தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இந்த மோதலில் துப்பாக்கிகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், கற்கள், இரும்பு ராடுகள் போன்றவற்றை பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி கற்கள் இரும்பு ராடுகளை கொண்டு வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தத கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான படை மீது சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.
இந்திய படையும் கற்களை கொண்டு எதிர்தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனி, மற்றொரு வீரர் குண்டன் குமார் ஓஜா ஆகியோர் உயிரிழந்தனர்.
அதன்பின்னர் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த 17 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டது. ஆக பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் பட தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வீரமரணமடைந்த பழனியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் நயன்தாரா நடித்த ஐரா, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ, தற்போது நடித்துவரும் டாக்டர், அயலான் மற்றும் விஜய்சேதுபதியின் க.பெ/ரணசிங்கம் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Kotapadi Rajesh announces Rs 5 Lakhs to Indian Soldier Pazhanis family