சினிமா ஸ்டார்களுக்கு சவால் விடும் கிரிக்கெட் ஸ்டார் தோனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு சவால் விடும் வகையில் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம் எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படம் மாபெரும் சாதனை படைத்து வருகிறது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் தமிழிலும் வெளியானது.

என்னதான் தமிழில் டப் செய்யப்பட்டு இருந்தாலும், இந்தி படங்கள் தமிழகத்தில் ஓடாது என சிலர் நினைத்திருந்தனர்.

ஆனால் அவர்களின் நினைப்பை தூள் தூளாக்கி சிக்ஸர் அடித்து வருகிறார் இந்த தோனி.

தமிழகத்தில் மட்டும் 205 அரங்குகளில் தமிழ் பதிப்பையும் 27 அரங்குகளில் இந்தி பதிப்பையும் திரையிட்டனர்.

இந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 7 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

மேலும் இதுவரை உலகளவில் ரூ. 66 கோடி வசூலை எட்டியுள்ளதாம்.

விரைவில் இப்படமும் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்து விடும் என கூறப்படுகிறது.

‘படையப்பா’வுடன் கனெக்ஷன் ஆகும் சிம்பு-தனுஷ் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் படையப்பா.

ஒரு மிகப்பெரிய ஸ்டாரான ரஜினியே தனக்கு எதிராக ஒரு நீலாம்பரி என்ற பெண் கேரக்டரை எப்படி கொண்டு வந்தார்? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது.

ரம்யா கிருஷ்ணனும் அப்படியொரு பவர்புல் பெர்மான்ஸை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது திரைக்கு வரத் தயாராகியுள்ள தனுஷின் கொடி படத்திலும் த்ரிஷா கேரக்டரும் அப்படியானதுதானாம்.

இக்கேரக்டருக்கு ருத்ரா என்று பெயரிட்டுள்ளனர்.

அதுபோல், சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் உள்ள அஸ்வின் தாத்தா கேரக்டர் படையப்பா ஸ்டைலில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டைரக்டர்களை தேர்வு செய்வதில் அஜித்துக்கே குழப்பம் வரலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் தல 57 படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இதனையடுத்து, அவர் யார் படத்தில் நடிப்பார் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இதனிடையில் சுந்தர் சியின் அரண்மணை படத்தை தயாரித்த விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் அஜித்தை சந்தித்து கால்ஷீட் கேட்டுள்ளதாம்.

இதற்கு அஜித்தும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையில் அஜித்துக்காக ஒரு கதையுடன் ஷங்கர் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஷங்கர், முருகதாஸ் இருவரும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்கள். எனவே யாருக்கு கால்ஷீட் கொடுப்பது என அஜித்திற்கே நிச்சயம் குழப்பம் வரலாம்.

மீண்டும் வெங்கட் பிரபு-பிரேம்ஜியுடன் கைகோர்க்கும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு தன் சொந்த பேனரில் தயாரித்து இயக்கியுள்ள படம் சென்னை 28 பார்ட் 2.

முதல் பாகத்தில் நடித்த ஜெய், பிரேம்ஜி, மிர்ச்சி சிவா உள்ளிட்ட கலைஞர்களுடன் இரண்டாம் பாகத்தில் நிறைய கலைஞர்களை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை வருகிற அக்டோபர் 7ஆம் தேதி மாலை 7 மணிக்கு மலேசியாவில் வெளியிட இருக்கிறார்களாம்.

இதனை சூர்யா வெளியிட ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மாசு என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் இணைந்து பணியாற்றியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விஷாலுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுராஜின் கத்தி சண்டை படத்தை தொடர்ந்து, மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்கிறார் விஷால்.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.

இதனையடுத்து லிங்குசாமி இயக்கவுள்ள சண்டக்கோழி 2 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஷால்.

இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜீன் நடிக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷ்தான் நாயகியாக நடிக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்திர கோபை என்ற புதுமையான பெயரில் படமாகும் உண்மை சம்பவம்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இந்திர கோபை’… இந்த புதுமையான பெயரைப் போலவே ஒரு வித்தியாசமான படமும் உருவாகி வருகிறது.

‘இந்திர கோபை என்றால் எத்தனை முறை அழித்தாலும் ஒரு வகையான பூச்சி மண்ணில் உருவாகி கொண்டே இருக்குமாம்.

இந்த பூச்சியானது மழைக் காலங்களில் உருவெடுத்து, பின்னர் பவுடராக உதிர்ந்து விடும். அப்படி உதிர்ந்த பிறகு பல பூச்சிகளாக உருவெடுத்து விடுமாம்.

அதுபோல் இப்படத்தில் உதிர்ந்த காதல் மீண்டும் புதிய காதலர்களாக உருவெடுத்து வருகிறது என்கின்றனர் படக்குழுவினர்.

தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்த பிள்ளைகளை பெற்றோர்கள் வெறுப்பதும், அவர்களை வாழ விடாமல் துரத்தும் சமூகத்தை பற்றியதுதான் இப்படம்.

இதன் பின்னணியில் ஒரு உண்மை சம்பவம் மறைந்துள்ளதாம்.

அ ந அய்யும் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் லட்சுமி பிரபா மற்றும் அய்யும் கணபதி இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

அரிதாரம் என்ற படத்தை தொடர்ந்து, விஜய் டி.அலெக்சாண்டர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் ராஜு, ஆஷா லதா, விக்கி, மஞ்சு, ஜெயலட்சுமி, கிச்சா, தாமோதரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் ஒளிப்பதிவை வெள்ளா கேசவன் செய்ய, ரெனால்டு ரீகன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் தேனப்பன், கவிஞர் சொற்கோ, பிஆர்ஓ விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல், ஊமை விழிகள் அரவிந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

More Articles
Follows