கபாலியை காரணம் காட்டி ‘மணல் கயிறு 2’க்கு யு சர்ட்டிபிகேட் பெற்ற எஸ்வி.சேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் எஸ்வி. சேகர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மணல் கயிறு 2.

மதன்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் எஸ்.வி.சேகர் மகன் அஸ்வின் சேகர், விசு, பூர்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தரண் குமார் இசையமைக்க, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதனால் தணிக்கை அதிகாரிகளுக்கும் எஸ்வி. சேகருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

நாங்கள் எடுத்திருக்கும் படத்துக்கு நியாயமான சான்றிதழ் கிடைக்கும்வரை போராடுவேன்.

ஆனால் மறுஆய்வுக்குக்காக செல்ல மாட்டேன். கோர்ட்டுக்கு போவேன்.

ரஜினி நடித்த ‘கபாலி’ படத்துக்கு எந்த அடிப்படையில் ‘யு’ சர்ட்டிபிகேட் கொடுத்தனர் என பல கேள்விகளை எஸ்வி. சேகர் கேட்டுள்ளார்.

தற்போது, இறுதியாக ‘மணல் கயிறு 2’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘எலும்புகள் உடைந்தபிறகு ஆஸ்கர் விருது…’ ஜாக்கிசான் பெருமிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாங்காங்கை சேர்ந்த ஜாக்கிசான் 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது அவருக்கு 62 வயதாகிறது.

இதுவரை கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

மேலும் 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் உள்ளார்.

நடிகர், இயக்குனர், ஸ்டண்ட் மாஸ்டர், பாடகர், தயாரிப்பாளர், தற்காப்பு கலை நிபுணர் என பன்முக திறமைகளை கொண்டவர்.

54 வருடங்களுக்கு மேல் சினிமாவில் வேரூன்றி இருந்தாலும் இதுவரை ஒரு ஆஸ்கர் விருது பெற்றதில்லை.

தற்போது ஜாக்கிசானின் நீண்ட திரையுலக பயணத்தை கவுரவிக்கும் வகையில் அவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜாக்கிசான் கூறியதாவது..

“இத்தனை வருடம் சினிமாவில் இருந்தும் ஆஸ்கர் வாங்கவில்லையே என என் பெற்றோர் கேட்பதுண்டு.

என்னுடைய உடம்பின் பல எலும்புகளை உடைத்த பிறகு (சிரிக்கிறார்) தற்போது இந்த விருதை பெற்றுள்ளேன்.

என் ரசிகர்களுக்கு நன்றி. அவர்கள்தான் தொடர்ந்து படங்களை உருவாக்குவதற்கும், ஜன்னல்களுக்கு இடையே குதிப்பதற்கும், அடித்து உதைப்பதற்கும், என் எலும்புகள் உடைவதற்கும் காரணம்.” என்றார் ஜாக்கிசான்.

மீண்டும் பல்கேரியா பறந்தார் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தல 57 படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தி முடித்தனர் அஜித் படக்குழுவினர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை பல்கேரியா நாட்டில் நடத்தியிருந்தனர்.

தற்போது மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்காக மீண்டும் பல்கேரியா நாட்டிற்கு இயக்குனர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் சென்றுள்ளனர்.

இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளார்.

இதன் சூட்டிங் 60 நாட்கள் வரை நடைபெறும் எனத் தெரிகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், தம்பி ராமையா, கருணாகரன், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கமல்-அஜித்துக்கு பிறகு நடிகையை தேர்வு செய்த டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல், சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான படம் உன்னைப் போல் ஒருவன்.

இப்படத்தை சக்ரி டொலட்டி Chakri Toleti இயக்கியிருந்தார்.

இவரே அஜித்தின் பில்லா2 படத்தையும் இயக்கினார்.

தற்போது இவர் 3வதாக நேரடி தமிழ் படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இதில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.

இது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்ன கூறப்படுகிறது.

விஜய்யின் துப்பாக்கி-2… ஜி.வி.பிரகாஷிடம் ஓகே சொன்ன ஏஆர் முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டடித்த படம் துப்பாக்கி.

விஜய்க்கு ஒரு ஸ்டைலீஷ் லுக்கை இப்படத்தில் முருகதாஸ் கொடுத்திருந்தார்.

இப்படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டது.

எனவே முருகதாஸ் மற்றும் விஜய் ரசிகர்கள் இதை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

அப்போது தீவிர விஜய் ரசிகரான ஜிவி. பிரகாஷும் வாழ்த்திவிட்டு துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அதற்கு முருகதாஸ்ம் சீக்கிரமே நடக்கும். ஓகே என்று தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி-ஜிவி.பிரகாஷ் பாணியில் நட்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருடத்திற்கு ஒரு படத்தை ஒரு ஹீரோ கொடுக்கவே திணறி வரும் நிலையில் வருடத்திற்கு அரை டஜன் படங்களை அசால்ட்டாக இரண்டு ஹீரோக்கள் கொடுத்து வருகிறார்கள்.

ஒருவர் விஜய்சேதுபதி. மற்றொருவர் ஜி.வி. பிரகாஷ்.

அண்மையில் விஜய்சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் றெக்க ஆகிய படங்களில் இரண்டு வார இடைவெளியில் வெளியானது.

அதுபோல் ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு மற்றும் புரூஸ் லீ ஆகிய இருபடங்களும், இந்த நவம்பரில் வெளியாகவுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து, நட்ராஜின் நடிப்பில் உருவாகியுள்ள எங்கிட்ட மோதாதே படம் டிசம்பர் 2ல் ரிலீஸ்.

இதனையடுத்து டிசம்பரிலேயே போங்கு என்ற படமும் வெளியாகவுள்ளதாம்.

More Articles
Follows