நிறைய நடிகர்களுக்கு சமூக அக்கறையே இல்லை.. : ரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் டைரக்டர் ரஞ்சித்.

அப்போது அவர் செய்தியாளர்களிடையே பேசியதாவது…

இங்குள்ள ஓட்டு அரசியல் எல்லா சமூகத்தையும் தனித்தனியாக பிரித்து இருக்கிறது.

தலித்தில் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என எல்லா சாதிகளிலும் தனி பிரிவுகள் உருவாக்கியுள்ளது.

பெரியாரிய இயக்கங்கள் இங்கு எல்லோரையும் ஒன்றாக்கியது. ஆனால் தற்போது உடைப்பதற்கான நிறைய வேலைகள் இங்கு நடக்கிறது.” என்றார்.

அதனையடுத்து நடிகர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பற்றிய கேள்விக்கு அவர் கூறியதாவது…

‘விஜய்சேதுபதி உள்ளிட்ட நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவி செய்து வருகிறார்கள், சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்று கூறினார்.

Many actors does not care about Society says Pa Ranjith

வறுமையின் கொடுமையில் வாழ்ந்தோம்..; செல்வராகவன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்பாளிகளில் ஒருவர் செல்வராகவன்.

இவர் தனுஷின் அண்ணன் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் தனுது கடந்த காலத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.

அதில் “கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். இருவேளை உண்டால் அரிது.

அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயினும் சமூகம் கேலி செய்யும். நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என. எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்” என பதிவிட்டுள்ளார்.

Director Selvaraghavan talks about his family poor condition

ஆரி-ஐஸ்வர்யா தத்தா இணையும் படத்தில் காதலுடன் காதல் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது.

படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. 60’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80’களில் ஜாதி தடையாக இருந்தது.

2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம்.

இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம். உங்க காதலை பார்க்க தயாராகுங்கள். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் கதை கவிதை நயம் கொண்ட காதல் கதை.

“அய்யனார்” படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். A.G.மகேஷ் இசை அமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்.

Aari Vs Aishwarya Dutta starring new movie updates

நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த்-பிரியங்கா திருமணம் நடைபெற்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் RS ஜஸ்வந்த் கண்ணன் -K பிரியங்கா திருமணம் இன்று (02-12-2018, ஞாயிற்றுகிழமை) காலை சென்னை கோயம்பேடில் உள்ள ஸ்ரீ வராஹம் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.

சரியாக காலை 8.56க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.

மணமகன் RS ஜஸ்வந்த் கண்ணன், தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண வரவேற்பில் விஜய், கவுண்டமணி உள்ளிட்ட நடிகர்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Ramesh Kanna Son Jashwanth Kannan Priyanka Wedding news updates

அமேசான் பிரைம் வீடியோவில் டிசம்பர் 7 முதல் *வெள்ள ராஜா*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பாபி சிம்ஹா – பார்வதி நாயர் நடிக்கும் இத்தொடர், டிசம்பர் 7 அன்று, அமேஸான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமடி, பிரைம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள், விளம்பரமின்றிஇசை கேட்டலுக்கான அமேஸான் பிரைம் மியூசிக், தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளின் துரிதமான இலவச டெலிவரி, டாப் டீல்களுக்கான அணுகுவசதி, பிரைம் ரீடிங் உடன் அன்லிமிடெட் ரீடிங் ஆகியவை அனைத்தும் பிரதி மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்கும் மிகச்சிறந்த மதிப்பினை பிரைம் வழங்குகிறது.

டிசம்பர்1, 2018: பிரைம் உறுப்பினர்களுக்கான தனது முதல் பிரைம் பிரத்தியேகத் தொடராக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடனான கூட்டாண்மையில்உருவாக்கப்பட்டுள்ள வெள்ள ராஜா- ன் அறிமுகத்தினை அமேஸான் பிரைம் வீடியோ இன்று அறிவித்துள்ளது.

டிசம்பர் 7, 2018 அன்று 200 நாடுகள் மற்றும்பிராந்தியங்களில் ஒளிபரப்பபடவுள்ள வெள்ளை ராஜா பிரைம் உறுப்பினர்களுக்காக, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் கிடைக்கப்பெறும்.

அமேஸான் பிரைம் வீடியோ இந்தியா, உள்ளடக்கப்பிரிவின் இயக்குனர் மற்றும் தலைவர் திரு.விஜய் சுப்ரமணியம் அவர்கள், “எங்களது தமிழ் பிளாக்பஸ்டர்திரைப்படங்கள் தொகுப்புகளின் உள்ளடக்கத்திற்கு நாங்கள் தமிழக நேயர்களிடம் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளோம்.

இந்தியாவிலிருந்து கதைகளைஎடுக்கவும் மற்றும் உள்ளுர் விவரணைக்குப் பொருந்தும் அதே நேரத்தில் உலகளாவிய அம்சங்களையும் கொண்டுள்ள கதைகளை உருவாக்கவும்உறுதிப்பாடு மேற்கொண்டுள்ளோம்.

சிறந்த கதைகளை பல்வேறு மொழிகளிலும் கூறும் அமேஸான் பிரைம் வீடியோவின் உறுதிப்பாட்டினை இது மறுஉறுதி செய்கிறது. சர்வதேச ரீதியிலான, பிராந்திய மற்றும் உள்ளூர் தலைப்புகளை தொடர்ந்து இந்தியாவிலும் மற்றும் உலகளாவிய அளவிலும் அறிமுகம்செய்வதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடவுள்ளோம்” என்று கூறினார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், S.R.பிரபு அவர்கள், “தமிழில், பிரம்மாண்டமான முறையில், ஒரு தைரியமான கதையை சொல்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியும்மற்றும் ஆர்வமும் கொண்டுள்ளோம்.

எங்களது அனைத்து பணிகளிலும், தரமான பொழுதுபோக்கினை வழங்க நாங்கள் அயராது முயற்சிக்கிறோம்.

வழக்கம்போல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் ஆழமாக உருவாக்கியுள்ளோம் மற்றும் ஒரு சிக்கல், மர்மம் நிறைந்த போதை மருந்து உலகம் குறித்து, சிற்சில புன்னகை நேர்வுகளுடன் இந்த பிரைம் பிரத்தியேக தொடரை வடிவமைத்துள்ளோம்.

ஆர்வமூட்டும் கதை, நம்பத்தக்க இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் மற்றும் உறுதியான நட்சத்திர பட்டாளத்தைக் கொண்டுள்ள இது, பிரைம் வீடியோ நேயர்களால் பெரிதும் விரும்பப்படும் என்றுநம்புகிறோம்.

மேலும் இந்த உள்ளுர் கதையை இந்தியாவிலுள்ள நேயர்களுக்கு ஏற்றவாறு மட்டுமின்றி, அமேஸான் பிரைம் வீடியோவில் இணைந்துள்ளஅனைத்து சர்வதேச நேயர்ளுக்கும் ஏற்றவாறு வடிவமைத்துள்ளோம்” என்று கூறினார்.

வெள்ளை ராஜா குறித்து

வடசென்னையின் மையத்தில் அமைந்துள்ளதொரு பிரபலமான லாட்ஜ், பாவா லாட்ஜாகும். இந்த லாட்ஜில் தங்கி, பணையக் கைதி சூழலில் இருக்கும்நபர்களைச் சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பிரலமானதொரு போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவனான தேவா ஒரு கொக்கைன் (Cocaine) சோதனையைத் தொடர்ந்து அங்கு ஒளிந்திருக்கிறான்.

அவன் காவல்துறையின் மற்றும் தனது எதிரிகளின் தடைகளை மீறி தனது பொருட்களுடன் தப்பிக்கவேண்டும். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸால் தயாரிக்கப்பட்டு, குகன் சென்னியப்பன் அவர்களால் இயக்கப்பட்டுள்ள இத்தொடரில், பாபி சிம்ஹா மற்றும் பார்வதிநாயர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

Amazon Prime Video Announces its First Tamil Prime Exclusive Series Vella Raja

https://www.filmistreet.com/video/vella-raja-official-teaser/

பட்டுக்கோட்டையை படு நாசமாக்கிய கஜா; படமாக்கிய இடங்களை பார்த்து *சீமத்துரை* வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’சீமத்துரை’ என்னும் பெயரை கேட்டாலே நமக்கு கிராமங்களும் அங்கே வெள்ளந்தியாக திரியும் இளைஞர்களும் தான் நினைவுக்கு வருவார்கள். கிராமங்களில் வாழும் ஒவ்வொரு இளவட்ட வாலிபர்களுமே சீமத்துரை தான்.

அப்படி எங்கள் பகுதியான பட்டுக்கோட்டையை சுற்றி நடந்த உண்மை சம்பவங்களை வைத்துதான் இந்த படத்தை எடுத்து இருக்கிறோம்.

காலம் மாறினாலும் பிரச்சினைகள் மட்டும் மாறாது என்பார்கள். அந்த மாதிரி இன்றைக்கும் கிராமங்களில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவானது தான் சீமத்துரை படம்.

கிராம மக்களுக்கு அருவா, கத்தி மட்டும் ஆயுதம் அல்ல. பாசமும் ஒரு ஆயுதம் தான். பாசத்துக்கும் கர்வத்துக்கும் இடையே நடக்கிற போராட்டத்தை வாழ்வியலோடு பதிவு செய்து இருக்கிறோம்.

சீமத்துரை என்னும் தலைப்புக்கேற்றாற்போல் காதல், கலாட்டா, கலவரம் என்று எல்லாம் கலந்த ஒரு படமாக சீமத்துரை இருக்கும்.

படத்தில் கீதன் கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

சரிதாவின் தங்கையும் நடிகையுமான விஜி சந்திரசேகர் கீதனின் அம்மாவாக நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் ஊர் ஊராக சென்று கருவாடு விற்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

’நான் மகான் அல்ல’ மகேந்திரன், ’கயல்’ வின்செண்ட் ஆகியோர் கீதனின் நண்பர்களாக நடித்துள்ளனர்.

ஆதேஷ் பாலா, மதயானை கூட்டம் காசி மாயன், மேடை கலைஞர்களான நிரஞ்சன், பொரி உருண்டை சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் பேசும்போது, ‘ தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டையை சுற்றி தான் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். பட்டுக்கோட்டையை சுற்றி உயர்ந்து நின்ற தென்னை மரங்கள் படத்தில் முக்கியமாக பதிவு செய்தோம்.

ஆனால் அந்த தென்னை மரங்களை கஜா புயல் சுத்தமாக அழித்துவிட்டது.

நாங்கள் அழகாக படம் பிடித்த பகுதிகள் இன்று அலங்கோலமாக கிடப்பதை பார்க்கும்போது படக்குழுவில் உள்ள அத்தனை பேருக்கும் வேதனை ஏற்பட்டுள்ளது. அந்த கிராமத்து மக்கள் எங்களை அவர்கள் குடும்பங்களில் ஒருவராக நடத்தினார்கள். அவர்கள் மீண்டு எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.’ என்றார்.

இசை – ஜோஸ் ஃப்ராங்க்ளின், ஒளிப்பதிவு – D திருஞான சம்பந்தம், படத்தொகுப்பு – T வீர செந்தில்ராஜ், பாடல்கள் – அண்ணாமலை, நடனம் – சந்தோஷ் முருகன்,
தயாரிப்பு – புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா
இணை தயாரிப்பு – ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சந்தோஷ் தியாகராஜன்

Seemathurai felt sad about Gaja cyclone affected areas where they done shoot

More Articles
Follows