ரஜினிக்காக படையப்பா2-வை பட்டைத் தீட்டும் கே.எஸ். ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் கேரியரில் மிக முக்கியமான படம் படையப்பா.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய இப்படத்தல் சிவாஜி கணேசன், ரஜினி, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன், சௌந்தர்யா, நாசர், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது.

தமிழ் சினிமா வசூல் வரலாற்றில் மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 2ஆம் பாகத்தை இயக்க கே.எஸ். ரவிக்குமார் முன்வந்துள்ளாராம்.

படையப்பா 2 படத்தின் ஒன்லைனை ரஜினியிடம் சொல்ல அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

கார்த்திக் சுப்பராஜ் படத்தில் தற்போது நடித்து வரும் ரஜினி, அரசியலில் இறங்குவதற்கு முன் தான் ஒப்புக் கொண்ட சில படங்களை முடிக்கத் திட்டமிட்டுள்ளராம்.

அதற்குள் தமிழக சட்டமன்ற தேர்தல் வராவிட்டால் படையப்பா 2 சாத்தியமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

படையப்பா படத்தில் நடித்த சிவாஜி கணேசன், சௌந்தர்யா, மணிவண்ணன் ஆகியோர் தற்போது உயிருடன் இல்லை. அதுபோல் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணனும் படத்தில் இறந்து விடுவார்.

எனவே படையப்பா 2 எப்படி இருக்குமோ..?

KS Ravikumar works for Rajinis Padaiyappa 2 Script

ஹாலிவுட்டில் புட்பால் விளையாட்டை படமாக்கும் கமலின் சீடர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமலின் உதவியாளரான அம்ஜத் மீரான் என்பவர் பிரேசில் என்று தலைப்பிடப்பட்டுள்ள ஹாலிவுட் படத்தை இயக்கி வருகிறார்.

இவர் ஏற்கெனவே ஏராளமான குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்கள் இயக்கியுள்ளார். மேலும் இவர் ஒரு அனிமே‌ஷன் கலைஞர் ஆவார்.

சென்னை மற்றும் உலகின் பல பகுதிகளில் உருவாகும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கிறாராம்.

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக உலகின் சிறந்த 3 கிராபிக்ஸ் நிறுவனங்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Kamals asst Amjath Meeran to direct hollywood Movie titled Brazil

Exclusive : சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்-அட்லி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர். முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை அடுத்த விஜய் யார் இயக்கத்தில் நடிக்க போகிறார்? என்ற கேள்வி நெடு நாட்களாக கோலிவுட்டில் வலம் வருகிறது.

இந்நிலையில் மீண்டும் அட்லியுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கெனவே இந்த கூட்டணி தெறி மற்றும் மெர்சல் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் 63வது படமாக உருவாகும் இப்படத்தை பிரபுவின் சிவாஜி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒருபுறம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியின் மன்னன், சந்திரமுகி, அஜித்தின் அசல் ஆகிய படங்களை தயாரித்த நிறுவனத்திற்கு வெகு நாட்களாக ஒரு படம் செய்ய வேண்டும் என விரும்பினாராம் விஜய். எனவே இந்த நிறுவனத்திற்கே கூடுதல் வாய்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

Thalapathy 63 likely to direct by Atlee produced by Sivaji Productions

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக திட்டம் தீட்டும் திவ்யா சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யராஜ் மகள் திவ்யா தென் இந்தியாவில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்.

அவர் இப்பொழுது உலகப் புகழ் தொண்டு நிறுவனமான அக்சயா பாத்ராவின் தூதுவர்.

அக்சய பாத்ரா (Akshaya Patra) இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

இந்தியாவில் 12 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது, 36 இடங்களில் சமையல் செய்து பல லட்சம் குழந்தைகளுக்கு இலவசமாக ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குகிறது.

திவ்யா சத்யராஜ் இன்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களை சந்தித்து தமிழ் நாட்டின் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு வழங்க அரசாங்கம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இது குறித்து திவ்யா கூறியதாவது…

“ஆரோக்கியமான வாழ்வு வசதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்ற நிலை மாற வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக உள்ளது.

குழந்தைகளுக்கு தேவை உணவு மட்டும் அல்ல, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு.

அக்ஷ்ய பாத்ராவின் ஆரோக்கியமான மதிய உணவு திட்டத்தால் தமிழ்நாட்டின் குழந்தைகளும் பயன் அடைய வேண்டும். இதற்கு அரசாங்கம் உதவ வேண்டும்.”என கூறினார்.

Sathyarajs Daughter Nutritionist Divya met TN Minister Sengottaiyan

சித்தார்த்-ஜிவி. பிரகாஷ் இணையும் படத்தை தொடங்கினார் சசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி ‘இரட்டை கொம்பு’ என்ற ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார்.

ஆனால் அந்த படம் என்ன ஆனதோ? தெரியவில்லை.

தற்போது சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

இப்படத்திற்கு சித்துகுமார் இசையமைக்க பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார்.

மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

Siddharth and GV Prakash join hands with director Sasi

சிவாஜி-கமலுக்கான படம்தான் *சீதக்காதி*; விஜய்சேதுபதி ஓபன் டாக்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக கலை பகுப்பாய்வு செய்யப்படும்போது அல்லது பாராட்டப்படும்போது, அது நிச்சயமாக ‘Soulful’ என்ற வார்த்தையால் போற்றப்படும்.

ஒரு உன்னத கலைஞரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வகையில் வாழ்நாள் மைல்கல் சாதனையாக ஒரு படம் அமையும். அப்படிவிஜய் சேதுபதி கருதும் ஒரு கதாபாத்திரத்துக்குள் வந்திருக்கிறார் “சீதக்காதி” படம் மூலமாக.

சீதக்காதியின் முதல் பார்வையான ‘மேக்கிங் ஆஃப் ஐயா’ வை விஜய் சேதுபதி கொண்டாடும் நேரத்தில், தனது உற்சாகத்தை வார்த்தைகளை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

“சீதக்காதி சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற லெஜண்ட் நடிகர்களுக்கு பொருத்தமான ஒரு படம்.

ஆரம்பத்தில், பாலாஜி தரணீதரன் இதில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை அதில் நடிக்க வைக்க விரும்பினார். இந்த படத்திற்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து உள்ளேன் என்று நான் நம்புகிறேன்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், அவர் தோற்றம் எப்படி இருக்கும் என நாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும்போது, விஜய் சேதுபதி அதை பற்றி கொஞ்சம் கூறுகிறார்.

அதில், “நான் ஒரு 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். சீதக்காதி ஒரு ஆத்மார்த்தமான படம், அது கலைக்கு முடிவே இல்லை, சாகாவரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும்.

அது யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். என் 25வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன்” என்றார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற மிகச்சிறந்த நகைச்சுவை படத்தை தந்த விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரின் காம்பினஷனில், இதுவரை பார்க்காத ஒரு படம் எங்களுக்கு அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். Passion ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கிறார்கள்.

Seethakathi movie is for actors like Sivaji and Kamal sir says Vijay Sethupathi

 

More Articles
Follows