தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அவரின் மறைவுக்கு ரஜினி, சிவகுமார், விவேக், லிங்குசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஆனால் நடிகர் கமல், தன் அரசியல் சுற்றுப் பயணங்களில் பிசியாக இருந்த காரணத்தால் நேரில் செல்லவில்லை.
இந்நிலையில் இன்று பாலகுமாரன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது……
சினிமாவிற்கு முன்பே பாலகுமாரனை எனக்கு தெரியும். எனவே அவர் சினிமாவிற்கு வர வேண்டும் என விரும்பினேன்.
அற்புதமான எழுத்தாளர் அவர். நவயுக சினிமாவை பற்றி நிறையே பேசியிருக்கிறோம்.
தமிழ் சினிமாவை எப்படி மாற்றலாம் என பல விஷயங்களை அவர் என்னிடம் பகிர்ந்து இருக்கிறார்.
நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதினோம். நன்றாக வாழ்ந்து சென்றிருக்கிறார். தமிழுக்கு அவர் கொடுத்து சென்ற பரிசுக்கு நன்றி. என கூறினார் கமல்ஹாசன்.