தமிழக அரசை எதிர்த்து கமல்ஹாசன் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூலை1ஆம் தேதி இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் ஜம்மு காஷ்மீரில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி விரியுடன் தமிழக அரசின் 30% வரியும் இணைந்துள்ளதால், இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் காலவரையற்று மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து கமல்ஹாசன் பேசுகையில், “நமது பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த வரி விதிப்பினை எதிர்த்து சினிமா துறைக்கு சாதகமான முடிவை எடுத்துள்ளனர்.

ஆனால் தமிழக அரசு மட்டும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலை நீடித்தால் சினிமா முற்றிலுமாக அழிந்துவிடும்.

தற்போது சினிமா துறையின் அனைத்து பிரிவுகளும் இதனை எதிர்த்து கிளம்பியுள்ளன.

எனவே நானும் தொழில் துறை சார்பாக நான் இந்த வரி விதிப்பினை எதிர்த்து போராடவுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

KamalHassan Slams Tamilnadu Government Local tax on Cinema

பாவனா கடத்தல் வழக்கில் விரைவில் திலீப் கைது..? சினிமாவை மிஞ்சிய சீக்ரெட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டார்.

அந்த மர்மநபர்கள் அவரை பாலியல் தொல்லை செய்ததாக புகார் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கையில் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பிரபல நடிகர் திலீப் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே அவரிடம் பலமணி நேரம் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

மேலும் பாவனா கடத்தலில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் அளித்த தகவலின்படி திலீப்பின் 2வது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனுக்கு சொந்தமான கடையிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

ஒரு மெமரி கார்ட்டில் பாலியல் செய்யப்பட்ட வீடியோவை அவர்கள் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே விரைவில் நடிகர் திலீப் கைது செய்யப்படலாம் என கேரளாவில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் இதற்கு பின்னணியில் இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.

1) ஒருகாலத்தில் பாவனாவும் காவ்யா மாதவனும் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிய பாவனாவை பழிவாங்க காவ்யா மாதவன் ஆன் வைத்து இதை செய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

2) நடிகை மஞ்சு வாரியருடன் திலீப் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்போதே காவ்யா மாதவனுடன் தொடர்ப்பு வைத்திருந்தாகவும், அதை தன் தோழி மஞ்சுவாரியரிடம் பாவனா கூறியதாகவும் கூறப்படுகிறது.

தன் குடும்பம் பிரிய காரணமான பாவனாவை பழிவாங்கவே திலீப் இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கலைஞர்களின் நிஜ வாழ்க்கை சினிமாவையே மிஞ்சி விடும் போலவே..

Malayalam actress Bhavana abduction case Co Star Dileep may be arrested

 

தனுஷ் உடன் மோத காரணம் சொல்லும் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரித்து நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி2 படத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.

முதல் பாகத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, அந்த பாடல்கள் அண்மையில் வெளியானது.

இந்த மாதம் 28ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

இதே நாளில் கிரகணம் என்ற படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா மற்றும் கயல் சந்திரன் இணைந்து நடித்துள்ள இப்படத்தை இளன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இதுகுறித்து இளன் கூறியதாவது…

கிரகணம் படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் நான் தனுஷின் ரசிகர். அவருடைய படம் வெளியாகும் நாளில் என் படமும் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியே” என்று கூறினார்.

VIP2 and Graghanam movie clash on Dhanush Birthday

விருச்சிககாந்துக்கு உதவிய நடிகர்கள் அபிசரவணன்-மன்சூரலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஒரு வாரமாக காதல் படத்தில் நடித்த ‘விருச்சிக காந்த்’ சென்னையில் உள்ள ஒரு கோயிலில் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார். அவரை திரையுலகம் கண்டு கொள்ளுமா என செய்திகள் வந்து கொண்டிருந்தது.

கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த ‘வேகத்தடை ‘ குறும்பட நிகழ்ச்சி திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த அபி சரவணன் கூடவே நடிகர் ‘விருச்சககாந்த்’ அவர்களையும் அழைத்து வந்து அவருக்கு தேவையான சில உதவிகளை செய்தார்.

நேற்றும் ‘உறுதிகொள்’ ஆடியோ விழாவில் ‘விருச்சககாந்த்’ அவர்களுக்கு ஒரு காசோலையை அளித்தார்.

நிகழ்ச்சி முடிந்து சென்ற வரை. சில மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் உங்களை பார்க்க முடிந்தது. இன்னைக்கு ‘விருச்சககாந்த்’ அவர்களுக்கு உதவி. சொல்லுங்க. இவரை எப்படி தொடர்பு கொண்டீங்க என்ற போது…

முதலில் இதற்கு காரணமான அண்ணன் சாய் தீனா & மோகன் அவர்களுக்கு நன்றி!

மனதை ஒருவாரமாக உறுத்திகொண்டிருந்த ஒரு செய்தி. பிச்சை எடுத்த நடிகர் ‘விருச்சககாந்த்”. அவரை கண்டுபிடிக்க முயற்சி செய்தும் இயலாத நிலையில் வாட்ஸ்அப்பில் அண்ணன் சாய்தீனா அவர்களுடன் வீடியோவாக கண்டேன்.

உடனடியாக சாய்தீனா. அண்ணனை தொடர்புகொண்டேன். மோகன் அவர்கள் உதவியுடன். அவரிடம் பேசி என்ன மாதிரியான உதவிகள் தேவை என கேட்டறிந்தேன். மன இறுக்கம் காரணமாக மட்டுமே அவர் இப்படி ஆனதாகவும் அவருக்கு தேவை.

சினிமாவில் நல்ல வாய்ப்பும். தங்க இடமும். தொடர்புகொள்ள ஒரு மொபைல்போனும். நல்ல உடையும் போதும் என்றார்.

சரியாக மாலை நான்கு மணிக்கு தான் தகவல் கிடைத்தது.

இன்று மாலை ஆர்.கேவி யில் ஒரு குறும்படத்தின் வெளியீடுக்காக சிறப்புவிருந்தினராக ஆறுமணிக்கு செல்ல வேண்டியிருந்தது . எனவே விழா நடைபைறும் இடத்திற்க்கு விருச்சிககாந்த் அவர்களை வரவழைத்தேன்.

அந்த விழா மேடையில் உடனடி அவருக்கு தேவையான ஒரு புதிய சாம்சுங் ஆண்ட்ராய்டு மொபைல் போனும். ஒரு செட் சர்ட்ம் ஜீன்ஸ்ம் நானும் நண்பர் ‘ஓவியா’ எனும் படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான காண்டீபனும் இணைந்து வழங்கினோம்.

தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் எனது படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு தகவலை கூறியவுடன். நாளையே அவருக்கான நடிப்பு வாய்ப்பை வழங்கினார்.

மேலும் அடுத்த வாரமே தொடங்க இருக்கும் எனது புதுப்படமான “சூறாவளி”யின் இயக்குனர் குமார் நந்தாவும் ‘விருச்சிகாந்த்’ நடிக்க வாய்ப்பு உடனே வழங்கினார்.

இன்றும் அண்ணன் மன்சூரலிகான் எனது வேண்டுகோளை ஏற்று அவரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார்.

மேலும் பெங்களூருவை சேர்ந்த பேஷன் டிசைனர் ‘கிரிஷ்’, விருச்சிககாந்த் மனநல சிகிச்சைக்கு உதவுவதோடு அவரை மாடலாகவும் பயன்படுத்தி கொள்கிறேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.

சக நடிகரான ‘விருச்சிக காந்த்’ அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை உடனடியாக சில மணி நேரத்திற்குள் செய்ய உதவிய இறைவனுக்கு நன்றிகள் என்கிறார் அபி சரவணன் மிக மகிழ்ச்சியோடு.

Mansoor Ali Khan and Abi Saravanan helped Kadhal fame Viruchikakanth

SIIMA விருதை வென்ற விஜய்-சிவகார்த்திகேயன்-நயன்தாரா-நைனிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது SIIMA வழங்கும் விழா அபுதாபியில் அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலக சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இதில் தெறி படம் 3 விருதுகளை பெற்றது.

• சிறந்த என்டர்டெயினர்- விஜய்
• சிறந்த இயக்குனர்- அட்லீ
• ஸ்பெஷல் ஜுரி விருது- நைனிகா

மற்ற விருதுகளை அள்ளிய தமிழ் நட்சத்திரங்கள் இவர்கள்தான்…

சிறந்த நடிகர்: சிவகார்த்திகேயன் (ரெமோ)
சிறந்த நடிகை: நயன்தாரா (இருமுகன்)
சிறந்த அறிமுக இயக்குனர்: கார்த்திக் நரேன் (துருவங்கள் 16)
சிறந்த அறிமுக நடிகை: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
சிறந்த படம்: (இறுதிச்சுற்று)
சிறந்த நெகட்டிவ் ரோல் நடிகை: த்ரிஷா
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் ( அச்சம் என்பது மடமையடா)
சிறந்த பாடகர்: அனிருத் (ரெமொ)
சிறந்த பாடகி: சித்ரா (சேதுபதி)
சிறந்த பாடலாசிரியர்: மதன் கார்க்கி (மிருதன்)

விஜய் பட வியாபாரத்தை பார்த்து மெர்சலான கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவான ‘தெறி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனையடுத்து இவர்கள் தற்போது இணைந்துள்ள மெர்சல் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எனவே படத்தின் வியாபாரமும் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதாம்.

இந்நிலையில் ‘மெர்சல்’ படத்தின் சாட்டிலைட் உரிமைக்கு பல சாட்டிலைட் நிறுவனங்கள் போட்டியிட்டதாம்.

இறுதியில் ஜீ டிவி நிறுவனம் ரூ.30 கோடிக்கு இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இவ்வளவு விலைக்கு விஜய் படம் விற்கப்பட்டுள்ளதால், கோலிவுட் வட்டாரமே மெர்சலாகியுள்ளதாம்.

Mersal satellite rights bagged by Zee Tv for Rs 30 crores

More Articles
Follows