நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு செல்லும் ‘மாஸ்டர்’ விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கௌரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.

தற்போது இப்பட சூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘மாஸ்டர்’ விஜய்யுடன் மோதும் ‘சூரரைப் போற்று’ சூர்யா

இதில் விஜய், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடத்தவிருக்கிறார்களாம்.

பிப்ரவரி 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் கதை வசனம் எழுதி நடிக்கும் ‘அசுரன்’ தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு 2020 பொங்கல் தினத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் படம் வெளியானது.

இந்த படம் வந்த சுவடே தெரியாமல் தர்பார் அலையில் வீழ்ந்துவிட்டது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார்.

இதனிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள சுருளி படத்திலும் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.

மாமனார் ரஜினி வேடத்தில் தனுஷ்; அம்மா மேனகா வேடத்தில் கீர்த்தி

இந்த படங்களை அடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு கதை வசனம் எழுதி, நாயகனாக நடிக்கிறாராம்.

பவர்பாண்டி படத்திற்கு கதை வசனம் எழுதி இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேண்ட் மட்டும்தான் போடலையா.? ரம்யாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிவி ரியால்ட்டி ஷோக்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகள் என அனைத்தையும் தொகுத்து வழங்கி வருபவர் ரம்யா

மேலும் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். விஜய்யின் மாஸ்டர் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது.

இந்த நிலையில் இவரின் சமீபத்திய வீடியோ ஒன்றை வலைத்தள வாசிகள் வறுத்தெடுத்துள்ளனர்.

அண்மையில ஒரு வேண்டுதலுக்காக ஒரு பிரபல கோயிலுக்கு சன்றுள்ளார். அங்கு கவர்ச்சியான உடை அணிந்து வேண்டுதல் செய்துள்ளர்.

அந்த வீடியோவில் சிட்டுக்குருவிகள் காதில் தனது பிரார்த்தனையை கூறி, அவைகளை ரம்யா பறக்கவிடுகிறார்.

அதில் சுடிதாருக்கு அணியும் டாப்ஸை மட்டுமே அணிந்திருப்பது போல உடை உள்ளது.

இதனை பார்த்த கோவிலுக்கு இப்படி தான் கவர்ச்சியான உடை அணிந்து செல்வீர்களா? பேண்ட் எங்கே? பேண்ட் மட்டும் தான் போடலையா? என் பல்வேறு கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Actress VJ Ramys glamour dress goes viral

நடிகர் சங்க தேர்தல் ரத்து; கோர்ட் தீர்ப்பால் நாசர் டென்ஷன்; ஐசரி ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக தமிழக அரசியல் தேர்தல் அளவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலும் களைக்கட்டி வருகிறது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.

கடந்த 2019 ஆண்டு ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.

ஆனால் இதற்கு முன்பே சில உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில் ஜூன் 19ஆம் தேதி தேர்தலை நிறுத்து வைத்து உத்தரவிட்டார் மாவட்ட பதிவாளர்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் தேர்தலை மட்டும் நடத்த அனுமதி அளித்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தான் 2019 ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

மேலும் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் எங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

வெளியூர்களில் இருக்கும் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவம் கொடுக்கப்படவில்லை எனவே இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

அதில், “கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. 3 மாதத்துக்குள் வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும்.

இத்தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். மறுதேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த சிறப்பு அதிகாரியான கீதா நிர்வகிப்பார்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை ஐசரி கணேஷ், பாக்யராஜ் உள்ளிட்ட சங்கரதாஸ் சுவாமிகள் அணியினர் வரவேற்றுள்ளனர்.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நாசர், விஷால் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வரும் திங்கள் கிழமை மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

High Court judgement on Nadigar Sangam election

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாகவும், சுயமனித ஒருமைப்பாட்டை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு கதைகளத்தை கருவாக கொண்டதாகவும் அமைகிறது.
அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும், தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா.

இயக்குனர் பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நக்ஷத்ரா இடம் பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமஹேந்திரா மற்றும் ஜோ மல்லூரி நடிக்கிறார்கள். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, கேஎம்கே பழனிவேல் படத்தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, மதன் கார்கி வசனம் எழுதியிருக்கிறார்.

கலை இயக்கத்திற்கு மோகனமகேந்திரன் பொறுப்பேற்க, நடனத்திற்கு கூல் ஜெயந்த், பிரசன்னா, ஷண்முகசுந்தர் ஆகியோர் பங்களிக்க, கம்பம் சங்கர் வடிவமைப்பு பணிகளை செய்திருக்கிறார்.

சபேஷ் – முரளி பின்னணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்கி, நா முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன் ஆகியோர் பாடல்களை எழுத, என் ஆர் ரகுநந்தன் பாடல்களை படைத்திருக்கிறார்.

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

BREAKING ரஜினிக்கு எதிரான மனுக்கள் வாபஸ்; திராவிடர் விடுதலை கழகம் பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துக்ளக் 50 ஆண்டு விழாவில் பெரியார் பற்றி ரஜினி பேசியது சர்ச்சையானது.

எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் கட்சிகள் வலியுறுத்தின.

மேலும் பெரியார் பற்றி அவதூறான கருத்துக்களை ரஜினி பேசியதாகவும், அவர் மீது நவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடவும் கோர்ட் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு ஐகோர்ட்டில் நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு முன்று இன்று விசாரணைக்கு வந்தது. புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும் என்று நீதிபதி ராஜமாணிக்கம் கூறினார்.

இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடபட்டதே தவறு என்று கூறினர். இதனை அடுத்து, மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.

இதனை தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

More Articles
Follows