தற்காப்பை விட தன்மானமே முக்கியம்; கமல் பேச்சால் ரஜினி ரசிகர்கள் கவலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முரசொலி நாளிதழின் 75 ஆம் ஆண்டு பவளவிழா சென்னையில் நடைபெற்றது.

இதில் பத்திரிகையாளர்கள் மற்றும் கமல், ரஜினி, வைரமுத்து, பிரபு உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் ரஜினி கலந்துக் கொண்டாலும் நான் மேடையில் ஏறி பேசமாட்டேன். பார்வையாளர்களில் ஒருவராகவே அமர்வேன் என ஸ்டாலினிடம் நிபந்தனை விதித்திருந்தாராம்.

ஆனால் ரஜினியை அழைத்து அவருக்கு நினைவுப் பரிசை ஸ்டாலின் வழங்கினார்.

அதன்பின்னர் விழாவில் கமல் பேசும்போது…

“நான் கற்ற தமிழ் எல்லாம் செவி வழியே கற்றவைதான். செவிவழி கற்றத்தில் இரண்டாவது குரல் கருணாநிதியுடையது. ஏன் இரண்டாவது என்று சொல்கிறேன் என்று சொன்னால் நான் கேட்டு வளர்ந்த முதல் குரல் நடிகர் சிவாஜியுடையது.

இவ்விழாவில் ரஜினியை போல் நானும் மேடையில் பேசாமல் இருந்துவிடலாம் என்றிருந்தேன்.

ஆனால் என் வீட்டில் கண்ணாடியில் பார்த்தபோது, “தற்காப்பு அல்ல முக்கியம்; தன்மானமே முக்கியம்” என்று முடிவு செய்தேன். அதனால் இதுபோன்ற மேடையில் பேச நினைத்தேன்.” என்று பேசினார்.

இவ்வாறு கமல் பேசியதால் ரஜினி ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர் ரஜினி அந்த விழா மேடையில் பேசாமல் இருந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் நண்பரான கமல் அவர்கள் ஏன்? இப்படி பேசினார்? என ரஜினி ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Kamal speech at Murasoli 75th year Rajini fans disappointed

எதிர்பார்ப்பு எகிற தரமணி தயாரிப்பாளர் செய்த தந்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள விஐபி2 படம் உலகமெங்கும் இன்று ஆக. 11ஆம் தேதி வெளியாகிறது.

தமிழகத்தில் மட்டும் 400க்கும் அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது.

இதனையடுத்து தளபதி பிரபு இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி நடித்துள்ள பொதுவாக எம்மனசு தங்கம் படம் 300க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறதாம்.

இப்படங்கள் இரண்டிற்கும் அதிகமான எதிர்பாப்பு எழ, இப்படத்தின் ஹீரோக்களே காரணம்.

இந்த படங்களும் இயக்குனர் ராம் இயக்கி, ஜேஎஸ்கே தயாரித்துள்ள தரமணி படமும் வெளியாகிறது.

இப்படத்திற்கு 200 தியேட்டர்களே கிடைத்துள்ளது என கூறப்படுகிறது.

ஆனால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் விளம்பரங்களில் இப்படக்குழுவினர் கையாண்ட் யுக்திகளே காரணம் என தெரிய வந்துள்ளது.

இதன் விளம்பரங்களில் நாட்பு நடப்புகளை நக்கலடித்தும், சென்சாரை கிண்டலடித்தும் செய்திகளை வெளியிட்டனர்.

மேலும் இப்படம் இளைஞர்களை குறிவைத்தே எடுக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகளவில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Taramani movie producer JSK done different types of promotions

விஷாலின் 25வது படத்திற்காக சென்னையில் உருவாகும் மதுரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படம் சண்டக்கோழி2.

இது விஷாலுடன் வரலட்மி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இது விஷால் நடிப்பில் உருவாகும் 25வது படம் என்பதும் இப்படத்தை அவரே தயாரிப்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட் சென்னை பின்னிமில்லில் 10எக்கர் நிலபரப்பில் 500கடைகள், கோவில் திருவிழா கொண்டாட்டம் தொடங்க அழகான மதுரையை 6- கோடி செலவில் வடிவமைப்பதில் இறங்கி உள்ளனர்கள்.

அதற்கான பூஜை இன்று காலை பின்னிமில்லில் விஷால் பிலிம் பாக்டரி (VFF) இணை தயாரிப்பாளர் திரு.M.S.முருகராஜ், இயக்குனர் திரு.N.லிங்குசாமி மற்றும் கலை இயக்குனர் ராஜீவ்வன் அவர்கள் தொடங்கி வைத்தனர்கள்.

Vishals 25th film Sandakozhi2 movie updates

விஐபி2 படத்திற்கு அதிகாலை காட்சிகள் ரத்து; காரணம் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், அமலாபால், விவேக், சமுத்திரக்கனி, கஜோல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி2.

இப்படம் நாளை அகிலமெங்கும் வெளியாகிறது.

தனுஷ்க்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளதால் இப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் தற்போது வந்துள்ள தகவல்கள்படி அதிகாலை 5 மணிக்கு உள்ள காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னையை சேர்ந்த தியேட்டர் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

தமிழகமெங்கும் காலை 8 மணிக்குதான் முதல் காட்சி தொடங்கப்பட உள்ளது.

எனவே அதிகாலை காட்சி வேண்டாம் என தயாரிப்பாளர் தரப்பில் கேட்கப்பட்டது.

அதன்படி அதிகாலை காட்சியை ரத்து செய்துவிட்டோம்” என்றார்.

VIP2 movie early morning shows cancelled

 

 

முரசொலி பவளவிழாவில் கமல்-ரஜினி பங்கேற்றனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முரசொலி நாளிதழின் பவளவிழாவில் ரஜினி மற்றும் கமல் பங்கேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் முக. ஸ்டாலின் அழைத்திருந்தார்.

இதற்கான அழைப்பிதழில் நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து ஆகியோரின் பெயர் இடம் பெற்றிருந்தது.

அதன்படி இன்று முரசொலி நாளிதழின் 75வது ஆண்டு விழா (பவளவிழா) சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

வைரமுத்து, ஸ்டாலின், கமல் ஆகியோர் விழா மேடையில் அமர்ந்திருக்க, ரஜினி பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருக்கிறார்.

இந்த விழாவில் ரஜினி பேசுவாரா? எனத் தெரியவில்லை.

Rajini Kamal participated in Murasoli platinum jubilee celebrations

பைசா நாயகி ஆராவின் அடுத்த படம் குரு உச்சத்துல இருக்காரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை ஊர் பஞ்சாயத்து தலைவர் என்பதற்காக, தன் காதலியை பார்க்க தோணும்போதெல்லாம் ஒரு சின்ன விஷயத்தை பெரியதாக்கி, அதையே பஞ்சாயத்தாக கூட்டி, கலாட்டா செய்யும் கதாபாத்திரத்தில் குரு ஜீவா அறிமுகமாகும் படம் ‘குரு உச்சத்துல இருக்காரு’.

இப்படத்தில் கதாநாயகியாக ‘பைசா’ பட நாயகி ஆரா நடித்துள்ளார். மேலும், ஆர்.பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, ஸ்ரீரஞ்சனி, மனோ, நமோ நாராயணன் ஆகியோர்கள் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் பா.தண்டபாணி. இப்படத்தை பெஸ்ட் மூவிஸ் சார்பில் எம்.தனசண்முகமணி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது. ஒரு முக்கிய காட்சியை படமாக்கும் போது, மெயின் ரோட்டிலிருந்து 3 கி.மீ அருகில் உள்ள அருவியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள்.

லொக்கேஷன் பார்க்கும் போது அருவியில் வந்த தண்ணீர் படப்பிடிப்பின் போது அருவியில் தண்ணீர் வராததால், 70 லாரிகளில் தண்ணீர் வர வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

அந்த அருவியில் நீர் வருவதை கண்டு, அங்குள்ள யானை ஒன்று தாகத்தை தீர்க்க அப்பகுதிக்கு வந்துள்ளது. யானையை பார்த்த ‘குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவினர் மிரண்டிருக்கின்றனர்.

ஆனால், அந்த யானையோ படக்குழுவினரை தொந்தரவு செய்யாமல் நீரை குடித்து விட்டு சென்றது. அதன் பின் தக்க பாதுகாப்புடன் மீதிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

Paisa fame Aaara next movie Guru Utchathula Irukaru

More Articles
Follows