‘அரசியலில் இருக்கிறேன்; கட்சி கொடி உண்டு…’ கமல் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தவொரு செயலையும் சமூகம் சார்ந்த தொலை நோக்கு பார்வையுடன் பார்ப்பவர் கமல்ஹாசன்.

இவர் அண்மைகாலமாக நாட்டு நடப்புகள் குறித்து தன் கருத்துக்களை தொடர்ந்து கூறிவருகிறார்.

இதனிடையில் ஜல்லிக்கட்டு போரட்டாங்கள் தொடர்பாக கமலின் நற்பணி மன்றத்தை சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் தன் நற்பணி மன்ற இயக்க நிர்வாகிகள் மற்றும் அதனை சார்ந்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்தார் என்பதை பார்த்தோம்.

இதுபற்றிய தகவல்கள் முழுமையாக கிடைக்காத பட்சத்தில் கிடைத்த தகவல்கள் இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

சட்ட வல்லுனர்களுடன் கமல் ஆலோசனை கூட்டத்தின் சில துளிகள்..

கடந்த 35 வருஷமாக நற்பணி தான் பண்றோம். அதை இன்னும் பெரியதாக தொடர்வது எப்படி என்ற ஆலோசிக்கவே இந்த கூட்டம்.

நாம் செய்யும் நற்பணிகளுக்கு எந்த வித இடையுறும் வரக்கூடாது. அப்படி வந்தால், சட்டம் படித்த இந்த ஆலோசகர்களின் உதவி தேவை. இவர்கள் நமக்கு உதவுவார்கள்.

முதலமைச்சாராக இருந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது இல்லை.

நான் எட்டாம் வகுப்பு. ஆனாலும் எனக்கும் #சட்டம் தெரியும். ஆனால், சட்டம் படித்த நீங்கள் அதை சொல்லும் போது தான் அதற்கு உரிய மரியாதை கிடைக்கும்.

நாங்கள் காவல் துறையினரிடம் பேசுவதற்கும், சட்டம் படித்த வல்லுனர்கள் பேசுவதற்கும் வேறுபாடு உள்ளது.

அரசியலுக்கு வருவது என்பது என்னால் இயலாத காரியம். வரவும் முடியாது. அது என்னுடைய வேலையும் அல்ல.

கச்சேரியில் பாட்டு சரியில்லை என்று கூறை கூறுவதால் நீ மேடைக்கு வந்து பாடுன்னு சொல்லலாமா?

சமையலில் ஏற்படும் குறைகளை சுட்டிக் காட்டத் தான் முடியும். அதற்காக வந்து சமைத்துப் பார் என்று கூறினால் எப்படி?

நான் இப்போது மட்டும் அறிக்கைகள் விடவில்லை. 30 வருடங்களுக்கு முன்பு இருந்தே நான் கருத்து கூறிவருகிறேன்.

அன்றே இலங்கை பிரச்சனைக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தேன். ஆனால் இப்போதுதான் நான் கூறுவது அவர்களுக்கு கேட்கத் தொடங்கியுள்ளது.

நான் அரசியலில் இல்லை என்று யார் சொன்னது. நான் அரசியலில் தான் உள்ளேன்.

ஆனால் நான் செய்யும் அரசியல் ஓட்டு வாங்கும் அரசியல் அல்ல. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல்.

நான், நீங்க யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறமாட்டேன். ஆனால், யாருக்கு வாக்களிக்க கூடாது என்று கூறுவேன்.

என்னுடைய கட்சி கொடி டெல்லியில் மூவர்ணமாக பறந்து கொண்டு இருக்கிறது. அதற்கு எந்த வித ஒரு பாதிப்பும் ஏற்படாமல் நான் காப்பேன்.

பச்சை தனியாக, வெள்ளை தனியாக, காவி தனியாக கிழிபடுவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன். அதற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருப்பேன்.

இனி அந்த மாவட்ட பிரச்சனைகளை கையில் எடுப்பேன் அதற்க்கு பக்கபலமாக மாவட்ட சட்ட ஆலோசர்கள் முன் வரவேண்டும்.

என்னால் முடியாத எதையும் உங்களை நான் செய்யச்சொல்ல மாட்டேன். இனி, இன்னொரு #சுதாகர் சிறைச் செல்வதை நான் அனுமதிக்க மாட்டேன்.

தவறு செய்திருந்தால் நான் நிச்சயம் தைரியமாக மன்னிப்பு கேட்பேன். ஆனால்,செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிப்பதை அனுமதிக்க மாட்டேன்.

நாம் செய்யும் நற்பணி கண்டு நம் மாநிலம் மட்டுமில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிங்களும் அழைத்து பாராட்ட போகிறது.

நற்பணி இயக்கத்தின் மூலம் ரூ. 20 கோடி வரை கடந்த 20 ஆண்டுகளில் நற்பணி செய்துள்ளனர்.

எந்த அரசியல்வாதி தவறு செய்தாலும் நாகரீகமான முறையில் கண்டனத்தை பதிவு செய்யுங்கள். மரியாதையாக பேசுங்கள்.

எனக்குப் பின்னாலும் இந்த நற்பணி தொடரவேண்டும். நான் மனிதனை மனிதனாகப் பார்ப்பவன்.

நல்லது செய்ய நல்ல உள்ளம் போதும். அது உங்களிடம் உள்ளது. அதற்கு துணையாக நான் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

Kamal meeting with Lawyer fans news updates

மீண்டும் கார்த்தி-விஜய்சேதுபதி இணைவார்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் கார்த்தி மற்றும் விஜய்சேதுபதிக்கு முக்கிய இடம் உண்டு.

இவர்கள் இருவருமே வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

விரைவில் கார்த்தி நடிப்பில் காற்று வெளியிடை படம் வெளியாகவுள்ளது.

அதுபோல் விஜய்சேதுபதி நடிப்பில் புரியாத புதிர், கவண், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

விஜய்சேதுபதி சினிமாவில் வளர்ந்து வரும் காலத்தில்  கார்த்தியுடன் நான் மகான் அல்ல படத்தில் நடித்தார்.

இப்போதுள்ள சூழ்நிலையில் அவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பார்களா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Will Karthi and Vijay Sethupathi Join again for new Project

மகளிருக்காகவும் மனைவிக்காகவும் சூர்யா ஸ்பெஷல் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

எனவே திரையுலகினரும் மகளிரை கவரும் வகையில் தங்கள் படம் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஜோதிகா, சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்டவர்கள் நடித்து வரும் மகளிர் மட்டும் படத்தை தயாரித்து வருகிறார் சூர்யா.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள அடி வாடி திமிரா என்ற பாடலை மட்டும் மகளிர் தினம் (மார்ச் 8) பிறக்கும் தருணத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இதுபற்றிய அறிவிப்பை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் தெரிவித்துள்ளனர்.

பிரம்மா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

2D Entertainment‏Verified account @2D_ENTPVTLTD 10m10 minutes ago

New single #AdiVaadiThimiraa from #MagalirMattum launching at 00:00 hrs on #InternationalWomensDay #8HoursToGo #2DMusic @Suriya_offl

On World Womens day Magalir Mattum team going to launch single track

‘கிருமி’ நாயகன் கதிருக்கு கை கொடுக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’, ‘என்னோடு விளையாடு’ ஆகிய வெற்றிப் படங்களில் நடித்தவர் கதிர்.

தற்போது மாதவன்-விஜய்சேதுபதியுடன் ‘விக்ரம் வேதா’ படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையில் ‘சிகை’ என்ற படத்தில் பெண் வேடத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு புதிய படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் கதிர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று இரவு சிம்பு வெளியிடவிருக்கிறாராம்.

மேலும் கபாலி இயக்குனர் ரஞ்சித் தயாரிக்கும் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்திலும் கதில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu going to release first look poster of Kathirs cop movie

விஜய்சேதுபதிக்கு அஜித் அட்வைஸ்; விஜய்சேதுபதி மனைவி கோபம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் சினிமாவில் நடிப்பேன்னு நினைச்சே பாக்கல. ஆனா வாய்ப்பு வந்துட்டு. இப்படின்னு சில பிரபலங்கள் சொல்வதை கேட்டு இருப்போம்.

ஆனால் பலருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்குள் அவர்களின் பாதி ஆயுள் முடிந்திருக்கும்.

அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு ஒவ்வொரு துறையாக முன்னேறி வருவார்கள்.

இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர்தான் விஜய்சேதுபதி.

பல இன்னல்களை அனுபவித்து, முன்னேறிய இவர் இன்று முன்னணி நாயகர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.

அதுபோல் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் படங்களை கண்ட அஜித் சமீபத்தில் அழைத்து பாராட்டி பேசி ஆலோசனைகள் சொன்னாராம்.

இதனை விஜய்சேதுபதி தன் மனைவியிடம் சொல்ல, அவர் கோபப்பட்டராம்.

நல்ல விஷயம்தானே. இதற்கு ஏன் கோபம்? அப்படித்தானே கேட்கிறீர்கள்.

விஜய்சேதுபதியின் மனைவி ஜெஸி, திவீர அஜித் ரசிகையாம்.

அப்படி தெரிந்தும், அஜித்தை காண மனைவியை அழைத்து செல்லவில்லை என்பதால்தான் இந்த கோபமாம்.

Ajith appreciates Vijay Sethupathi

‘பைரவா’ தமிழ் சொல் இல்லை; வரிவிலக்கு மறுப்பால் கோர்ட்டில் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து உருவான படம் பைரவா.

இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியானது.

இப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருந்தது. ஆனால் புதுச்சேரி அரசு வரிவிலக்கு தர மறுத்துவிட்டது.

‘பைரவா’ என்கிற சொல் தமிழ் வார்த்தை இல்லை என்பதால், வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டதாக புதுவை அரசின் பொழுது போக்குதுறை ஆணையகம் தெரிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு….

வரிச்சலுகை மறுக்கப்பட்டதால், புதுவை மாநில விநியோகஸ்தரான ஜி.ஆர்.துரைராஜ், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

எனவே, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி புதுவை மாநில உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பொழுது போக்குத் துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார்.

Puducherry govt refuse to give tax exemption to Bairavaa

More Articles
Follows