பிரபுதேவா-சத்யராஜ் இணைந்த களவாடிய பொழுதுகள் இம்மாதம் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகி,சொல்ல மறந்த கதை,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் மற்றுமொரு சிறந்த படைப்பாக நீண்ட கால காத்திருப்புக்குப்பின் களவாடிய பொழுது திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது.

காதலின் வலியை அதன் அனுபவத்தை உணராத அதனை கடந்து செல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

காதலிக்கின்ற அனைவருக்கும் அது கை கூடுவதில்லை.

அழகி திரைப்படம் காதலிக்காதவர்களைக்கூட கலங்க வைத்தது போலவே களவாடிய பொழுதுகள் படமும் அனைவரின் மனதையும் கலங்க வைக்கும் படைப்பாக உருவாகி இருக்கிறது.

இக்கதையை படித்து முடித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து தன் வாழ்நாளில் இதுவரை நடிக்காத பாத்திரத்தில் என்னை மறந்து பொற்செழியன் என்னும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறேன் என பிரபுதேவா மெய் சிலிர்க்கிறார்.

அதேபோல் என்றும் மக்களின் மனதில் வாழும் பாத்திரத்தை ஏற்று பிரகாஷ் ராஜ் மிக அதிகமான நாட்களை ஒதுக்கி நடித்திருக்கிறார். அதேபோல் பூமிகாவின் பாத்திரமும் அனைவரையும் கவரக்கூடியது. ஏற்றுக்கொண்ட ஜெயந்தி என்னும் பாத்திரமாகவே மாறி அவர் வாழ்ந்திருக்கிறார்.

இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் சத்யராஜ்,கருப்பு ராஜா,சத்தியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒரு பாடலை அறிவுமதியும்,மற்ற நான்கு பாடல்களை வைரமுத்துவும் எழுயுள்ளனர்.இசையமைப்பு பரத்வாஜ், கலை கதிர், படத்தொகுப்பு பி.லெனின் மற்றும் பிரேம் கையாண்டுள்ளனர்.

காதலிக்க போகிறவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பாடம்.

காதலித்து முடித்தவர்களுக்கு மீண்டும் ஒரு கடந்தகால நினைவூட்டலாக இப்படத்தை படைத்திருக்கிறேன் என்கிறார் தங்கர் பச்சான்.

தரமான படங்களையும், பல வெற்றிப்படங்களையும் தந்த ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தனது படங்களிலேயே மிகவும் தனக்குப் பிடித்த படம் என தயாரிப்பாளர் கருணாகரன் பெருமையுடன் சொல்கிறார்.

Kalavaadiya Pozhuthugal movie release plan on Dec 2017

கமல்-ரஜினிக்கு முன்பே அரசியலில் விஷால்; அதிமுக-திமுகவுக்கு போட்டி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 20 வருடங்களாக நான் எப்போ வருவேன்? எப்படி வருவேன்? என தன் அரசியல் பற்றிய கருத்துக்களை கூறிவந்தார் ரஜினிகாந்த்.

அடுத்த வருடம் 2018ல் இவர் கட்சி ஆரம்பிப்பார் என கூறப்படுகிறது.

கமல் தன் அரசியல் களத்தை உறுதிசெய்து விட்டு, தன் அரசியல் பணிகளை கவனித்து வருகிறார். ஜனவரியில் கட்சி பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் விஷால் திடீரென் தன் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் விஷால்.

வருகிற டிசம்பர் 4ஆம் தேதி மனுத்தாக்கல் செய்யவிருக்கிறாராம்.

இவருடன் அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்?

நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மனுதாக்கல் செய்தனர்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா வருகிற 4-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

Actor Vishal to contest RK Nagar bypoll

கலைப்புலி தாணுக்கு விஜய்யுடன் துப்பாக்கி; விக்ரம்பிரபு உடன் துப்பாக்கி முனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி, தெறி படங்களை தன் மகன் இயக்கத்தில் இந்திரஜித் படத்தை தயாரித்தார் கலைப்புலி தாணு.

இப்படம் அண்மையில் ரிலீஸ் ஆகி தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தன் அடுத்த படத்தையும் ஆரம்பித்துவிட்டார் தாணு.

இப்படத்திற்கு துப்பாக்கி முனை என்று பெயரிட்டுள்ளனர்.

விஜய் நடிப்பில் ‘துப்பாக்கி’ படத்தை தயாரித்திருந்தார். தற்போது துப்பாக்கி முனை என்று பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கியவர் தினேஷ் செல்வராஜ் இயக்குகிறார்.

இந்திரஜித் புகழ் ராசாமதி ஒளிப்பதிவு செய்ய, எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார். புவன் சீனிவாசன்
எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, அன்பறிவ் சண்டைப் பயிற்சிகளை கவனித்துக் கொள்கின்றனர்.

இன்று ‘துப்பாக்கி முனை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆனால் படத்தின் நாயகி யார் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

2014 வெளியான விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படத்தையும் தயாரித்தவர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram Prabu teams up with Kalaipuli Thanu for Thuppaki munai

2.0 வரிசையில் வெளிநாட்டில் நேத்ரா இசையை வெளியிடும் வெங்கடேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் உள்ள கமர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர் ஏ. வெங்கடேஷ்.

இதுவரை 22 படங்களை இயக்கியுள்ள இவர், தற்போது இயக்கியுள்ள படம் ‘நேத்ரா’.

இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார்.

மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன்பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ். தயாரிப்பு – பர.ராஜசிங்கம், ஏ.வெங்கடேஷ்.
லைன் புரொட்யூசர் – குமரவேல் பாண்டியன்.

ஏ.வெங்கடேஷின் படம் என்றாலே அது கமர்ஷியல் ஹிட்டுதான். தயாரிப்பாளர்களை மகிழ்வித்து மகிழும் இயக்குநர்களை கோடம்பாக்கத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த வரிசையில் A.வெங்கடேஷ்க்கு நிரந்தரமாக ஒரு இடம் உண்டு.

இந்தப் படமும் ஆக்சன், திரில்லர் கலந்த கதைதான். கூடுதலாக காதலும் சேர்ந்து கொள்ள.

இந்தக் காலத்திய இளைஞர்களுக்கு பிடித்தமான திரைக்கதையில், தெரிந்த சம்பவங்களில் மிக அழகான முறையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், வித்தியாசமான நகைச்சுவைக்கு இந்த முறை இமான் அண்ணாச்சியுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் கை கோர்த்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் பரா.ராஜசிங்கம் கனடா வாழ் தமிழர். பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே இசை வெளியீட்டு விழா வெளிநாடுகளில் நடந்திருக்கிறது. முதன் முறையாக “நேத்ரா” இசை வெளியீட்டு விழா வரும் இன்று டிசம்பர் 2ஆம் தேதி கனடாவில் நடைபெறுகிறது.

அண்மையில் ரஜினியின் 2.0 இசை வெளியீடு துபாய் நாட்டில் நடைபெற்றது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Nethra audio launch happening today in Canada

விவேக்-தேவயானி இணைந்து நடிக்கும் எழுமின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வையம் மீடியாஸ் சார்பாக வி.பி.விஜி தயாரித்து இயக்குகின்ற படம் ‘எழுமின்’.

‘சின்ன கலைவாணர்’ விவேக் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே ஆரம்பமானது.

இப்படத்தின் இயக்குநர் சமீபத்தில் வெளியான ‘உரு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vivek and Devayani teams up for Ehumin movie

 

 

 

 

தயாரிப்பாளர் அன்புசெழியனை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் என்பவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துக் கொண்டார்.

இதற்கு காரணம் தயாரிப்பாளர் அன்புசெழியன்தான் என கடிதம் எழுதிவிட்டு இறந்துவிட்டார்.

இதனால் ஒரு சிலர் அசோக்குமாருக்கு ஆதரவாகவும் மற்ற சிலர் அன்பு செழியன் நல்லவர் எனவும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக.வை சேர்ந்த எச். ராஜா தன் ட்விட்டரில் சற்றுமுன் பதிவிட்டுள்ளதாவது…

H Raja‏Verified account @HRajaBJP 4m4 minutes ago
பொதுவாக கொலை மற்றும் தற்கொலை வழக்கில் இறந்தவரின் கடிதம் மற்றும் மரண வாக்குமூலம் அடிப்படையில் கைது மேற்கொள்ள வேண்டும். எனவே கடலூர் ஆனந்தின் மரண வாக்குமூலம் மற்றும் அசோக்குமார் கடிதம் அடிப்படையில் கைது மேற்கொள்ள வேண்டும்.நிழல் உலக தாதா அன்புச் செழியனை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

More Articles
Follows