விஜய்சேதுபதியுடன் இணையும் கபாலி ரஞ்சித், கலையரசன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருகிற ஜூன் 11ஆம் தேதி பேரறிவாளவன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் பேரணி நடைபெற்றவுள்ளது.

இப்பேரணி வேலூர் சிறையில் இருந்து சென்னை கோட்டை வரை நடைபெறவுள்ளது.

இதில் அரசியல் பிரமுகர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இதில் நடிகர் விஜய்சேதுபதியும் இணையவுள்ளார்.

இவரைத் தொடர்ந்து தற்போது கபாலி இயக்குனர் பா. ரஞ்சித், நடிகர் கலையரசன் மற்றும் மூடர் கூடம் நவீன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இதுதொடர்பாக இவர்கள் தெரிவித்துள்ளதாவது…

“பேரறிவாளனின் 25 ஆண்டு கால சிறை தண்டனை என்பது மிகக் கொடுமையானது.

அவரது தாய் அற்புதம் அம்மாள் இதற்காக கடுமையாக போராடி வருகிறார்.

எனவே பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தி நடைபெறவுள்ள மோட்டார் வாகனப் பேரணியில் கலந்துக் கொள்கிறோம்.

இதை அரசியலாக பார்க்காமல் மனிதநேயமாக பார்க்க வேண்டும்.” என்றனர்.

மீண்டும் விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் மடோனா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனேகன் படத்தை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் கேவி ஆனந்த் மீண்டும் புதிய படத்திற்காக இணைகின்றனர்.

இப்படத்தில் எவரும் எதிர்பாரா விதமாக டி.ராஜேந்தர் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க அபிநந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை கிரண்.

சுபா மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோர் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதுகின்றனர்.

தற்போது இதில் நாயகியாக நடிக்க மடோனா செபஸ்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதியுடன் மடோனா இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் படப்பிடிப்பை ஜூலையில் தொடங்கவிருக்கின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இருந்து தனுஷ் விலகல்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தாலும் எதிர்பாரா விதமாக தயாரிப்பாளர்களிடையே எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.

சினிமா தயாரிப்பாளர்களை அவமானப்படுத்தியதாக கூறி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட் கார்டு விதித்துள்ளனர்.

எனவே, இனி கார்த்திக் சுப்புராஜால் படங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்த படம் கைவிடப்படும் எனத் தெரிகிறது.

ரெட் கார்டு தடையின் காரணமாக தனுஷ் விலகிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விஜயகாந்த் பாணியில் யூ டேர்ன் போட்ட ‘மாவீரன்’ நெப்போலியன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் மார்கெட் போனால் அரசியலுக்கு செல்வதும், அரசியலில் செல்வாக்கு போனால் மறுபடியும் சினிமாவுக்கே திரும்புவதும் வாடிக்கைதான்.
இதற்கு பல நடிகர்களை நாம் உதாரணமாக கூறலாம்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் விஜயகாந்த் டெபாசிட் தொகை கூட கிடைக்காமல் படுதோல்வி அடைந்தார்.

எனவே முடிவு தெரிந்த மறுநாளே தமிழன் என்ற சொல் என்ற படப்பிடிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் நெப்போலியனும் நீண்ட இடைவேளைக்கு பின், சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

தி.மு.க.வில் இருந்து விலகிய நெப்போலியன் சமீபத்தில்தான் பா.ஜ.கட்சியில் சேர்ந்தார்.

கௌதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் உடன் மோதும் ஜி.வி. பிரகாஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்துள்ள படம் அம்மா கணக்கு.

இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார்.

ஜூன் 17ஆம் தேதி இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

இதே நாளில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படமும் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

‘U/A’ சர்டிபிகேட் பெற்றுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

இப்படங்களைத் தொடர்ந்து சுந்தர் சி தயாரித்து நடித்துள்ள முத்தின கத்திரிக்கா படமும் வெளியாகிறது.

இதில் நாயகியாக பூனம் பஜ்வா நடிக்க, வேங்கட் ராகவன் இயக்கியுள்ளார்.

பீப் பாடலுக்கு வழக்கு தொடுத்தவர்கள் கமல் படத்திற்கும் வழக்கு…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும் லைக்கா நிறுவனமும் இணைந்து சபாஷ் நாயுடு என்ற படத்தை தயாரிக்கின்றனர்.

ராஜீவ்குமார் இயக்கும் இப்படத்தில் கமலுடன் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை பொதுச்செயலாளர் இளங்கோவன் அண்ட் வக்கீல் ஜெயபால் உள்ளிட்டோர் இப்படத் தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மனுவை கோவை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ளனர். அதில்…

“சபாஷ் நாயுடு என்ற தலைப்பு சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

இதுபோன்ற சாதி பெயரில் படத்தலைப்புகளை அனுமதித்தால் தவறான செயலுக்கு இதுவே முன்னுதாரணமாய் அமைந்து விடும்.

எனவே, இப்படத்திற்கு வேறு தலைப்பு இடும் வரை, இதன் விளம்பரங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இளங்கோவன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவரும் சிம்புவின் பீப் பாடலுக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows