சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தலைப்புக்கு வக்கீல் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தை இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கி வருகிறார். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதே படத்தலைப்பில் தெலுங்கிலும் ஒரு படம் தயாராகிவருகிறது.

அதுபற்றிய விவரம் வருமாறு…

நான் “Tribal Arts” நிறுவனம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன் (Mem No: 3812). எனது நிறுவனத்தின் பெயரில் கடந்த 04.07.2017- அன்று “ஹீரோ” என்ற படத்தலைப்பினை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து, முறையாக புதுப்பித்து 03.06.2020-ம் ஆண்டு வரை உரிமம் பெற்றுள்ளேன் (Title Ref No : 7123) .

“ஹீரோ” என்ற எங்களது தலைப்பில் ஆனந்த் அண்ணாமலையின் எழுத்து – இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் சில மாதங்களாக தமிழ் மொழியில் KJR studios என்கிற தயாரிப்பு நிறுவனம் “ஹீரோ” என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை (சிவகார்த்திகேயன்) வைத்து படம் தயாரிப்பதாக பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

இதனை கண்டு தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகிய போது, அவர்கள் கடந்த 16 ஏப்ரல் 2019 அன்று எங்களது தலைப்பினை பயன்படுத்திவரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக் கூடாது என்று கெளரவ செயலாளர் திரு. எஸ். எஸ். துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து, கடிதத்தின் நகலையும் எங்களுக்கு கொடுத்து உறுதி அளித்தார்கள்.

ஆனால் KJR studios தயாரிப்பு நிறுவனம், தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிக்கை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் “ஹீரோ” என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர்.

ஆகவே இந்த கடிதத்தின் வாயிலாக KJR studios தயாரிப்பு நிறுவனத்திற்க்கு ADVOCATE NOTICE அனுப்பபட்டுள்ளது.

Lawyer Notice to KJR Studios for Hero movie title issue

தொழிற்சாலை பகுதிகளில் மரங்களை நடும் கார்த்தியின் உழவன் பவுண்டேசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கார்த்தி அவர்களின் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பானது வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்து பல அத்தியாவசியமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

ஏற்கெனவே உழவர் விருதுகள் என்ற பெயரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட உழவர்கள் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து உழவர்களை கெளரவப்படுத்தி அடையாளப்படுத்த அவர்களுக்கு தலா ஒரு இலட்சத்திற்கான காசோலையும் விருதுகளையும் வழங்கினர்.

அதேபோல் மரம் கருணாநிதி அவர்களின் சுற்றுச்சூழல் சேவைக்காக அவருக்கு 50 ஆயிரம் வழங்கினர்.

பிறகு உழவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக திருவண்ணாமலையில் 83 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள விண்ணமலை ஏரியை சீரமைத்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்திற்கான கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு 1.50 இலட்சத்திற்கான பரிசுப் போட்டி அறிவித்துள்ளது.

தற்போது காற்று மாசுபாடுகளை குறைக்கவும் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் தொழிற்சாலைகள் அதிகம் நிரம்பியுள்ள மறைமலைநகரில் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் ஆம்பினால் ஆம்னிகனெக்ட் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இன்று தொடங்கப்பட்டது.

இந்த மரக்கன்றுகள் நடும் பணியை மறைமலை நகராட்சி ஆணையர் துவக்கி வைத்தார். இதில் நகராட்சி பொறியாளர், ஆம்பினால் கம்பெனியின் நிர்வாகிகள், உழவன் ஃபவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர்.

Actor Karthis Uzhavan Foundation Social service news

காந்தியின் தனிச் செயலர் வெளியிட்ட ‘வெல்கம் பேக் காந்தி’ பட பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வெல்கம் பேக் காந்தி’ படத்திற்காக வைக்கம் விஜயலட்சுமி பாடிய படலை வெளியிட்டார் மகாத்மா காந்தியின் தனிச் செயலர் திரு வி. கல்யாணம்.

‘ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்…”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது.

இந்தப் பாடலுக்கு ஏற்கனெவே ஏ ஆர் ரஹ்மான், விஷால் சேகர் போன்ற புகழ்பெற்ற இசைஅமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். கிஷோர் குமார் அமிதாப் பச்சன் போன்றவர்களால் அவ்வப்போது சில தேசபக்தி படங்களுக்காகப் இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி நவகாளியில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் இந்தப் பாடலைப் பாடி அவரை வரவேற்றனர்.

இப்பாடலின் ஆடியோ பதிவினை மகாத்மா காந்தியிடம் தனிச்செயலராக பணிபுரிந்த 98 வயதான திரு. வி. கல்யாணம் அவர்கள் அண்மையில் வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.

இப்போது இந்தப்பாடலை ‘வெல்கம் பேக் காந்தி’ (இந்தி மற்றும் ஆங்கிலம்) படத்திற்காக புகழ்பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி அவர்கள் பாடியுள்ளார்.

படத்தினை காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர் தயாரித்துள்ளனர்.

காந்தி அடிகளின் 150 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டுவரும் இந்த தருணத்தில் இப்பாடலை தங்கள் படத்தின் மூலம் மீண்டும் ஒலிக்க வைத்திருப்பதன் மூலம் தேசத்தந்தைக்கு ஒரு புகழ் அஞ்சலியைச் செலுத்தியுள்ளோம் என்கின்றனர் படத்தை தயாரித்துள்ள ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவனத்தினர்.

இப்பாடலுக்கான காட்சிகள் இந்தியாவெங்கும் பல இடங்களில் ஏற்கனெவே படமாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவு பெற்று படம் வெளியாகும் தருணத்தில் உள்ளது.

வந்தே மாதரம்

தங்கள் அன்புள்ள

அ.பாலகிருஷ்ணன் (இயக்குனர், தயாரிப்பாளர்)

Vaikom Vijayalakshmi sings for Welcome Back Gandhi movie

KGF ஹீரோ யஷ் உடன் ஷாம் மோதும் ‘சூர்ய வம்சி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூர்யவம்சி’.

பிரபல இயக்குனர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான ரோலில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மற்றும் தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் கேஜிஎப் சாப்டர் 1.

இந்தப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார் நடிகர் யஷ்.

இந்த நிலையில் யஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள இந்த சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

நேர்கொண்ட பார்வை கொண்ட துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.

ராதிகா யஷ்ஷை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார்.

ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்கார பையன் ஷாமைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்ஷிற்கு தெரிய வருகிறது.

ஷாம் ஒரு மிகப்பெரிய டான்.. அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை காதல், காமெடி, ஆக்சன் என கமர்ஷியல் பார்முலா கலந்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ்ராவ்.

KGF fame Yash and Shaam starring Surya Vamsi

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

ஒளிப்பதிவு: ஆண்ட்ரூ
இசை: ஹரிகிருஷ்ணா
கலை: T.ஸ்ரீனிவாஸ்
படத்தொகுப்பு: KM.பிரகாஷ்
இணை தயாரிப்பு: ஷபீர் பதான்
தயாரிப்பு : கே.மஞ்சு
இயக்கம்: மகேஷ்ராவ்

படப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீ வி பிரகாஷ் குமார் நடிப்பில் Axess Film Factory சார்பில் G டில்லி பாபு தயாரிக்கும் படம் “பேச்சுலர்”. இயக்குநர் சசியின் இணை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் பரபரப்பை கிளப்பிய நிலையில் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கோலகலமாக நேற்று (செப்டம்பர் 30) துவங்கியது.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் படம் பற்றி பகிர்ந்து கொண்டது…

படத்தை பற்றிய நல்ல மனங்களின் வாழ்த்து பரவிய சூழலில் நேற்று கொண்டாட்டத்துடன் சென்னையில் படப்பிடிப்பை துவங்கியுள்ளோம். படத்தின் முக்கிய பகுதிகளை இங்கு படமாக்கிவிட்டு மேலும் சில பகுதிகளை கோயம்புத்தூரில் தொடர உள்ளோம். ஆரம்பம் முதலே படத்தின் மீது நடிகர் ஜீ வி பிரகாஷ் கொண்டிருக்கும் ஆர்வம் பெரும் உற்சாகத்தை தருகிறது. அவராகவே மீண்டும் மீண்டும் பல டேக்குகளை கேட்டு நடிக்கிறார். நாங்கள் திருப்தியடைந்த போதிலும் அவர் டேக்குகள் கேட்டு நடிக்கிறார். படம் நன்றாக வர வேண்டும் என்பதில் அவர் பெரும் ஆர்வத்துடன் இருக்கிறார்.
அவரது இந்த ஆர்வம் மொத்த படக்குழுவையும் உற்சாகப்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் காட்சிகளை படமாக்கிய பிறகு பெங்களூரில் படத்தின் வேறு பகுதிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்றைய இளைஞர்களின் வெகு இயல்பான காதலை, அப்பட்டமாக சொல்லக்கூடிய காதல் கதை தான் “பேச்சுலர்”. ஜீ வி பிரகாஷ் நாயகனாகவும் திவ்ய பாரதி நாயகியாகவும் நடிக்கிறார்கள். யூடியூப் நக்கலைட்ஸ் மூலம் பிரபலமான அருண்குமார் உட்பட பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள். ஜீ வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார். Axess Film Factory சார்பில் G டில்லி பாபு இப்படத்தினை தயாரிக்கிறார்.

தமன்னாவின் ‘பெட்ரோமாக்ஸ்’ சொல்லும் விஜய்யின் குட்டிக் கதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அதே கண்கள்’ இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பெட்ரோமாக்ஸ்’.

தெலுங்கில் டாப்ஸி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வெளியான ‘அனந்தோ பிரம்மா’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.

ஈகிள் ஐ புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தில் தமன்னா, யோகிபாபு, மன்சூர் அலிகான், பகவதி, காளி வெங்கட், சத்யன், முனீஸ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்க, டானி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சென்சாரில் யுஏ சர்ட்டிபிகேட் பெற்றுள்ள இப்படம் அக்டோபர் 11 தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் இப்பட டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலரில் விஜய் ஒரு குட்டி கதை சொல்வது போல் காட்சிகள் உள்ளன.

More Articles
Follows