வந்தியத்தேவன் வேடத்தில் விஜய்சேதுபதிக்கு பதிலாக கார்த்தி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் எது? என்ற கேள்வி கோலிவுட்டில் வெகுநாட்களாக உள்ளது.

தற்போது அவர் தனது கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

இதில் விஜய், மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கலாம் என கூறப்பட்டது.

தற்போது விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து இப்படத்தை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்த கதையில் வந்தியத்தேவன் கேரக்டர் முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில் அதில் நடிக்க விஜய்சேதுபதியை அனுகினார்களாம்.

ஆனால் அவரின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் அவருக்குப் பதிலாக கார்த்தி நடிக்கிறாராம்.

Karthi plays as Vanthiyathevan in Maniratnams Ponniyin Selvan

மணிரத்னம் படத்தில் சரத்-ராதிகா-விக்ரம் பிரபு & ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் புதிய படம் ‘வானம் கொட்டட்டும்’.

இப்படத்தை மணிரத்னத்தின் உதவி இயக்குநர் தனசேகரன் இயக்குகிறார்.

இதில் விக்ரம் பிரபு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இவர்களுடன் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகாவும் நடிக்கின்றனர்.

அவர்கள் திரையிலும் கணவன்-மனைவியாகவே நடிக்கின்றனர்.

வருகிற ஜூன் மாதம் சூட்டிங்கை தொடங்கவிருக்கிறார்களாம்.

Radhika Sarathkumar Vikram Prabhu and Aishwarya Rajesh in Vaanam Kottatum

நம்ம தல-க்கு இதே வேலையா போச்சு.; பயத்தில் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில நடிகர்கள் மட்டுமே சினிமாவை தொழிலாக நினைக்காமல் ஒரு கலையாக நினைத்து அதற்காகவே தங்களை அர்ப்பணித்து வருகின்றனர்.

சண்டைக் காட்சிகளில் கூட டூப் எதுவும் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்து வருகின்றனர். அதில் அஜித்தும் முக்கியமானவர்.

இவர் தற்போது வினோத் இயக்கும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருடன் வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோரும் நடிக்க யுவன் இசையமைக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார்.

இதன் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கும் பஞ்சமில்லையாம். ஒரு அதிரடியான மழை சண்டை காட்சியை அண்மையில் படமாக்கினார்களாம்.

அதில் டூப் நடிகரை பயன்படுத்தாமல் அஜித்தே ரிஸ்க் எடுத்து நடித்தாராம்.

ஏற்கெனவே இதுபோன்ற ரிஸ்க் காட்சிகளில் நடித்து அடிப்பட்டு உடம்பில் பலமுறை அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர் அஜித்.

இவரின் ரிஸ்க் அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

Thala fans in fear because of Ajiths risk in Stunts

தளபதி தரிசனத்திற்காக வடசென்னையை வலம் வரும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்கார் படத்தை முடித்து விட்டு அட்லி இயக்கத்தில் நடிதுது வருகிறிர் விஜய்.

இது விஜய்யின் 63வது படமாக உருவாகி வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய்யுடன் நயன்தாரா, கதிர், விவேக், யோகிபாபு உள்ளிட்டோ நடித்து வருகின்றனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னிமில்லில் நடைபெற்றது. அங்கு ரசிகர்கள் அதிகம் கூடவே அவர்களை அடிக்கடி சந்தித்தார்.

தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு வட சென்னை, காசிமேடு கடற்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

நள்ளிரவு நேரம் என்றாலும் அங்கும் ரசிகர்கள் வருகிறார்களாம்.

அந்த நேரத்திலும் ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக அவர்களை தளபதி சந்தித்து வருகிறார்.

Vijay and Atlees Thalapathy 63 shooting updates

விஜய் தம்பி விக்ராந்துக்கு கைகொடுக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யின் உறவினர் விக்ராந்த் என்பது பலருக்கு தெரிந்த ஒன்றுதான்.

இவர் நாயகனாக அறிமுகமானாலும் சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

பாண்டியநாடு படத்தில் விஷாலுடன் இணைந்தார். கெத்து படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்தார்.

தற்போது, வெண்ணிலா கபடி குழு 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, பக்ரீத் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து அவரது சகோதரர் சஞ்சீவ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளராம். இதில் இவருடன் நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்திருக்கிறார்.

இப்படத்தின் திரைக்கதையை நண்பர்களுக்காக விஜய்சேதுபதி எழுதுகிறாராம்.

‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதி திரைக்கதை எழுதும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi agreed to pen the screenplay of Vikranths new film

விஜய்சேதுபதியை காப்பியடித்த சிவகார்த்திகேயன்; உங்க கிரியேட்டிவ் இவ்வளவுதானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கனா படத்தை தொடர்ந்து தன் எஸ்.கே.புரடக்ஷன்ஸ் சார்பாக அடுத்த படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை பிளாக் ஷீப் யு-டியூப் சேனல் நபர்களுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

கார்த்திக் வேணுகோபால் என்பவர் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இதில், சரவணன் மீனாட்சி புகழ் ரியோ நாயகனாக நடிக்க, இவருடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஷபிர் இசையமைக்கும் இப்படத்திற்கு பாடல்களை ஆர்.ஜே. விக்னேஷ் எழுதியுள்ளார்.

அண்மையில் சூட்டிங்கை முடித்துக் கொண்ட இப்படக்குழு தற்போது டப்பிங் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் (நாம் முன்பே சொன்னப்படி) ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என டைட்டிலை அறிவித்துள்ளனர்.

இதற்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் புதுமையாக செய்வதாச நினைத்துக் கொண்டு அண்மையில் வெளியான விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பட டிரைலரை காப்பியடித்துள்ளனர்.

அதில் நீண்ட வசனத்தை முதலில் மெதுவாக பின்னர் வேகமாக பேசுவார் விஜய்சேதுபதி. அதை அப்படியே காப்பியடித்து ஆர்ஜே விக்னேஷ் பேசியுள்ளார்.

என்னப்பா? உங்க கிரியேட்டிவிட்டு இதுதானா? என பலரும் கேட்கின்றனர்.

Sivakarthikeyans Production team copied Super Deluxe dialogues

More Articles
Follows