வீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் மகன்கள் கல்லூரியில் தறுதலையாக வலம் வந்து மற்றவர்களால் குறிப்பாக முகநூலில் ” புள்ளீங்கோ” என அழைக்கப்படும் மாணவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கூத்தடிக்கும் வாழ்க்கையில் தீடீர் புயல் போல் நடைபெறும் திகிலான சம்பவங்கள்
அவர்களது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. அதன் பிறகு சஸ்பென்சோடு அவர்களது வாழ்க்கை பயணிக்கின்றது ‘ இதன் உச்சகட்டம் என்ன ? என்பது தான் சக்சஸ் புல் சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகி உள்ள ” ப ர மு ” என்றார் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி தயாரித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார் புதுமுகமான மாணிக்ஜெய்.

பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் கோவிந்தராஜ், சேலம், ஆட்டையாம்பட்டி, ஊட்டி, திருப்பத்தூர், மற்றும் பெங்களூர் முழுவதும் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் மோகன்.

மாணிக் ஜெய், சித்ரா, ஷாலினி, சந்தியா, ரஞ்சித், மதி, சின்னமணி பெஞ்சமின் ஆகியோருடன் ஊர் மக்களும் நடித்துள்ளனர்.

இந்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வருகிறது. “பரமு

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் மூலம் ஹரீஸ் கல்யாண்-சஞ்சய் பாரதிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எதிர்வரும் வெள்ளிக் கிழமை வெளியாகும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் மூலம் அப்படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யாணுக்கும் இயக்குநர் சஞ்சய் பாரதிக்கும் ஜாக்பாட் அடித்திருக்கிறது. ஆம்… முதல் படம் வெளிவருவதற்கு முன்பே இந்த ஜோடிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்து விட்டது. கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் தயாரிக்கும் அடுத்த படத்தில் இவ்விருவரும் மீண்டும் இணைகின்றனர். தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயனே அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கும் இந்த அறிவிப்பில் சில சுவையான அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இது குறித்து டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் தெரிவித்ததாவது….

“கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்டி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரிக்கும் படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்க, சஞ்சய் பாரதி இயக்குகிறார். இது தெய்வீகமான, ஆக்ஷன் கலந்த அதிரடித் திரைப்படமாகும். ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டிரைலரால் நான் வெகுவாக கவரப்பட்டேன். படவுலகில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் நான், ரசிகர்களின் நாடித் துடிப்பை துல்லியமாகக் கணிக்கும் இயக்குநர்கள் மிகச் சிலரைத் தான் பார்த்திருக்கிறேன். அத்தகைய சிலரில் ஒருவர்தான் இயக்குநர் சஞ்சய் பாரதி. இத்தகைய பண்புக்கூறு மிகுந்தவராக இருப்பதால் சஞ்சய் பாரதியின் முன்னேற்றம் ஜெட் வேகத்தில் இருக்கும் என்பது திண்ணம்.

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டீஸருக்கும் டிரைலருக்கும் இளைய தலைமுறையிடம் கிடைத்திருக்கும் தனித்துவம் மிக்க வரவேற்புபைப் பார்த்த நான் வாழ்த்து தெரிவிக்க சஞ்சய் பாரதிக்கு போன் செய்தேன். சாதாரணமாகத் தொடங்கிய எங்கள் உரையாடல் மேலும் தொடர்ந்துபோது, ஒரு கதைக் கருவையும் ஒரு பிரதான பாத்திரத்தையும் என்னிடம் பேச்சு வாக்கில் தெரிவித்தார். உடனடியாக என்னை அது மிகவும் கவரவே, ஹரீஸ் கல்யாணைத் தவிர வேறு யாரையும் இந்த வேடத்துக்கு நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். சஞ்சய் பாரதியும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவே, நாங்களே இணைந்து இந்தப் படத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டின் மத்தியில் துவக்கப்பட இருக்கும் இந்தப் படத்தின் பெயர் மற்றும் நட்சத்திரங்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களுடன் படத்தின் வெளியீட்டு தேதியும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் கிரியேடிவ் என்டர்டெயிண்மெண்ட் சார்பில் தற்போது சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படத்தைத் தயாரித்து வருகிறார். இது தவிர, இவரே இயக்கவிருக்கும் படத்தைப் பற்றியும் அதில் நடிக்கும் நடிக நடிகையர் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாக இருக்கிறது.

42 வருசமா பிரசாத் ஸ்டூடியோவுக்கு வாடகை கொடுக்காத இளையராஜா?; பிரச்சினை கோர்ட்க்கு போனது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1977 முதல் கடந்த 42 வருடங்களாக சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசைஞானி இளையராஜா.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ரெக்கார்ட்டிங் பணிகளை செய்து வருகிறார்.

அங்கு இசையமைப்பதற்கு ஒப்பந்தப் பத்திரமும் போட்டுள்ளார்.

ஆனால் இவர் வாடகை கொடுப்பத்தில் என கூறப்படுகிறது. அதாவது இளையராஜா இசையமைக்கும் படங்களின் தயாரிப்பாளர்களே இடத்திற்கான வாடகையையும் கொடுப்பதாக தெரிகிறது.

அண்மைக்காலமாக இளையராஜா அவ்வளவாக படங்களுக்கு இசையமைப்பதில்லை. எனவே வாடகை கொடுக்காத காரணத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

பிரசாத்தின் பேரன், சாய் பிரசாத் என்பவர் ஸ்டூடியோ நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்த மோதல் அதிகரித்துள்ளது.

இதனால் இளையராஜாவுக்கு இசையமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா, சீமான், பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆனால் அங்கு சமரசம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

இதனையடுத்து பிரசாத் ஸ்டூடியோ மீது, இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பியுள்ளது.

ஓவரா பேசி சிக்கிய பாக்யராஜ்; பெண்கள் எதிர்ப்பு.. ஆண்கள் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‛கருத்துக்களை பதிவு செய்’ பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பாக்யராஜ் பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி பேசியிருந்தார்.

24 மணி நேரமும் செல்போனில் மூழ்கி இருக்கும் பெண்கள் மீதும் தவறுள்ளது. யாரை நம்புவது என தெரியாமல் அவர்கள் வழி தவறி போய்விடுகின்றனர்.

மேலும் ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என பாக்யராஜ் கூறியிருந்தார். இதனை பெண்கள் அமைப்புகள் எதிர்த்தன.

மேலும் பாக்யராஜ் மீது போலீசிலும் புகார் கொடுக்க தமிழக மகளிர் ஆணையமும் பாக்யராஜிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து பாக்யராஜும் தன் பக்க விளக்கத்தை கொடுத்தார்.

இந்த நிலையில் பாக்யராஜ் பேசியதில் தவறில்லை என ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சிம்புவை அடுத்து லாரன்ஸ இயக்கும் வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல நட்சத்திரங்கள் இணைந்துள்ள பார்ட்டி படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது காஜல் அகர்வாலை வைத்து வெப் சீரிசை இயக்கி வருகிறார்.

இதன் பின்னர் சிம்பு நடிக்கவுள்ள மாநாடு படத்தை இயக்குவார் என நம்பலாம்.

இந்த படத்தை முடித்துவிட்டு ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

கடவுளின் அருளால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நச்சுன்னு நாலு பாட்டு..; டிசம்பர் 7ல் தர்பார் பாடல்கள் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தை முருகதாஸ் இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

அண்மையில் சும்மா கிழி… நான்தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு என்ற பாடல் வெளியாது. இது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் வரும் 7ல், சென்னை, நேரு ஸ்டேடியத்தில், மாலை 5:00 மணிக்கு, பாடல் வெளியீட்டு விழா நடக்கும் என அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் 4 பாடல்கள் + ஒரு தீம் மியூசிக் இடம்பெற்றுள்ளது.

சும்மா கிழி, கண்ணம்மா, ஷோ தி தர்பார், நீதி என 4 பாடல்கள் உள்ளது. இதில் 2 பாடல்கள் 3 நிமிடத்திற்கு குறைவாகவும் மற்ற இரு பாடல்கள் 4 நிமிடத்திற்கு குறைவாக உள்ளன.

More Articles
Follows