பஞ்ச பூதங்களுடன் கனெக்ஷன் ஆன கபாலி பாடல்கள்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளைய தலைமுறை இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி பெரும் எதிர்பார்ப்பு உள்ளாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பாடல்கள் இணையத்தில் வெளியாகி ‘நெருப்பாக’ பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாடல்கள் குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த சூப்பர் ஸ்டார் தங்கள் நடிகர்தான் என கூறிவரும் சில ரசிகர்களுக்கு

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு… 25 வருசத்துக்கு முன்னாடி எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துருக்கேன்னு சொல்லு என்று ரஜினி ஸ்டைலில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மேலும் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் இப்படத்தின் பாடல்களை பஞ்ச பூதங்களுடன் ஒப்பிட்டு கூறியிருக்கிறார்.

பாடல்களும் அதன் ஒப்பீடும்…

  • உலகம் ஒருவனுக்கா – நிலம்
  • மாய நதி –நீர்
  • வீரா துறந்தாரா – காற்று
  • வானம் பார்த்தேன் – வானம்
  • நெருப்பு டா – தீ என குறிப்பிட்டுள்ளார்.

கபாலி பாடல் குறித்து விஜய், சிவகார்த்திகேயன் ரியாக்ஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி பாடல்கள் வெளியாகும் நாள் அறிவிக்கப்பட்ட முதலே ஜீன் 12ஆம் தேதி கபாலி தினமாகவே பார்க்கப்பட்டது.

பாடல்கள் வெளியானதை தொடர்ந்து, எங்கு திரும்பினாலும் அப்பாடல்கள் பற்றிய பேச்சே காணப்பட்டது.

நெருப்புடா தொடங்கி கபாலிடா வரை இந்த குரல்களுக்கு பஞ்சமில்லை.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் மிதக்கின்றனர்.

இவர்களைப் போல், பெரிய நட்சத்திரங்களாக திகழும் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் தெரிவித்துள்ளதாவது… செம எனர்ஜியான பாடல்கள். மகிழ்ச்சி என கூறினாராம்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது…

‘கபாலி பாடல்களை கேட்டேன். கலக்கிட்டீங்க சந்தோஷ்… வாழ்த்துக்கள் ரஞ்சித்” என தெரிவித்துள்ளார்.

மேலும் தன் நண்பரான அருண்ராஜா காமராஜக்கு தனது தனிப்பட்ட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அதில்…

“திரும்ப திரும்ப கேட்கும் பாடல் நெருப்புடா… உன் குரல் மற்றும் பாடல் வரிகள் வேற லெவல்.

உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. நீ மிகப்பெரிய உயரம் தொட காத்திருக்கிறேன்“ என பதிவிட்டுள்ளார்.

‘சபாஷ் நாயுடு’வுக்காக மூன்று அவதாரம் எடுத்த கமல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் “சபாஷ் நாயுடு”.

இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார் கமல்.

இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திடீரென இயக்குனர் ராஜீவ் குமாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது.

எனவே, படத்தின் முழு இயக்கத்தையும் தானே கவனிக்கவிருப்பதாக உறுதிபடுத்தியுள்ளார் கமல்.

இதுகுறித்து அவர் கூறியதாவது..

“ராஜீவ்வுக்கு லைம் என்ற நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சையில் இருப்பதால் நான் படத்தை இயக்கிவருகிறேன்.

அவரை பார்த்துக் கொள்ள 24 மணி நேரமும் படக்குழுவிலிருந்து ஒருவர் சென்று மருத்துவமனையில் கண்காணித்து வருகின்றார்” என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் நடிகர், தயாரிப்பாளர் என பணியாற்றி வந்த கமல், தற்போது மூன்றாவதாக இயக்குனர் அவதாரத்தையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களுக்கு சவால் விடும் ‘ரெமோ’.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா துறையில், பெரிய நடிகர்களின் சம்பளத்தை பொறுத்தே படத்தின் பட்ஜெட் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் வளர்ந்து வரும் கலைஞர்களின் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை அப்படத்தின் பட்ஜெட்டாக ஒதுக்கப்படும்.

அதற்கு ஏற்ற கேரக்டர்களை தேர்வு செய்வதே படத்தின் இயக்குனரின் வேலையாக இருக்கும்.

எனவே வளர்ந்து வரும் ஹீரோவுக்கு குறிப்பிட்ட தொகையே சம்பளமாக பேசப்படும்.

இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் படத்திற்கு பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி இருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

இவர் நடித்து வரும் ரெமோ படம் ரூ. 35 கோடியில் உருவாக்கப்பட்டு வருகிறதாம். இப்படத்தை ஆர் டி ராஜா தயாரித்து வருகிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் இஞ்ஜினியராக பணியாற்றி வருகிறார். இசை அனிருத்.

விஜய்சேதுபதியுடன் இணைந்த சிவகார்த்திகேயனின் நண்பர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தர்மதுரை படத்தை முடித்துவிட்டு, றெக்க படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

ரத்னசிவா இயக்கும் இப்படத்தில் நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

இவர்களுடன் கபீர் துகான் சிங், ஹரீஷ் உத்தமன், கே. எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கணேஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து இருக்கிறார் நடிகர் சதீஷ்.

இவர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவயது அம்பேத்கர், பாரதியார், பெரியார் வேடங்களில் நடிக்க ஆசையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர், பாரதியார் முதல் பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படங்களை பார்த்திருக்கிறோம்.

தற்போது அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை படம் ஒன்று உருவாகவுள்ளது.

RUN HORSE MEDIA என்ற நிறுவனம் பாபா சாகேப் என்ற பெயரில் இப்படத்தை தயாரிக்கிறது.

இத்திரைப்படம் பற்றி இயக்குநரும் தயாரிப்பாளருமான அஜய் குமார் கூறியதாவது…

“இது சாதி தலைவரின் படம் அல்ல. ஒரு உன்னத தேசத்தலைவரின் படம்.

ஹாலிவுட்டில் அட்டன்பிரோ என்றவர் காந்தியின் வாழ்கையை படமாக எடுத்தார்.

எனவே, ஒரு தமிழனாகிய நான் நமது அம்பேத்கரின் படத்தை உருவாக்க உள்ளேன். ஆனால், அம்பேத்கர் உருவத்தில் நடிக்க எவரும் எளிதாக சிக்கவில்லை.
சுமார் 10,000 பேர்க்கு மேல் தேர்வு நடத்தினோம்.

இறுதியாக ஆய்வுக்கூடம் படத்தின் நாயகன் ராஜகணபதியை தேர்வு செய்தோம்,

இவர் மட்டுமில்லாமல் அம்பேத்கரின் குழந்தை மற்றும் இளமைவயது தோற்றத்திற்கும் பாரதியார், பெரியார் போன்ற தலைவர்களின் வேடங்களுக்கும் நடிகர்கள் தேவை.

அன்னல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டமும், நடிகர்களுக்கான தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது.

தேர்வு நடைபெறும் நாள் மற்றும் முகவரி விவரங்கள்…

நாள் :19/06/2016
இடம்:வள்ளுவன் வாசுகி மண்டபம், அஜய் விளையாட்டு அரங்கம் அருகில்,
ஜெக ஜீவானந்தம் சிலை சாலை, முருகப்பா கல்லூரி பஸ் ஸ்டாப், ஆவடி,
சென்னை -54

தொடர்புக்கு… 80569 46323,70929 51113.

MAIL: ajaays2015@gmail .com

More Articles
Follows