தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒலிப்பதிவு கூடத்தை, காலி செய்யும்படி, பிரசாத் நிர்வாகம், இளையராஜாவை கேட்ட நிலையில் இளையராஜா மறுக்கவே விவகாரம் கோர்ட் வரை சென்றது.
சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தன்னை வலுக்கட்டாயமாக பிரசாத் நிர்வாகம் வெளியேற்றியதாக புகார் கூறினார் இளையராஜா.
இதனையடுத்து பாரதிராஜா தலைமையில் திரைத்துறையினர் இளையராஜாவுக்கு ஆதரவாக புறப்பட்டு பிரசாத் ஸ்டூடீயோ சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் தன்னை ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இளையராஜா வழக்கு தொடுத்தார்.
இத்துடன் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் கேட்டார்.
இவ்வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இளையாராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் ஆஜராகினார்.
பிரசாத் ஸ்டுடியோ சார்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர்கள் இளம்பாரதி, அப்துல் சலிம் ஆகியோரும் ஆஜராகினர்.
இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ”இவ்வளவு ஆண்டுகள், இசை அமைத்த இடத்தில், ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவர் கைப்பட எழுதியுள்ள குறிப்புகள், இசை கருவிகள், பெற்ற விருதுகள், அங்கு தான் உள்ளன,” என தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி, ‘இளையராஜா அங்கு பல நாட்கள் இருந்துள்ளார். அவர் அங்கு சென்று தியானம் செய்வதால், உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட போகிறது” என கேட்டார்.
உடனே, வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இதுகுறித்து, நிர்வாகத்தினரிடம் பதில் பெற்று நீதிபதியுடம் தெரிவிப்பதாக கூறினார்.
இதனையடுத்து அடுத்த கட்ட விசாரணையை, வரும், திங்கட்கிழமை 21ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
Music Composer ilayaraja and Prasad Studio court case updates