தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
“திரை இசையை பொறுத்தவரை இசையமைப்பாளர்களை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். முதல் வகையில், சில திரைப்படங்கள் மொத்த படப்பிடிப்பும் முடிந்த பிறகு, பின்னணி இசை கோர்ப்பில் இசையமைப்பாளர்களின் மாயாஜாலத்தால் படத்தை மேலும் மெறுகேற்ற அவர்களை சார்ந்திருப்பார்கள். இன்னொரு பிரிவில், படக்குழுவில் உள்ள மற்றவர்களின் உழைப்போடு போட்டி போட்டு தங்களை நிரூபிக்க இசையமைப்பாளர்கள் சிறப்பான இசையை வழங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். சீமராஜா இதில் இரண்டாவது வகையை சார்ந்தது. இந்த படத்தில் நடிகர்கள் முதல் அரங்க அமைப்பு, ஒளிப்பதிவு என அனைத்தும் என்னை வியக்க வைத்தது. நான் பின்னணி இசையமைப்பில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்காமல் போனால் நான் படத்தில் தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது. மேலும், சிவகார்த்திகேயன்-பொன்ராம் கூட்டணியில் சீமராஜா ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். அது தான் இசையில் மிகப்பெரிய விஷயங்களை செய்ய என்னை தூண்டியது” என்றார் டி.இமான்.
பாடல்கள் படமாக்கப்பட்டதை பற்றி அவர் கூறும்போது, “சகோதரர் சிவகார்த்திகேயன் உடன் பல படங்களில் பணியாற்றியதால் அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் உறுதியாக இருந்தேன். எனினும், நான் இறுதியாக பாடல்களை பார்த்தபோது, ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்தின் அழகான ஒளிப்பதிவு மற்றும் நடன இயக்குனர் ஷோபியின் சிறப்பான நடன அசைவுகள் என பாடலை மேலும் மெறுகேற்றியதாக உணர்ந்தேன்” என்றார்.
சீமராஜா காய்ச்சல் காட்டுத்தீ போல மிக வேகமாக பரவி வருகிறது. விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 13) அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தின் முன்பதிவு துவங்கி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வருகின்றன. 24AM ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சூரி, சிம்ரன், லால் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.