாகப்பட்டுள்ள இந்த படம் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகவிருந்தது.
சில தள்ளிப்போன இந்த படம் இந்த வாரம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது.
இதேநாளில் தான் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்த தம்பி, மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ மற்றும் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்த தபங் 3 என்ற ஹிந்தி பட தமிழ் பதிப்பும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கைலா படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…
உலகம் முழுவதும் இன்று வரை பேய் என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது
தானாநாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக நடிக்கிறார்.
அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.
பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும் போது ஒரு பெண்ணாக நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதிலிருந்து மீண்டாரா என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம்.
இந்த பேபி கைலா பங்கேற்ற பாடல் காட்சி ஒன்றை வித்தியாசமாக படமாக்கினோம்.
ஐந்து லட்ச ரூபாய்க்கு பொம்மைகளை வாங்கி பாடல் காட்சியை படமாக்கினோம் என்றார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன். இவர் இண்டர்நேஷ்னல் கராத்தே பெடரேசன் அமைப்பபின் செலக்டிவ் குருப்பில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்பது கூடுதல் தகவல்.
Kayla movie clash with Hero and Thambi movies
ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி படம் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’
*புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ – ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம்*
‘அவனே ஸ்ரீமன்நாராயணா’ முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம்.
இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. புஷ்கர் பிலிம்ஸ்’ புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா தயாரித்த முதல் படம் ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’.
அதனைத் தொடர்ந்து, கன்னட திரையுலகில் சிறந்த திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு வல்லமைமிக்க சக்தியாகவும், புதிய சிந்தனைகளையும் தொழிட்நுட்ப யுக்திகளையும் கொண்டு அனைத்து வகை திரைப்படங்களையும் மொழி வேறுபாடுகளையும் கடந்து வெற்றிப் பெற செய்வதில் முனைப்புடன் செயல்படுபவராகவும் திகழ்கிறார்.
அவரது முதல் திரைப்படத்தை தொடர்ந்து அவர் தயாரித்த கிரீக் பார்ட்டி, ஹம்பிள் பாலிடீசியன் நோக்கராஜ், கதையொந்து ஷுருவாகிதே, ஜீர்ஜிம்பே ஆகிய அனைத்தும் மகத்தான வெற்றிப்படங்கள்.
குறிப்பாக கிரீக் பார்ட்டி கன்னட திரையுலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்த சில குறிப்பிட படங்களில் ஒன்று என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.
இப்படத்திற்கு கதை எழுதியிருப்பவர்கள் மிகச்சிறந்த செயல்திறம் படைத்தவர்களான ‘தி செவன் ஆட்ஸ்’ (The Seven Odds) எனும் குழு. இக்குழு ரக்ஷித் ஷெட்டி, சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், சச்சின் (இயக்குனர்), அனிருத்தா கோட்கி, அபிலாஷ் மற்றும் நாகார்ஜுன் (பாடலாசிரியர்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டது.
ஏழு பேரைக் கொண்ட இந்த குழு, பல அருமையான கதைகளை எழுதி, பிரமிக்கத்தக்க திரைப்படமாக உருவாக்கி, அதை வெற்றிப்படங்களாக உயர்த்துவதில் சாதனைப் படைத்து வருகிறது.
இப்படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி ஒரு நகைச்சுவை காவலராக நடிக்க, அவருடன் இணைந்து ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார்.
இப்படத்தில் அவர் ஒரு கொடூரமான வழிப்பறித் திருட்டு கூட்டத்தையும், ஒரு தந்திரமான அரசியல்வாதியையும் சமாளித்து எப்படி அந்த மர்மத்தை தீர்த்து வைக்கிறார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ரசிக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள்.
ரக்ஷித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஷான்வி நுட்பமாக காதலை வெளிப்படுத்தும் நாயகியாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.
முக்கிய வேடங்களில் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோருடன் இணைந்து ரக்ஷித், சான்வி ஸ்ரீவஸ்தவா சிறப்பாக நடித்துள்ளனர்.
கரம் சாவ்லா ஒளிப்பதிவில், உல்லாஸ் ஹைதூர் கலை வண்ணத்தில் பிரமிப்பூட்டும், பிரம்ம்மண்டமான செட்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அமராவதி நகரை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
இப்படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பாளரான அருந்ததி அஞ்சனப்பா, 1980-களில் நிலவி வந்த பேஷன் குறித்த தனது விரிவான ஆராய்ச்சிகளின் விளைவாக அவரது உழைப்பு வெகுவான பாராட்டுதலை பெற்றிருப்பதோடு, படத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது. அஜநீஷ் லோக்நாத் பின்னணி மற்றும் இரண்டு பாடல்களுக்கு இசை அமைக்க, இப்படத்தின் வேறு இரண்டு பாடல்களுக்கு சரண்ராஜ் இசையமைத்திருக்கிறார்.
‘ரங்கஸ்தலம்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற எம் ஆர் ராஜாகிருஷ்ணன் இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்திருக்கிறார்.
இயக்குனர் சச்சின் இப்படத்தின் இயக்கம், படத்தொகுப்பு, மற்றும் விஎப்எக்ஸ் சிறப்பு காட்சி அமைப்புகள் என மூன்று பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றி இருக்கிறார்.
புஷ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா’, சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் மற்றும் சான்வி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், ஐந்து மொழிகளில் உலகெங்கும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
Fantasy Adventure Comedy movie Avane Srimannarayana
நடிகர்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்கள்:
ரக்ஷித் ஷெட்டி ஷான்வி ஸ்ரீவஸ்தவா பாலாஜி மனோகர் பிரமோத் ஷெட்டி மதுசூதன் ராவ் அச்யுத் குமார் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே மற்றும் பலர் தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா கதை: தி செவன் ஆட்ஸ் (The Seven Odds) ஒளிப்பதிவு: கரம் சாவ்லா இசை: அஜநீஷ் லோக்நாத் & சரண்ராஜ் கலை: உல்லாஸ் ஹைதூர் நடனம்: இம்ரான் சர்தாரியா சண்டைபயிற்சி: விக்ரம் மூர் ஆடை வடிவமைப்பு: அருந்ததி அஞ்சனப்பா வி எப் எக்ஸ், படத்தொகுப்பு மற்றும் இயக்கம்: சச்சின்