பேட்ட படத்தை அடுத்து புது ஹீரோவுக்கு வில்லனாக விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் போது வில்லனாக நடிக்க பலர் மறுக்கும் நிலையில் ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்தார் விஜய்சேதுபதி.

தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.

ராம்சரண்-சமந்தா நடித்த ரங்கஸ்தலம் படத்திற்கு கதை எழுதிய புஜ்ஜி பாபு இயக்கும் ஒரு புதிய படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார் நம் மக்கள் செல்வன்.

வைஷ்ணவ் தேவ் என்ற புதுமுக நடிகர் நாயகனாக நடிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

Makkal Selvan Vijay Sethupathi again acting as baddie

விஜய்யுடன் கூட்டணி வைத்து சூர்யாவுடன் மோதும் தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத்சிங், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் என்ஜிகே.

இப்பட டீசர் மற்றும் பாடல்கள் இன்று மாலை வெளியாகவுள்ளது. இதற்கான விழா இன்று சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்கிறது.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை மே 31-ந்தேதி திரையிட உள்ளனர்.

சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்கெட் உள்ளதால் அங்கும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.

இதே நாளில் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா-தமன்னா நடித்துள்ள தேவி-2 படம் வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

பிரபுதேவா மற்றும் தமன்னாவுக்கும் தெலுங்கில் நல்ல மார்கெட் வேல்யூ இருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

ஆக.. நல்ல போட்டியிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Surya and Tamanna movies clash on 31st May 2019

சூர்யா படத்திற்காக தீ-யை பற்ற (பாட) வைத்த ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இறுதிச்சுற்று’ படத்தில் இடம்பெற்ற “ஏ சண்டக்காரா…’ பாடலை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அப்படி ஒரு குரலால் நம்மை ஈர்த்தவர் பாடகி தீ (DHEE).

அப்பாடலை தொடர்ந்து, தனுஷின் ‘மாரி-2’ படத்தில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி…’ பாடலைப் பாடினார்.

இந்த பாடல் இன்றும் இணையத்தை கலக்கி வருகிறது. பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து செல்கிறது.

தற்போது இந்த பாடகி தீயை தன் இசையில் பாட வைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிக்கும் ‘சூரரை போற்று’ படத்தில் தான் அந்த பாடல் இடம் பெறுகிறது.

‘சூரரை போற்று’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் தானே…

Rowdy Baby sensation Dhee lends her voice for Soorarai Pottru

அவெஞ்சர்ஸ் பார்த்து கதறி அழுத ரசிகை ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது.

ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ இணைந்து இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் ராபர்ட் டவுனி, அயர்ன் மேனாகவும், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் தோராகவும், மார்க் ருஃபெல்லோ ஹல்காகவும், கிறிஸ் இவான்ஸ் கேப்டன் அமெரிக்காவாகவும், ஸ்கேர்லெட் ஜொஹான்சன் பிளாக் விடோவாகவும், ஜோஸ் பிரோலின் தேனோஸாகவும், பிரே லார்சன் கேப்டம் மார்வெலாகவும் நடித்துள்ளனர்.

மேலும் பல சூப்பர் ஹீரோக்கள் கதாபாத்திரங்களும் இப்படத்தில் உள்ளன. உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது.

சீனாவில் மட்டும் 330 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாம்.

இதில் ஐயர்ன் மேன் இறப்பதாக அப்படத்தில் ஒரு காட்சி இருக்கும்.

இதனால் சியோலி என்ற 21 வயது அயர்ன்மேன் ரசிகை ஒருவர் மிகவும் அழுதபடியே இருந்தாராம்.

அழுது அழுது அவருக்குள்ள என்ன ஆனதோ..? மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு சென்றுள்ளார்.

அவருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Avengers endgame fan hospitalised as she cant control crying

10 நாட்களில் 130 கோடியை அள்ளிய காஞ்சனா 3

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காஞ்சனா 3 ஏப்ரல் 19 ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது..இந்த படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது…10 நாட்களில் உலகம் முழுவதும் 130 கோடிகளை அள்ளி குவித்திருக்கிறது…ஒரு மாநில மொழிப்படம் இந்தளவு வசூல் வேட்டையாடி இருப்பது பெருமைக்குரிய விஷயம் தானே..

பொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி! சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பாகிறது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் குழுமத்துடன் இணைந்து ‘கெஸ்டோ’ ஸ்டுடியோஸ் இணைந்து ‘தினம்
ஒரு திருக்குறள் கதை’ எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இந்த
நிகழ்ச்சியில் பிரபல இலக்கியப் பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் தினமும் ஒரு
திருக்குறளும், அதற்குரிய பொருளையும் அவருக்கே உரிய எளிய நடையில் இனிமை
ததும்பும் வகையில் வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் குட்டிக் கதையின் சாயல் இருக்கும். நகைச்சுவையின் மென்சுவை
மிதக்கும். குழந்தைகளுக்கான மொழியில் அன்புரை இருக்கும்.
ஆறு நிமிட அளவில் அமைந்துள்ள இந்நிகழ்ச்சி ஒரு வித்தியாசமான முயற்சியாகும்.
ஆம், கு.ஞானசம்பந்தன் அவர்கள் கார்ட்டூன் கேரக்டர்களான பொம்மி மற்றும் அதன்
நண்பர்களுடன் உரையாடுவது போல இந்நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.
சன் குழுமத்துடன் இணைந்து ‘கெஸ்டோ’ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும்
இந்த ‘தினம் ஒரு திருக்குறள் கதை’ எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியானது வரும்
29.4.2019 திங்கட்கிழமை முதல் சுட்டி டி.வியில் அரங்கேற உள்ளது.
இதுபோன்ற கார்ட்டூன் கேரக்டர்களுடன் இணைந்து ஒரு தமிழறிஞர் திருக்குறளை,
குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையில் வழங்கும் இது போன்ற நிகழ்ச்சி இதுவரையில்
அரங்கேறியதே இல்லை. இதுதான் முதல் நிகழ்ச்சியாகும்.

இந்நிகழ்ச்சி பற்றி பேராசிரியர் கு ஞானசம்பந்தன் பேசும்போது,

“இது ஒரு புதுமையான அனுபவம் . இது திருக்குறளை குழந்தைகள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி. இன்றைய குழந்தைகளுக்கு யாரைப் பிடிக்கும் என்றால் அப்பா அம்மாவை விட கார்ட்டூன் கதாபாத்திரங்களைத்தான் அதிகம் பிடிக்கிறது அதன்வழியாக அவர்களிடம் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் முயற்சி தான் இது இதில் குறள் , அதன் பொருள், சின்னதாக ஒரு கதை இவ்வளவும் 5 நிமிடங்களில் இருக்கும்

திருக்குறளை யாருக்கு கொண்டு சேர்க்க வேண்டுமோ அவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு நல்ல முயற்சி இரண்டடி உள்ள திருக்குறளை இரண்டடி உயரம் உள்ள குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் சரியான முயற்சி.

குழந்தைகளுக்குப் பிடித்த அனிமேஷன் உலகத்தில் பிரவேசித்து திருக்குறளைக் கொண்டு செல்கிறோம் .இதற்கு எளிமையாக ஒரு கதையை அமைப்பது, திரைக்கதை அமைப்பது என்பது மிகவும் சிரமமான வேலைதான் .ஏனென்றால் குழந்தைகளுக்கு எழுதுவது மிகவும் கடினமானது . செயலில் இறங்கிப் பார்த்தால்தான் எவ்வளவு கடினமானது என்பது புரியும். ’இன்னா செய்தாரை ஒறுத்தல்’ என்று சொல்லும்போது குழந்தை கேட்கும் ’இன்னான்னா என்னா ?’ என்று.அப்போது அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் .ஒரு முறை செல்வகணபதி அவர்களின் நூலுக்கு முன்னுரை எழுதும் போது குழந்தைகளுக்கு எழுதுவது என்பது ஒரு மாயக் கண்ணாடி போன்றது குழந்தைகளுடன் பேசும்போது பெரியவர்கள் நாம் குழந்தைகள் ஆகிவிடுவோம் அவர்கள் பெரியவர்கள் ஆகிவிடுவார்கள் இந்த மாயம் நிகழ்வதை உணர முடியும். அப்படி ஓர் அனுபவத்தை இந்த நிகழ்ச்சி எனக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது .
இப்படிக் குழந்தைகளுக்கு அவர்கள் மொழியில் அவர்கள் வழியில் திருக்குறளைக் கொண்டு சேர்க்கும் இந்நிகழ்ச்சி உண்மையிலேயே புதுமையான சுவையான ரசிக்கத்தக்க நிகழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

More Articles
Follows