‘ஆடுகளம்’ வி.ஐ.எஸ். ஜெயபாலனுடன் இணையும் கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கையை சேர்ந்தவர் எழுத்தாளர் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்.

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் ஆடுகளம் படம் இவருக்கு இன்றுவரை மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது எனலாம்.

தற்போது முதன் முறையாக நளினகாந்தி என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் சர்ச்சை நாயகி கஸ்தூரி, புவிஷா, ஷர்மிளா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பிரபு ஒளிப்பதிவு செய்ய ஜூட் ஆரோகணம் இசையமைத்துள்ளார்.

அமெரிக்கா வாழ் தமிழரான பொன் சுகீர் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படம் பற்றி அவர் கூறியதாவது:

கதையின் படி ஜெயபாலன் ஒரு பிரபலமான டாக்டர்.

அவரின் வயது காரணமாக ரெஸ்ட் எடுக்க வேண்டிய சூழ்நிலை. அவரை கவனிக்க நர்ஸ் ஒருவர் வருகிறார்.

அதன்பின்னர் இவர்கள் இருவருக்குமான உறவின் கதையோட்டம்தான் இப்படத்தின் கரு.

மேலும் நம் சமூகத்தில் நிலவும் சல பிரச்சினைகளை இப்படம் பேசும்.

இது ஹாலிவுட் பாணியிலான சைக்காலஜிக்கல் டிராமாவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Kasthuri team up with VIS Jayabalan in Nalina Gandhi

‘பேட்ட’ இயக்குனரிடம் மருமகனுக்கு சான்ஸ் கேட்டாரா ரஜினி…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் மகள் திருமண வாழ்க்கை சரியில்லை என்றால் பெரும்பாலான பெற்றோர்கள் சமூகத்திற்கு பயந்து அந்த மாப்பிள்ளையுடன் தான் நீ வாழ வேண்டும் என மகளை நிர்பந்திக்கின்றனர்.

ஆனால் இதில் ரஜினிகாந்த் சற்று வித்தியாசப்பட்டு விவாகரத்து பெற்ற தன் 2வது மகள் சௌந்தர்யாவின் 2வது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி வைத்தார்.

இதனால் ரஜினியின் சிந்தனையை பலரும் பாராட்டினர்.

சௌந்தர்யாவின் 2வது கணவர் விசாகன் வணங்காமுடி என்பதும் அவர் ஒரு தொழிலதிபர் என்பது பலரும் அறிந்ததே.

இவருக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் உள்ளது.

எனவே தான் குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்த ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விசாகன் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தனது மாப்பிள்ளைக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தை பார்த்து அவரை ரஜினி சிபாரிசு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை இது உண்மையானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Rajinis recommendation for his son in law to act in movies

‘சிங்கம்’ சூர்யாவை இயக்கும் ‘சிறுத்தை’ சிவா; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் என்ஜிகே மற்றும் காப்பான் ஆகிய இரு படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

இதில் என்ஜிகே படம் மே மாத இறுதியிலும் காப்பான் படம் ஆகஸ்ட் மாதத்திலும் வெளியாகிறது.

இப்படங்களை முடித்துவிட்ட சூர்யா தற்போது சுதா கொங்கரா இயக்கும் ‘சூரரைப்போற்று’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இது சூர்யாவின் 39வது படமாக உருவாகவுள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Suriya 39 will be directed by Viswasam Siva Produced by Studio Green

சிதம்பரம் ரயில்வே கேட் பட தயாரிப்பாளர் S.M.இப்ராஹீம் மகள் திருமண விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பு மயில்சாமி, மாஸ்டர் மகேந்திரன், சூப்பர்சுப்பராயன், டேனியல், ஜி.எம்.குமார், ரேகா ஆகியோரது நடிப்பில், கார்த்திக் ராஜா இசையமைக்க, சிவபாவலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ சிதம்பரம் ரயில்வேகேட் “

கிரவுன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரித்திருப்பவர் S.M.இப்ராஹீம். அவரது மகள் M.ராஷிஹா பரகத் – M.நசிருதீன் இவர்களது திருமணம் நேற்று மாலை 6 மணியளவில் கொளப்பாக்கத்தில் உள்ள இ.வி.பி ராஜேஸ்வரி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவில் சிதம்பரம் ரயில்வேகேட் படத்தின் இயக்குனர் சிவபாவலன், இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, நடிகை ரேகா, நடிகர் மயில்சாமி, பொன்னம்பலம், டேனியல்,பவர்ஸ்டார், அன்புமயில்சாமி, மாஸ்டர் மகேந்திரன், நாயகி நீரஜா, காயத்ரி, விக்ரம், நடன இயக்குனர் அசோக்ராஜா,ஒளிப்பதிவாளர் வேல் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மற்றும் ஏராளமான திரையுகினரும், தயாரிப்பாளர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் இணையும் எஸ்.பி ஜனநாதனின் லாபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள் அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட் செட்டை உண்டு பண்ணும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான படங்கள் உருவாகும் தருணம் எல்லாமே உயரிய தருணம் தான். தற்போது அப்படியொரு தருணம் வாய்த்துள்ளது. ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சே
துபதி புரொடக்‌ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன. படத்தின் பெயர் லாபம்.

இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அவர் லாபம் படத்தில் நடிக்க இருப்பதே முதல் லாபம்.

அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். தான் தேர்ந்தெடுக்கும் படங்கள் வெறும் படங்களாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல பதிவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஸ்ருதிஹாசன். அப்படியான படமாக அவருக்கு லாபம் அமைந்துள்ளது. லாபம் படத்தில் முதன்முதலாக அவர் நடிகர் விஜய்சேதுபதி உடன் ஜோடி சேர்கிறார். இவர்களோடு ஜெகபதிபாபுவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என அறமும் அரசியலும் பேசிய படங்களைத் தந்த தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் லாபம் படத்தை இயக்குகிறார். இவரின் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது. இன்று பூஜையோடு ராஜபாளையத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அதிரடி ஆக்‌ஷனும் அற்புதமான கதையும் கொண்ட இப்படம் விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசன் சினிமா கரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்பது படக்குழு சொல்லும் உறுதிமொழி.

முக்கியமான நட்சத்திரங்கள், தடம் பதித்த இயக்குநர் என இந்தக் கூட்டணியே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கையில், தரமான படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்வதை வாடிக்கையாக அல்ல வாழ்க்கையாக கொண்ட, பருத்திவீரன், இரண்டாம் உலகம் , தனி ஒருவன் ஆகிய படங்களில் ஒளிப்பதிவில் தனித்துவத்தை நிறுவிய ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் லாபத்தில் இணைந்து படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறார். எளிய மக்கள் உட்பட எல்லா மக்களும் ‘கண்ணான கண்ணே’ என கொஞ்சும் இசை அமைப்பாளர் டி.இமான் இப்படத்தில் இசை அமைப்பாளராக பங்கெடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

முழுக்க முழுக்க பாஸிட்டிவிட்டிவ்ஸ் நிறைந்த இப்படம் படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது

ஸ்டுடியோகிரீன் தயாரிக்கும் மெகா பட்ஜெட் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கும் STR & கௌதம் கார்த்திக்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த கோடையில் தகிக்கும் வெயில் தான் அனைத்து இடங்களிலும் ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை தணிக்கும் வகையில் இதமான குளிர்ந்த ஒரு சாரல் மழையாக வந்திருக்கிறது இந்த செய்தி. ஆம், தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ் பெற்ற ஒரு தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோகிரீன் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அது அவர்களின் அவர்களின் அடுத்த பிரமாண்ட படைப்பு பற்றிய அறிவிப்பு தான். கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த ‘தயாரிப்பு எண் 20’ STR, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க மிக பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. KGF இயக்குனர் பிரஷாந்த் நீலிடம் துணை இயக்குனராக பணி புரிந்த நர்த்தன் இந்த படத்தை இயக்குகிறார். தனித்துவமான கதைகளை வணிக அம்சங்களை கலந்து மிகச்சிறப்பாக கொடுக்கும் ஒரு அரிய தயாரிப்பாளர் தான் ஞானவேல் ராஜா. அதனாலேயே, இந்த படத்தில் என்னவெல்லாம் இருக்கப் போகிறது என்பதை அறியும் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியிருக்கிறது.

இது குறித்து தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா கூறும்போது, “இது மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஒரு ஆக்‌ஷன் திரில்லர். இது படத்தை மிகவும் உயர்த்தி சொல்வதாக தோன்றலாம், ஆனால் ஸ்கிரிப்ட் மற்றும் அது வைத்திருக்கும் வலுவான கதை தான் இதற்கு காரணம். இயக்குனர் நர்த்தன் கதையை விவரிக்க ஆரம்பித்தபோதே ஆரம்ப காட்சிகளிலேயே இதை மெகா பட்ஜெட் படம் என்ற பட்டியலில் சேர்க்க முடியும் அளவுக்கு இருந்தது. ஒரு சில காட்சிகளிலேயே, படத்தின் ஆக்‌ஷன் அம்சங்களை என்னால் தன்னிச்சையாக உணர முடிந்தது, மேலும் பார்வையாளர்களின் ரசனையை கவர இன்னும் பல காரணங்களை இந்த கதை கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. குறிப்பாக, STR போன்ற ஒரு வெகுஜன ஹீரோ அவரது முத்திரையுடன் ஈடு இணையற்ற ஒரு நடிப்பை கொடுக்கும்போது, படத்துக்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கௌதம் கார்த்திக் போன்ற மிகவும் திறமையான மற்றும் அழகான நடிகர் ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்குள் நான் இப்போதே போய் விட்டேன். நாங்கள் முன்னணி கதாநாயகிகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவற்றை இறுதி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.

இதுவரையில், நவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், மதன் கார்க்கி வசனகர்த்தாவாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2019 ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளது, இந்த படத்தை பற்றிய பல வியக்கத்தக்க அறிவிப்புகளை தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள்.

More Articles
Follows