‘மூடர் கூடம்’ டைரக்டர் நவீனின் ‘நவீன’ திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மூடர் கூடம்’ என்ற படத்தை இயக்கி அதில் நாயகனாக நடித்தவர் நவீன். இப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

தற்போது, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார்.

இதில் இவரது ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்க ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

இந்நிலையில், சிந்து என்ற பெண்ணை திடீர் பதிவு திருமணம் செய்துக் கொண்டுள்ளதாக நவீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது… எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதி,மத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார்.

நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்” என தெரிவித்துள்ளார்.

Moodar koodam fame Naveen sudden marriage with Sindhu

சூர்யாவை அடுத்து ஜெயம் ரவியை இயக்கும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படத்தை இயக்கி முடித்துவிட்டார் செல்வராகவன்.

படம் மே 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜெயம் ரவி நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் செல்வராகவன்.

தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ஜெயம் ரவி.

எனவே இந்த புதிய கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Jayam Ravi and Selvaraghavan join hands

 

கோடையில் ரிலீசாகும் அருள் நிதி படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தான் வெற்றி பெறும் என்ற கோட்பாடு சில நேரங்களில் மறைந்து போவதை போல தோன்றலாம். ஆனால் அது நல்ல திறமையான இயக்குனர்கள் மிகச்சிறந்த, புதுமையான கதைகளுடன் வரும்போது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. தற்போது இயக்குனர் பரத் நீலகண்டன் K13 மூலம் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார். படத்தின் டீசர் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகமாக்கி இருக்கிறது. எற்கனவே தணிக்கை செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை மிக விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

SP சினிமாஸ் தயாரிப்பாளர் எஸ்.பி. ஷங்கர் இது குறித்து கூறும்போது, “டீசரில் ரசிகர்கள் பார்த்தது மிகவும் சாதாரண விஷயங்கள் தான். படத்தில் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமான ஆச்சர்யங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும். இந்த டிரெய்லர் உளவியல் ரீதியாக ரசிகர்களை தயார்படுத்துவதற்கான ஒரு வழிமுறை தான். எங்கள் புத்திசாலித்தனமான ரசிகர்கள் டிரெய்லரின் உண்மையான இலக்கணத்தை புரிந்து கொண்டதும், அதில் முக்கிய கதாபாத்திரங்களை புரிந்து கொண்டதும், அதை பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாடல்களை விரைவில் வெளியிடவும், இந்த கோடை விடுமுறையில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறோம்” என்றார்.

நடிகர்களின் அபார நடிப்பை பற்றி SP சினிமாஸ் சாந்தபிரியா கூறும்போது, “தயாரிப்பாளர்கள் அருள்நிதியை பற்றி தொடர்ந்து புகழ்ந்து வருவதை பார்க்க செயற்கையாக இருக்கலாம், ஆனால் அது தான் உண்மை, இது ஒன்றும் புதிதல்ல. இன்று, சமூக ஊடகங்கள் மற்றும் வலை தளங்களில் பார்வையாளர்களிடமிருந்து வரும் பல கருத்துக்களில் அருள்நிதி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படங்கள் மீது அவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பது தெளிவாகிறது. அவர் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து இப்படிப்பட்ட ஒரு நற்பெயரை சம்பாதித்திருக்கிறார். அவர் நடித்தால் அந்த திரைப்படத்திற்கு அதுவே பெரிய அளவில் வலு சேர்க்கிறது. இதனை ஒரு தயாரிப்பாளராக வெறுமனே சொல்லவில்லை, மக்கள் ஏற்கெனவே அவரை அங்கீகரித்து, பாராட்டியுள்ளனர்” என்றார்.

K13 ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சாம் சிஎஸ் அவரது பின்னணி இசையால் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளார். எஸ்.பி. சினிமாஸ் சார்பில் எஸ்பி சங்கர் மற்றும் சாந்தபிரியா தயாரிக்க இந்த படத்தை இயக்கியிருக்கிறார் பரத் நீலகண்டன். அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். இது ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு, கோடை விடுமுறையில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

நாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் நடிகர் சமுத்திரகனி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டண்ட் யூனியனின் 52 ம் ஆண்டு விழா சென்னையில் ஸ்டண்ட் யூனியனில் இன்று காலை நடை பெற்றது..விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் எஸ்.தாணு,சமுத்திரகனி, ஜாக்குவார் தங்கம், தடா சந்திரசேகர் உள்ளிட்டோர் சுற்றியுள்ள இடங்களில் மரக் கன்றுகளை நட்டு வைத்தார்கள் …மூத்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் 5 பேர், மூத்த ஸ்டண்ட் நடிகர்கள் 5 பேரையும் கெளரவப் படுத்தினர்…

சமுத்திரகனி பேசும் போது இப்போ இங்கே நுழையும் போதே காசு கொடுத்து வாங்கிய தண்ணீர் பாட்டிலை கொடுத்தார்கள்..காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு இந்த தலை முறையினரே தள்ள பட்டு விட்டோம்…அடுத்த தலை முறையினரின் கதி என்னவாகும் …யோசித்து பார்க்க வேண்டும்…ஒவ்வொருத்தரும் மரம் நடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.மேற்கு தொடர்ச்சி
மலையில் உள்ள மரங்களை வெட்டாதீர்கள்..அந்த மரங்கள் தான் எங்கள் நாட்டை பாதுகாக்கும் அரண் போல இருக்கு…எங்கள் நாடு இயற்கையிலிருந்து பாதுகாக்கப் படுவதே அந்த மரங்கள் தான்..அதை பாது காக்க நாங்கள் பண உதவி செய்கிறோம் என்று ஜப்பான் அரசாங்கம் நமக்கு உதவி செய்கிறது..நம்ம நாட்டு மரங்கள் இன்னொரு நாட்டுக்கும் உதவியா இருக்குன்னு அவங்களே சொல்லும் போது நாம எப்படி பாது காக்கணும்…நாளைய தலைமுறை வாழ நாம தான் முயற்சி எடுக்க வேண்டும் என்று பேசினார்
விழாவில் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றனர்…
விழாவிற்கு வந்தவர்களை தலைவர் சுப்ரீம் சுந்தர் மற்றும்
செயலாளர் பொன்னுசாமி பொருளாளர் ஜான் மற்றும் நிர்வாகக் குழுவினர் வரவேற்றனர்

கோடையை குளிரவைக்க வருகிறது விஜய் தேவரகொண்டா – பூஜா ஜாவேரி நடித்த “ அர்ஜூன் ரெட்டி ”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் தேவரகொண்டா – பூஜா ஜாவேரி நடித்து தெலுங்கில் துவாரகா என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் படநிறுவனம் சார்பாக A.N.பாலாஜி தமிழில் தயாரித்துள்ள “அர்ஜூன் ரெட்டி “ படம் இந்த மாதம் 26 ம் தேதி வெளியாக உள்ளது.

மற்றும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைக்கதை அனைவரையும் ரசிக்க வைக்கும். கோடைக்கு இந்தமாக இந்த அர்ஜுன்ரெட்டி இருக்கும். நெல்லை பாரதியின் பாடல்கள் ஓவொன்றும் ஒருவிதம் அனைத்தும் ரசிக்க வைக்கும் என்கிறார் A.N.பாலாஜி.

ஒளிப்பதிவு – ஸ்யாம் கே.நாய்டு

இசை – சாய்கார்த்திக்

பாடல்கள் – நெல்லை பாரதி

எடிட்டிங் – பிரேம்

தயாரிப்பு – A.N.பாலாஜி

ரஜினி, கமலை தொடர்ந்து சிரஞ்சீவியை இயக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டத்தை உலகத்துக்கு சொன்னவர் டைரக்டர் ஷங்கர்.

தமிழில் சில படங்களை இயக்கிய இவர், ஹிந்தியில் ஒரு படத்தை மட்டுமே இயக்கியுள்ளார்.

அது ‘முதல்வன்’ பட ரீமேக்கான ‘நாயக்’ படத்தை இயக்கினார்.

ஆனால் அவரது படங்களுக்கு எல்லா மொழியிலும் வரவேற்பு இருப்பதால் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகும்.

கடந்த வருடம் ரஜினி நடித்த 2.0 படத்தை இயக்கி வெளியிட்டார். தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

விரைவில் பிரபல நடிகர் சிரஞ்சீவி நடிக்கவுள்ள ஒரு படத்தை தெலுங்கில் இயக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாராம்.

Chiru aka Chiranjeevi to team up with Shankar for his 153rd project

More Articles
Follows