கஜா பாதிப்பு; 1 கோடியே 1 லட்சம் கொடுத்த 2.0 பட நிறுவனம் லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் கஜா புயல் தமிழகத்தின் 7 மாவட்டங்களை கடுமையாக தாக்கியது.

புயல் கரையை கடந்து ஒரு வாரம் ஆன நிலையிலும் மக்கள் இன்னும் முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

இந்நிலையில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் நிறுவனமான லைகா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடியே 1 லட்சம் ரூபாயை அளித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் லைகா நிறுவனம் பதிவிட்டுள்ளது.

Lyca Subaskaran contributes towards Cyclone Gaja relief

கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 லட்சத்தை வாரி வழங்கிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கஜா புயலால் நாகை, வேதாரண்யம், தஞ்சை, திருவாரூர், கோடியக்கதை திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதனால் மக்கள் தங்கள் வாழ்வதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சமும், விஜய்சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் வழங்கியுள்ளனர்.

மேலும் வைரமுத்து 5 லட்சமும், இயக்குனர் ஷங்கர் 10 லட்சமும் வழங்கியுள்ளனர்.

கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குக் ரூ.5 லட்சம் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Rajinikanth donated Rs 50 Lakhs to Gaja Cyclone Relief

பீர் பாட்டிலுடன் சமூகப் பொறுப்புள்ள விஷால்.?; ராமதாஸ் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடித்துள்ள “அயோக்யா” பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் போலீஸ் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு, கையில் பீர் பாட்டிலை வைத்திருக்கிறார்.

வெங்கட் மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.

பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரை நீக்கச் சொல்லியும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது…

பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!

‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!

என கிண்டலடிக்கும் வகையில் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

PMK Ramadoss condemns Vishal and Ayogya First look poster

அயோக்ய பயலே… நண்பர் விஷாலை திட்டிய விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷாலின் ‘அயோக்யா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகிறது.

அப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி ஹைதராபாத், விசாகபட்டினம் தொடர்ந்து இப்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்காக தனது தோற்றத்தை கடின முயற்சியால் ஆஜானுபாகுவாக மாற்றியிருக்கிறார் விஷால்.

தெலுங்கில் அனைவரின் மனதையும் கவர்ந்த ராஷி கண்ணா இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் B.மது தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். R.பார்த்திபன், KS ரவிக்குமார், சச்சு, வம்சி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் –

இசை – சாம் CS,
ஒளிப்பதிவு – VI கார்த்திக்,
கலை – SS மூர்த்தி,
படத்தொகுப்பு – ரூபன்,
சண்டைப்பயிற்சி – ராம் லக்ஷ்மன்,
நடனம் – பிருந்தா ஷோபி,
உடை உத்ரா மேனன்,
பாடல்கள் – யுகபாரதி-விவேக்,
மூலக்கதை – வெக்காந்தம் வம்சி,
தயாரிப்பு மேற்பார்வை – முருகேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் – ஆண்டனி சேவியர்.

ஜனவரி 2019-ல் ‘அயோக்யா’ உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நடிகர் விஷால் தன் ட்விட்டர் பதிவிட்டு இருந்தார். இதை கண்ட விஷாலின் நண்பரும் நடிகருமான விஷ்ணு விஷால்.. … அயோக்ய பயலே ஆல் தி பெஸ்ட் என அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்துள்ளார்.

Vishnu Vishal reaction to Vishals Ayogya first look poster

VISHNUU VISHAL – VV‏Verified account @vishnuuvishal
VISHNUU VISHAL – VV Retweeted Vishal
Ayogya payale;);) all d best:) looks good

கஜா பாதிப்பு.; ரசிகர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்திய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, புதுக்கோட்டை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மரங்கள் அனைத்தும் வேறோடு சாய்ந்துள்ளன.

விவசாயிகளின் 20 ஆண்டுகால உழைப்பு வீணாகியுள்ளது.

பிரபலங்கள் பலரும் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.

சிவகுமார், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், டைரக்டர் ஷங்கர், ஜிவி. பிரகாஷ் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்துள்ளனர்

இந்நிலையில் விஜய் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருக்கும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதை விஜய்யின் மக்கள் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து நிவாரணப் பணிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பற்ற சமூகம்.; வெறுப்பேற்றும் மீம்ஸ்.. சூடான நடிகர் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இவ்வளவு வெறுப்புணர்வு கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம்..? என்று கவலையாக இருந்தது என நடிகர் சூர்யா எழுதி உள்ள கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.

ஒரு தமிழ் நாளிதழில் நடிகர் சூர்யா எழுதியுள்ள கட்டுரை இது…

புயலுக்கு கஜான்னு ஆம்பளைப் பேரு வெச்சா இப்படித்தான். குடிகாரன் மாதிரி இங்கே வர்றேன்னு சொல்லிட்டு வேற எங்கேயோ போறது.

இதே சுஜான்னு பொம்பளப் பேரு வெச்சிருந்தா ஸ்ட்ரெயிட்டா இந்நேரம் எல்லாருக்கும் சங்கு ஊதி சோலியை முடிச்சிருக்கும் – இப்படி ஒரு வாட்ஸ்அப் பதிவு பலரிடமிருந்து நமக்கு வந்திருக்கும். நாமும் பலருக்கும் அதைப் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்திருப்போம்.

இந்தப் பதிவை ஸ்மைலி போட்டு நகைச்சுவையாகப் பெரும்பாலானவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தபோது, தமிழகத்தின் ஏழு மாவட்ட மக்களின் வாழ்க்கை, கஜா புயலால் சூறையாடப்பட்டிருந்தது.

லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. தென்னை மரங்கள் புயல் காற்றால் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு, வாழ்வாதாரமே அழிந்து போயிருந்தது.

கொத்துக்கொத்தாக வீழ்த்தப்பட்ட வாழை மரங்கள், மழையிலும் காற்றிலும் நிலைகுலைந்து போன பயிர்கள் என இழப்புகளை நினைத்து மக்கள் துடித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு வானிலை அறிவிப்பு வந்தால், உடனே மாணவர்கள் விடுமுறை கேட்பதுபோல வருகிற சாதாரண மீம்கள் கூட நகைச்சுவை அல்ல;

கூடவே நம்முடைய அலட்சியத்தையும் அறிவீனத்தையும் சேர்த்தே பகிர்கிறோம். ஒரு புயல் என்பது நாடு எதிர்கொள்ளும் பேரிடர். வாழ்வாதாரத்தை அழித்து, மக்களைத் துன்பத்தில் தத்தளிக்கவிடுகிற இயற்கைச் சீற்றத்தை விடுமுறை தினமாக நம் குழந்தைகளுக்குக் கடத்துவது ஆபத்தானது.

மது அடிமைகளுக்குக் குடிக்காமல் இருந்தால் எப்படி கை கால்கள் நடுங்குமோ, அதுபோலத் தங்களுடைய அபத்த நகைச்சுவைக்கு லைக், ஷேர், கமென்ட் அதிகமாகக் கிடைப்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் கீழிறங்கத் தயாராக இருக்கிறோம்.

நகைச்சுவை என்பது மற்றவர்களைக் காயப்படுத்துவது என்று யார் இந்தத் தலைமுறைக்குச் சொன்னது?

சென்னையில் கடந்த ஆண்டு ஒரு பிரபல ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டு, சில நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

அப்போது தீப்பற்றி எரிகிற கடையின் புகைப்படத்தைப் போட்டு, மனைவிகூட புடவை எடுக்க வந்து மணிக்கணக்கில் காத்திருந்த கணவர்களின் வயிற்றெரிச்சல்தான் இந்தத் தீ விபத்து என்ற பதிவை ஸ்மைலி போட்டு சமூக ஊடகங்களில் பல ஆயிரம் பேர் பகிர்ந்திருந்ததை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

மிகப் பெரிய இழப்புகளைக்கூட குரூர நகைச்சுவை ஆக்குவதும், அதை மற்றவர்கள் பகிர்வதும், கவலைகொள்ள வேண்டிய செயல் மட்டுமல்ல, கண்டிக்க வேண்டிய செயலும்கூட. ஊரே தீப்பற்றி எரியும்போது பிடில் வாசிப்பது என்பது இதுதான்.

ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்கும் நகைச்சுவை உணர்வு, இணையத்தில் ஒரு தொற்றுநோயைப் போலப் பலரின் தனிப்பட்ட வாழ்வைப் பலி கேட்கிறது. பொறுப்புணர்வற்ற பதிவுகளைப் பரப்புவதை நிறுத்தினால், அவை உருவாவது தானாகவே குறையும்.

இன்னொரு பக்கம் பிரபலங்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மீது சமூக ஊடகங்கள் நிகழ்த்துகிற அத்துமீறல் ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது.

ரயிலில் பயணிக்கும் போது கழிப்பறைகளில் ஆபாசமாகக் கிறுக்கி வைத்த வக்கிரபுத்திக்காரர்கள் கூட யார் கண்ணிலும் படாமல்தான் அதைச் செய்தனர்.

இன்று இணையத்தில் காணக் கிடைக்கிற பல்வேறு விதமான கமென்ட்டுகளில் வெளிப்படுகிற வக்கிர மனநிலை அச்சமூட்டுகிறது.

சமூக ஊடகங்கள் ஒருவகையில் நம்மிடம் கும்பல் மனோபாவத்தை வளர்த்தெடுக்கின்றன. எங்கிருந்தும் எவர் மீதும் பாயக் காத்திருக்கும் குரூர மனோநிலைக்கு என்னுடைய தந்தையும் சமீபத்தில் இலக்கானார்.

ஒரு விழாவில் பங்கேற்கச் சென்றவரிடம் குறுக்கிட்டு, தன்படம் எடுக்க முற்பட்டார் ஓர் இளைஞர். என் தந்தையார் அந்த இளைஞரின் செல்பேசியைத் தட்டிவிட்டார்.

அந்த சம்பவத்துக்கு இணைய உலகம் ஆற்றிய எதிர்வினை, அவருடைய 75 ஆண்டு கால வாழ்வையே கேலி செய்தது. அந்த இளைஞரிடம் அவர் கனிவாக நடந்து கொண்டிருக்கலாம் என்பதே என் கருத்தும்.

அந்த நிகழ்வுக்குப் பின்னர் என் தந்தையின் கருத்தும் அதேதான். ஆனால், அந்த ஒரு நாளுக்குள் மட்டும் அவர் மீது எவ்வளவு தாக்குதல்கள்? விமர்சனம் என்ற பெயரில் காழ்ப்புணர்வைக் கொட்டுவதும், வயதுக்கும் அனுபவத்துக்கும் எவ்விதமான மதிப்பையும் வழங்காமலிருப்பதுதான் எதிர்வினையா?

பிரபலமானவர் என்பதால் அனுமதியின்றி புகைப்படம் எடுக்கலாம் என்று நினைப்பது, தனிப்பட்ட உரிமையை மீறுகிற செயல். இறப்பு நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்தப் போகுமிடத்திலும், சிலர் தன்படம் எடுக்க கட்டாயப்படுத்தும்போது அந்தச் சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தடுமாறுவது எனக்கே தனிப்பட்ட அனுபவம்.

விமான நிலையத்தில் கழிப்பறையை உபயோகித்துவிட்டுத் திரும்பினால், அங்கும் கேமராவோடு நிற்கிறார்கள். படித்தவர்கள், படிக்காதவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாத் தரப்பினருமே இத்தகைய அத்துமீறலைச் செய்வதும், இத்தகைய தர்மசங்கட சூழலைப் பிரபலங்கள் எதிர்கொள்வதும் அன்றாட நிகழ்வுகள்.

பொதுவெளியில் பொறுமையைத் தவறவிட்ட ஒரு கணத்துக்காக, ஒரு மனிதரின் ஒட்டுமொத்த வாழ்வையும் துச்சமாகத் தூக்கி எறிந்து ஆபாசமாகத் தாக்க முடியும் என்றால் நாமெல்லாம் யார்? நகைச்சுவை என்கிற பெயரில் உருவான மீம்களும், விமர்சனம் என்கிற பெயரில் வெளிப்பட்ட வார்த்தைகளைப் படித்தபோது, இவ்வளவு வெறுப்புணர்வு கொண்ட சமூகத்திலா வாழ்கிறோம் என்று கவலையாக இருந்தது.

இன்று சமூக ஊடகத்தில் அத்துமீறி கீழ்த்தரமான தனிமனிதத் தாக்குதல்கள் நிகழும்போது, கண்ணியமிக்கவர்கள்கூட அமைதி காக்கிறார்கள்.

காரணம், சமூக ஊடகங்களில் பொறுப்பற்று நடந்து கொள்பவர்களைக் கண்டிப்பது என்பது, தேன்கூட்டில் கைவைப்பதுபோல ஆபத்து என்று அவர்களும் கருதுகிறார்கள். வன்மத்தை மனதில் தேக்கி வைத்துக் காத்திருந்து அடித்து விடுகிறார்கள் என்று பயம் கொள்ளும் சூழல் எல்லோரிடத்திலும் இருக்கிறது.

இன்னொரு பக்கம் இன்னொரு கேள்வியைக் கேட்டுக்கொள்வோம். சமூக வலைதளங்களில் இன்று ஆதிக்கம் செலுத்துவது யார்? நாம்தான். நம்மைப் பார்த்து நாமே அஞ்சும் நிலை அவலம் இல்லையா?

தொழில்நுட்பத்தைக் குறைகூற ஏதுமில்லை. இதே இணையவெளியில்தானே சென்னை வெள்ளத்தின்போது ஆயிரக்கணக்கான மீட்பர்கள் களமிறங்கினார்கள்? கஜா புயலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் எண்ணமுள்ளவர்களையும் ஒன்றிணைத்ததும் இதே சமூக ஊடகம்தான்.

ஆக, பிரச்சினை தொழில்நுட்பத்தின் மீது இல்லை. பயன்படுத்தும் நம்மிடம் வெளிப்படும் மனப்பான்மையில்தான் தீதும் நன்றும் இருக்கிறது.

பூனைக்கு யாரேனும் மணி கட்டுவார்கள் என்று காத்திருப்பதில் பயன் இல்லை. ஒரு புயலைக்கூட அதன் தீவிரத்தோடு அணுகும் நிலையிலிருந்து நாம் தவறுகிறோம் என்றால், எவ்வளவு கீழே நாம் இறங்கிக் கொண்டிருக்கிறோம்? வெறுப்பை விதைப்பதில் காட்டுகிற ஆர்வம், பரப்புவதில் இருக்கிற துடிப்பு, அதைத் தடுப்பதிலும் இருக்க வேண்டும். அது நம் அனைவரின் பொறுப்பு.

பின்குறிப்பு: இவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு அவரை அட்மிட் பண்ணு என தினம் தினம் தாக்குவதற்குப் புதிய இலக்குகளைத் தேடி அலையும் சமூக ஊடகங்களில் என்னையும் அட்மிட் செய்யக்கூடும் என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டே இதை எழுதுகிறேன்! என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows