100 கோடி தந்த ‘கைதி’யை பாலிவுட்டுக்கு கொண்டு செல்லும் SR பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019 தீபாவளியன்று கைதி படம் வெளியானது.

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்திருந்தனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.

LOT OF TWIST WITH LORRY… கைதி விமர்சனம் 4/5

அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாம்.

இதனைத் தொடர்ந்து, ஹிந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்கிறார்கள்.

இதன் மூலம் இந்தியில் முதன் முதலாக கால் பதிக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.

Kaithi collected 100 crores and will be remade in Hindi

ஹர்பஜன் சிங்குங்கு ஜோடியானார் பிக்பாஸ் லொஸ்லியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தை பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் பிரித்து விட முடியாது. இரண்டும் எப்போதும் ஒன்றோடு ஒன்றாக பின்னி பிணைந்துள்ளது.

தற்போது கிரிக்கெட்டும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.

ஹிந்தி மற்றும் தமிழ் சினிமாவில் நிறைய கிரிக்கெட் நட்சத்திரங்கள் நடிக்க தொடங்கியுள்ளனர்.

அண்மையில் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

சினிமாவில் அறிமுகமாகும் லாஸ்லியா; ரசிகர்கள் குஷி

சந்தானம் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் `டிக்கிலோனா’ படத்தில் முக்கிய கேரக்டரில் அவர் நடித்து வருகிறார்.

மேலும் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நாயனாக நடிக்கவுள்ளார்.

இதனை `அக்னிதேவி’, `சென்னையில் ஒருநாள் 2′ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர்கள் ஜான்பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்க உள்ளனர்.

இந்த நிலையில் படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக, பிக்பாஸ் புகழ் லொஸ்லியா நடிக்கவுள்ளார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Cricketer Harbhajan to debut as lead in Tamil Cinema with Losliya

பாஃப்டா திரைப்பட விருது விழாவில் 7 விருதுகளை அள்ளிய ‘1917’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற பாஃப்டா திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், முதலாம் உலக போரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட1917 திரைப்படம், சிறந்த திரைப்படம், ஒளிப்பதிவு உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.

ஜோக்கர் திரைப்படத்தில் நடித்த ஜாக்குவின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

ஜுடி திரைப்படத்தில் நடித்த, ரெனி ஜெல்வெகர் சிறந்த நடிகையாகயும், சிறந்த துணை நடிகருக்கான விருதை பிராட் பிட்டும், துணை நடிகைக்கான விருதை லாரா டேரனும் தட்டிச்சென்றனர்.

தென் கொரியாவின் பாரசைட் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படமாகவும், நெட் பிளிக்ஸ் வெளியிட்ட கிளாஸ் திரைப்படம், சிறந்த அனிமேஷன் படமாகவும் தேர்வாகி உள்ளது.

‘1917 movie won 7 Awards including Best movie at BAFTAs

தமிழகத்தை ஆள ரஜினியை அனுமதிக்க முடியாது.; பாரதிராஜா பாய்ச்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தமிழர் இல்லை. அவர் தமிழகத்தை ஆள அனுமதிக்க முடியாது என மீண்டும் தன் பேச்சை ஆரம்பித்துள்ளார் பாரதிராஜா.

இவரின் சமீபத்திய பேட்டியில்…

கேரளாவை மலையாளி ஆள்கிறார். அசாமை ஒரு அசாமியர் ஆள்கிறார். கர்நாடகாவை கர்நாடகக்காரர் ஆள்வது போல் தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும்.

ரஜினி பேர சொல்ல ஏன் பயம்?; சாகுற காலத்துல நடிக்கிறார்.. மன்சூர் அலிகான்

நம் நாட்டை ஒரு வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்கமுடியாதோ அது போல் தமிழகத்தை ரஜினி ஆள்வதை ஏற்க முடியாது.

தான் தமிழன் தான் என ரஜினிகாந்த் சொன்னாலும். அவர் வாழ வந்தவர். அவர் தமிழகத்தி பிறக்கவில்லை. என கூறினார்.

மேலும் ரஜினியை போன்ற ஒரு எளிமையான மனிதரை பார்க்க முடியாது. அவர் மிகவும் நல்லவர் என்றும் கூறினார்.

I Wont allow Rajini to rule Tamilnadu says Bharathiraja

BREAKING சிவகார்த்திகேயன்-14 தலைப்பை அறிவித்த ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயன் 14 படம் சில பைனான்ஸ் பிரச்சினைகளால் கைவிடப்பட்டது.

ஆரம்பத்தில் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.

அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்ததால் தற்போது ‘டாக்டர்’ படத்தை அடுத்து 2-வது முறையாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனுடன் கரம் கோர்த்துள்ளது.

இந்த படத்தை ரவிக்குமார் இயக்க ஏஆர். ரஹ்மான் இசையமைப்பார் என பரபரப்பாக பேசப்பட்டது.

விஸ்வாசம் போல ‘ஹீரோ’ன்னு சொன்னாரே KJR..; கடுப்பில் SK ரசிகர்கள்

இது சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகும் என கூறப்பட்டது.

இதில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்க கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு அயலான் என்று டைட்டில் வைத்துள்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் அறிவித்துள்ளார்.

“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. உலகில் எந்த மூலையிலும் வசிக்கும் எவரும் காதல் கதைகளை தன்னுடன் எளிதில் தொடர்பு படுத்தி கொள்வார்கள். எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்து கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. திரையில் சரியான விதத்தில் சொல்லப்படும் காதல் கதைக்கு மவுசு எப்போதும் அதிகம். அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில், இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகம் கொள்ளச்செய்துள்ளது.

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு இது பற்றி கூறியாதாவது…

இப்படத்தில் சில காட்சித்தொடர்கள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது போன்று அமைந்துள்ளது. அந்தக்காட்சிகளில் உண்மையான இயக்குநர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருக்க வேண்டும் காதல் படங்கள் இயக்குபவராக இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சின் போது அனைவரது தேர்வாகவும் கௌதம் மேனன் இருந்தார். ஆனால் அவர் ஒப்புக்கொள்வாரா ? எனும் தயக்கம் எங்களிடம் இருந்தது. ஆனால் இயக்குநர் அவரை அணுகி கதையையும், அவரது பாத்திரம் குறித்தும் கூறிய போது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். மேலும் வெகு எளிமையாக எங்களுடன் படப்பிடிப்பில் இருந்து நடித்து தந்தார். அவரது காட்சிகளை இப்போது காணும்போது வெகு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களும் பெரு விருந்து காத்திருக்கிறது. இப்படம் இளைஞர்களை கவரும் அட்டகாசமான காதல் படமாக இருக்கும்

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

More Articles
Follows