அரசியலில் இருந்தாலும் சினிமாவில் பயணிக்க கமலின் மெகா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் இருந்தபோதே அதன் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தியவர் கமல்ஹாசன்.

நடிப்பு, இயக்கம், நடனம், பாடல், தயாரிப்பு என எந்த துறையாக இருந்தாலும் அதில் தன் திறமையை பளிச்சிட செய்தவர் அவர்.

தற்போது சினிமாவை தாண்டி அரசியல் உலகிலும் பயணித்து வருகிறார்.

தற்போது கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்து விட்ட பின் மெதுவாக சினிமாவில் இருந்து விலகி, அரசியல் பயணம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் தனக்கு வாழ்வளித்த சினிமாவில் தொடர்ந்து நீடிக்க ஒரு திட்டம் ஒன்றை தீட்டியுள்ளாராம்.

சென்னையில் உலகத் தரத்தில் ஒரு திரைப்பட பள்ளி தொடங்க வேண்டும் என்பதுதானாம் அது.

திறமையான கலைஞர்களுக்கு தரமான பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் எனவும், அதில் அவர் ஆசிரியராக இல்லாவிட்டாலும் அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என அவர் விரும்புவதாக தகவல்கள் வந்துள்ளன.

அஜித் படத்தை இயக்கியவர் மரணம்; அழுகிய நிலையில் உடல் கிடந்தது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அர்ஜூன் ரோஜா நடித்த ஆயுத பூஜை மற்றும் அஜித், மந்த்ரா நடித்த ரெட்டை ஜடை வயசு ஆகிய படங்களை இயக்கியவர் சிவகுமார்.

இவர் இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள வெங்கடேஸ்வரா அபார்ட்மென்ட் ஒன்றில் இவர் சில வருடங்களாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அரவது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இவர் எப்படி இறந்தார்? என்று தெரியவில்லை. கொலையா,? தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் பிக்பாஸ்2; கமல் மீது வக்கீல் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி வெற்றி பெற, அதன் இரண்டாம் பாகத்தையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது இந்த நிகழ்ச்சி மீது போலீசில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இநத் வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு சர்வாதிகாரி டாஸ்க் என்று ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

இது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பது போன்று உள்ளது என்று கூறி சென்னையை சேர்ந்த வக்கில் லூயிசாள் ரமேஷ் என்பவர், கமல் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரியும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் லூயிசாள் ரமேஷ் கூறியிருப்பதாவது…

விஜய் டிவியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி கடந்த 40 நாட்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கமல் தனது மக்கள் நீதி மையத்தின் கட்சியை வளர்க்க எடுத்துள்ள யுக்தி தான் இந்த நிகழ்ச்சி.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக தொடர்ந்து பேசி வருகிறார்.

இவருடைய ஏற்பாட்டின் படி இந்தவாரம் சர்வாதிகாரி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா, சர்வாதிகாரியாக நடிக்கிறார்.

இவர் போட்டியில் பங்கேற்றுள்ளவர்களை கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களை செய்கிறார். இந்த டாஸ்க்கில் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என முன்கூட்டியே இந்த தொடரை நடத்தும் எண்டாமல்சைன் இந்தியா நிறுவனமும், கமலும் கூறுகின்றனர்.

அதைத்தான் இவர்கள் நடித்து காட்டுகின்றனர்.

ஜூலை 31 அன்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் ரித்விகா என்ற போட்டியாளர், “இந்த டாஸ்க் வடநாட்டிலிருந்து வந்த ஐஸ்வர்யாவிற்கு தெரியாது, தமிழ்நாட்டில் இதற்கு முன் சர்வாதிகாரி ஆட்சி செய்தவர்களின் நிலைமை என்ன ஆச்சு என இவர்களுக்கு தெரியாது” என கூறுகிறார்.

இந்த டாஸ்க் முடிந்தவுடன் கமலும், சனிக்கிழமை அன்று, தமிழகத்தில் சர்வாதிகாரி போன்று ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்பது போல பேசுவார்.

தமிழகத்தை அமைதி பூங்காவாக ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக, சர்வாதிகாரி போன்று சித்தரித்து நடத்தி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தடை செய்வதோடு, நடிகர் கமல்ஹாசன் மற்றும் இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் எண்டாமல்சைன் இந்தியா நிறுவனத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் பிலிம் சிட்டியில் விஸ்வாசத்தை தொடங்கும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தையும் சத்யஜோதி நிறுவனமே தயாரித்து வருகிறது. இதையும் சிவா இயக்கி வருகிறார்.

இதில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க, நாயகியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

அவருடன் தம்பி ராமையா, யோகி பாபு முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தன் இசைப் பயணத்தில் செஞ்சுரி அடித்த இமான் இப்படம் மூலம் அஜித் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கிறது.

அதன்பின்னர் ராஜமுந்திரியில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது.

தற்போது மீண்டும் சில காட்சிகளுக்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்கவிருக்கிறார்களாம்.

ஜெயலலிதா-விஜய் இடையே பிரச்சினை உருவாக காரணம் இதுதானா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர். முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் முக்கிய கேரக்டரில் அரசியல்வாதியாக நடித்து வருகிறார் ராதாரவி.

இந்நிலையில் ஒரு பேட்டியில் விஜய் பற்றி கூறியுள்ளார் ராதாரவி.

அதில்.. ‘‘ஜெயலலிதா இருந்தபோதே தைரியமாக பல வி‌ஷயங்களை செய்தவர் விஜய். அதனால்தான் இருவருக்கும் பிரச்சினை உருவானது.

அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். இது 6 வருடங்களில் நடக்க வாய்ப்புள்ளது.” என ராதாரவி கூறியுள்ளார்.

இன்சூரன்ஸ் பண மோசடியை சொல்ல வரும் *படித்தவுடன் கிழித்துவிடவும்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும்.

அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது.

இந்த படத்தை I கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக தயாரித்திருப்பவர் R.உஷா.

கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

வில்லனாக S.M.T.கருணாநிதி அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – செ.ஹரிஉத்ரா (இவர் ஏற்கனவே மீத்தேன் திட்டத்தால் விவசாய நிலங்கள் எப்படி பாதிக்க படுகின்றன என்பதை மையமாக வைத்து “ தெரு நாய்கள் “ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது )

படம் பற்றி இயக்குனர் ஹரிஉத்ரா பகிர்ந்து கொண்டது…

இன்று பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் சில விஷயங்களை செய்வதோடு விட்டுவிடுகிறோம். அப்படி விட்டுவிடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்குகூட செய்கிறோமே இன்சூரன்ஸ் அதுதான்.
அதைபற்றிய ஒரு சிறு பயணம் தான் இந்த “படித்தவுடன் கிழித்துவிடவும் “ இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை சம்மந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன்வருவதும் இல்லை.

இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளன. அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியை பழிவாங்கியது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக திரைக்கதை அமைத்துள்ளோம்.

பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரமாண்டமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம்.

90 சதவீதம் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம்.

அதற்காக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட் ஹீலியம் என்ற புதுவகையான கேமராவில் CP3 எனும் லென்ஸை பயன்படுத்தியுள்ளோம். அது இரவு நேர படப்பிடிப்பு காட்சிகளை மிக துல்லியமாக படம்பிடித்துள்ளது.

படப்பிடிப்பு மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் செ.ஹரிஉத்ரா.

ஒளிப்பதிவு – வாசு
இசை – நிரோ பிரபாகரன்
பாடல்கள் – மாஷா சகோதரிகள் மற்றும் அபிநந்தன்
கலை – இன்ப ஆர்ட் பிரகாஷ்
சண்டை – ஸ்டன்ட் கோட்டி
எடிட்டிங் – முத்துமுனியசாமி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
இணைத் தயாரிப்பு – சுரேஷ்குமார், சேரமணி ஸ்ரீதர்
தயாரிப்பு – R.உஷா

Padithavudan Kizhithuvidavum movie deals with Insurance amount and its politics

More Articles
Follows