ஏஆர். முருகதாஸின் ‘துப்பாக்கி 2’ படத்தில் விஜய்யின் ஜோடி காஜல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கத்தி, துப்பாக்கி, சர்கார் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

இது விஜய்யின் 65வது படமாக உருவாகவுள்ளது.

இது துப்பாக்கி 2 படமாக உருவாகலாம் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்பட நாயகி யார்? என்பது குறித்த தகவல் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக அண்மையில் தெரிவித்துள்ளார்.

எனவே அவர் தான் தளபதி 65 படத்தின் நாயகியாக இருக்கலாம் என நம்பலாம்.

Kajal Aggarwal will join with Vijay in Thuppakki 2

செம லக்கிம்மா நீ… ஒரே படத்தில் விஜய்-அஜித்-சூர்யாவுடன் நடித்த நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேருக்கு நேர் படத்தின் மூலம் தான் நடிகர் சூர்யா சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.

வசந்த் இயக்கிய இந்த படத்தை மணிரத்னம் தயாரிக்க 1997 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது.

இந்த படத்தில் சூர்யா வேடத்தில் முதலில் அஜித் தான் நடித்திருந்தார்.

சில நாட்கள் அவர் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டது.

அதன் பின்னர் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகினார் அஜித்.

இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஜெனிஃபர்.

இவர்தான் சில ஆண்டுகளுக்கு பிறகு ‘கில்லி’ படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் ‘நேருக்கு நேர்’ படம் தொடர்பாக விஜய் அஜித் மற்றும் சூர்யாவுடன் இருக்கும் படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில் ”வாழ்க்கை என்பது நிகழ்வுகளின் தொகுப்பு. நான் தல அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் நடித்தேன்.
அந்த படம் என் வாழ்வில் மிகச்சிறந்த நிகழ்வு.

ஒரு வாரம் மட்டுமே அந்த படத்தில் நடித்தார் அஜித். பின்னர் சூர்யா நடித்தார். அந்த காட்சிகளை மறுபடியும் படமாக்கினார்கள்.

இந்த படத்துக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை பெற்றேன். மாநில அரசின் விருது உட்பட என தெரிவித்துள்ளார் ஜெனிஃபர்.

இப்போ சொல்லுங்க.. ஜெனி.. லக்கியான ஆளுதானே…

Actress Jennifer talks about Nerrukku Ner flash back

கொரோனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த கலைஞர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“நாளை உனக்கொரு காலம் வரும்” என்ற கொரோனா விழிப்புணர்வு பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு “வானே இடிந்ததம்மா” இரங்கல் பாடல் ஊடாக அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் சதீஸ் வர்சன் அஸ்மின் ஆகியோர் இப் பாடல் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

இசையமைப்பாளர் சதீஸ் வர்சன் இவர் எஸ்பி ஜனநாதன் இயக்கிய “புறம்போக்கு” திரைப்படத்தின் ஊடாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.இவரது புதல்வர்தான் உலகளவில் புகழ்பெற்ற இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் .வர்சன் இப்பாடலுக்கு இசையமைத்து பாடலை பாடியுள்ளார்.

பாடல் வரிகளை தமிழ் சினிமாவில் “தப்பெல்லாம் தப்பேயில்லை” பாடலினூடாக விஜய் ஆண்டனி மூலம் அறிமுகமான இலங்கை கவிஞர் , பாடலாசிரியர் அஸ்மின் எழுதியுள்ளார்.

இலங்கையில் புகழ்பெற்ற கவிஞரான இவர் பல தேசிய விருதுகளையும் பெற்றவர். “விஸ்வாசம்” திரைப்படத்துக்கு இவர் எழுதிய (Tribute Song) ‘தூக்குதொர பேரக்கேட்டா வாயப்பொத்தும் நெருப்பு” பாடல் கூட வைரலானது குறிப்பிடத்தக்கது.

அம்மா இரங்கல் பாடல்

விஸ்வாசம் தூக்குத்தொர பாடல்

‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் பஷீர்.. அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதுகுறித்து அரசாங்கம் ஒருபக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் தன் பங்கிற்கு கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கியுள்ளார் பஷீர்.

“கொரோனா கொரோனா வராதே.. எங்களை நீ என்றும் தொடாதே ” என்கிற இந்தப்பாடலை அறிவுமதி எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருக்கும் சஜித்துல்லா என்பவர் இசையமைத்துள்ள இந்தப்பாடலை பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து விதமான பின்னணிகளும் இடம்பெறுமாறு இரண்டே நாட்களில் அற்புதமாக படமாக்கியுள்ளார் பஷீர்.

இந்தப்பாடலில் பவர்ஸ்டார் உள்ளிட்ட 25 நட்சத்திரங்கள் பங்கேற்று நடித்துள்ளனர். இவர்கள் அத்தனை பேருக்குமே கொரோனா சோதனை செய்துவிட்டு அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திவிட்டு அதன்பின்னரே இந்த பாடலை படமாக்கியுள்ளார் பஷீர்.

இன்று மாலை வெளியாகியுள்ள இந்த விழிப்புணர்வு பாடலில் தமிழக அரசுக்கும் தன்னலம் பாராது மக்களுக்காக இரவு பகலாக உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பஷீர்..

தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க… வீடியோவை ட்விட்டர் நீக்கியது குறித்து ரஜினி விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸ் ஆக கொரோனா உருவெடுத்துள்ளது.

தற்போது இந்தியாவிலும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று வரை 6 பேர் இந்தியாவில் மட்டும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து இன்று மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.

இதனை மக்கள் பின்பற்ற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த், நேற்று டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாம் நிலையில் உள்ளது.

அது இத்தாலி நாட்டு மக்களை போன்று அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும். இல்லை என்றால் இத்தாலி நாட்டை போன்று 3ஆம் நிலைக்கு சென்றுவிடக் கூடாது.

மக்கள் நடமாடும் பகுதிகளில் 12 மணி முதல் 14 மணி நேரம் கொரோனா பரவாமல் இருந்தாலே 3வது நிலைக்கு செல்வதை தடுத்து விடலாம்” என ரஜினி அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

இந்த வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதனால் சர்ச்சைகள் எழுந்தன.

ரஜினி ரசிகர்கள் ட்விட்டர் நிர்வாகத்தை கண்டித்து SHAME ON TWITTER என டிரெண்ட்டிங் செய்தனர்.

இந்த நிலையில் இன்று மார்ச் 12ல் வீடியோவை ட்விட்டர் நீக்கியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Rajini clarifies Why twitter removed his Janata Curfew video

அந்த விளக்கம் இதோ….

BREAKING இயக்குனர் கதாசிரியர் வசனகர்த்தா நடிகர் விசு காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார். விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார்.

1945ஆம் ஆண்டு பிறந்த விசுவின் முழுபெயர் M.R விஸ்வநாதன்.

இவர் முதன்முதலில் பாலசந்திரிடம் துணை இயக்குனராக பணியாறினார். அப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.

விசு நடித்த முதல்படம் ரஜினியின் தில்லு முல்லு அந்த படத்தில் இவர் டப்பிங்கும் செய்துள்ளார்.

மேலும் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பின் கண்மணி பூங்கா என்ற படத்தை இயக்குனாராக அறிமுகமாகினார்.

மேலும் சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் விசு.

இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் தங்கமணி ரங்கமணி. 72 வயதாகும் விசு சீரியல்களில் நடித்ததோடு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

உமா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்ட விசுவிற்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூவரும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில்லாகி விட்டனர்.

திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார்.

இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார்.

பின்னாளில் வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணத்தால் வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று மார்ச் 22 மாலை 5.30 மணியளவில் இவர் மரணமடைந்தார்.

இவரின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tamil film Director Producer Actor Visu passed away

More Articles
Follows