ரஜினி-கமலை அடுத்து மீண்டும் விஜய்யுடன் பிரபல நிறுவனம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் விஜய்யுடன் முதன்முறையாக கீர்த்தி சுரேஷ் மற்றும் அபர்ணா வினோத் இருவரும் நடித்து வருகின்றனர்.
தற்போது இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக விரைவில் வெளிநாடுகளுக்கு செல்லவிருக்கின்றனர்.

இப்படத்தை முடித்துவிட்டு, சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கக்கூடும் என செய்திகள் வந்தன.

ஆனால் விஜய் 61 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.

தற்போது ரஜினியின் 2.ஓ மற்றும் கமலின் சபாஷ் நாயுடு படங்களை லைகா தயாரித்து வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரஜினி ரசிகர்களுக்கு மதிப்பு அளித்து மன்னிப்பு கேட்ட தாணு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கலைப்புலி தாணு கூட்டணியில் உருவாகியுள்ள படம் கபாலி.

இப்படத்தின் பாடல்களை நேற்றே இணையத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் இன்று ஜுன் 12ஆம் தேதி மிகச்சரியாக காலை 11.06 மணிக்கு இப்படத்தின் இரண்டாவது டீசரை வெளியிடவிருந்தனர்.

ஆனால், அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே, டீசரை தற்போது வெளியிட முடியவில்லை. இன்னும் சில நாட்களில் வெளியிடவுள்ளோம் என அறிவித்திருக்கிறார் தாணு.

இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி திரையுலகில் நடைபெறுவது வழக்கம்தான். ஆனால் மற்றவர்களோ, கடைசி நொடி வரை காக்க வைத்துவிட்டு, அதன் பின்பே அறிவிப்பார்கள்.

ஆனால் ரஜினி ரசிகர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, முன்பே அறிவித்து இருப்பது தாணுவின் பெருந்தன்மையை காட்டுகிறது.

ரஜினி மகள் சௌந்தர்யா வெளியிட்ட கபாலி பாடல்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிக்க மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கபாலி.

இப்படத்தின் பாடல்களை நாளை ஜூன் 12ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்தனர்.

ஆனால், நேற்றே இப்படத்தின் நெருப்புடா பாடல் மற்றும் ரஜினிகாந்த் பேசும் பன்ச் டயலாக் உள்ளிட்டவை வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது.

இந்நிலையில், திடீரென் இப்படத்தின் பாடல்களை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக நடைபெற்ற எளிமையான விழாவில் தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

இதன் முதல் ஆடியோ சி.டி.யை சௌந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

நாளை முதல் இப்படத்தின் ஆடியோ சி.டி. கடைகளில் கிடைக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கமல்-சிம்பு நாயகியை வளைத்துக் கொண்ட சித்தார்த்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜில் ஜங் ஜக்’ படத்தை தொடர்ந்து அதிரடியாக நான்கு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சித்தார்த்.இதில் சசி இயக்கத்தில் ஜிவி. பிரகாஷுடன் ஒரு படம்.

இதனையடுத்து, ‘கப்பல்’ இயக்குனர் கார்த்திக் ஜி.க்ரிஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு ‘சைத்தான் கி பச்சா’ என இந்தியில் பெயரிட்டுள்ளனர். (பப்ளிகுட்டிக்கா?)

இதனைத் தொடர்ந்து முதன் முறையாக ‘கம்மராசம்பவம்’ என்ற மலையாள படத்தில் திலீப்புடன் இணைந்து நடிக்கிறார்.இந்த இரு படங்களை தொடர்ந்து, ஒரு படத்திற்கு ‘The House Next Door’ என்ற தலைப்பிட்டுள்ளனர்.இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.

Viacom18 மற்றும் Etaki Entertainment இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை மிலண்ட் ராவ் இயக்கவுள்ளார்.இதில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக சித்தார்த் தெரிவித்துள்ளார்.

கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன் மற்றும் சிம்புவுடன் இது நம்ம ஆளு ஆகிய படங்களில் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.ஏற்கெனவே ‘ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு வேண்டாம் என தமிழ் மொழி அல்லாத வார்த்தைகளில் பெயரிட்டார் சித்தார்த்.

தற்போதும் அவரது படங்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை 28 இரண்டாம் பாகமும்… சூர்யாவின் சிக்ஸர் விளக்கமும்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா மற்றும் வெங்கட் பிரபு இணைந்த மாசு என்கிற மாசிலாமணி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே தனக்கு பேர் வாங்கி கொடுத்த ‘சென்னை 600028’  படத்தின் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்து சிக்ஸர் அடிக்க இருக்கிறார் வெங்கட் பிரபு.

முதல் பாகத்தில் நடித்த நிறைய நட்சத்திரங்கள் இதிலும் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக சில தினங்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது இதுகுறித்து சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“சென்னை 28 படத்தில் எந்த கேரக்டரிலும் சூர்யா நடிக்கவில்லை. அது தொடர்பாக யாரும் அவரை அணுகவில்லை” என தெரிவித்துள்ளனர்.

‘தனுஷுக்கு சப் போர்ட்; ஆனந்திக்கு அப்பா…’ கலக்கும் சின்னி ஜெயந்த்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிறைய வருடங்களாக காலேஜ் பையனாக வந்து காமெடி செய்தவர் சின்னி ஜெயந்த். அதனை தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர், பிரபுசாலமன் இயக்கியுள்ள தொடரி படத்தில் நடித்துள்ளார்.

இதில் ரயில்வே கண்ட்ரோல் ரூம் ஆபிசராக வருகிறாராம்.

னுஷ்-கீர்த்தியின் லவ்வுக்கு வழக்கம்போல் போல் சப்போர்ட் செய்யும்  கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இதனையடுத்து, பிரபுசாலமன் தயாரிப்பில் அன்பழகன் இயக்கி வரும் ரூபாய்படத்திலும் நடித்திருக்கிறார்.

இதில் பணத்திற்கு அடிமையாகும் இருக்கும் ஒரு வயதான கேரக்டரில் நடித்துள்ளார்.

அமிதாப்பின் ‘பிக்குபடத்தின் பாதிப்பை இதில் பிரதிபலித்துள்ளதாகவும் கூறியிருக்கிறார் சின்னிஜெயந்த்.

இவரின் மகளாக ‘கயல்ஆனந்தி இப்படத்தில் நடித்துள்ளார் என்பதுதான் ஹைலைட்.

More Articles
Follows