தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அப்போதே மக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்க ‘மய்யம் விசில்’ என்னும் செயலியை (மொபைல் ஆப்) விரைவில் அறிமுகம் செய்வேன் என அறிவித்தார்.
அதன்படி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ‘மய்யம் விசில்’ என்ற அந்த செயலி வரும் ஏப்ரல் 30ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தற்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள கமல், அதில் பேசியுள்ளதாவது…
காற்றை கெடுத்தார்கள், ஆற்றையும் கெடுத்தார்கள். தண்ணீர் ஓடினால் அது வெறும் ஆறு, சாயம் மட்டும் ஓடினால் அது சாக்கடை. வண்டி ஓட வேண்டிய இடத்தில் மழை தண்ணீர் ஓடுகிறது.
மரம் இருக்க வேண்டிய இடத்தில் குப்பை குவிந்து கிடக்கிறது. இதுபோன்ற ஆயிரம் பிரச்னைகள், அநீதிகள், அக்கிரமங்கள், அநியாயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டே இருக்கிறது.
இதற்கெல்லாம் முதல் காரணம் யார் தெரியுமா, நம்மை சுற்றி என்ன நடந்தாலும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் நாம் தான்.
இனி எந்த பிரச்னையையும் பார்த்து, பயந்து, ஒதுங்கி இருக்க வேண்டாம். ஏனென்றால் இனி உங்கள் கையில் விசில் இருக்கிறது. போனை எடுங்கள் மையம் விசில் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள். உங்களை பாதிக்கும் பிரச்னைகளை பதிவு செய்யுங்கள். விசில், அது எப்படி கேட்காமல் போகும்..? என்று பேசியுள்ளார்.
ஆண்ட்ராய்டு, ஐஓஸ் இயங்குதளங்களில் இயங்கும் வகையில் ‘மய்யம் விசில்’ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
Maiam Whistle App launch on 30th April 2018 to solve peoples problem