‘கபாலி’ இயக்குநர் ரஞ்சித்துடன் இணையும் கதிர்-ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விரைவில் மீண்டும் ரஜினியை இயக்கவிருக்கிறார் ரஞ்சித்

இந்நிலையில் தனது அடுத்த அவதாரமாக தயாரிப்பாளர் ஆகிறார் ரஞ்சித்.

தயாரிப்பு நிறுவனத்திற்கு நீலம் புரொடக்சன் என பெயரிட்டு, ‘பரியேறும் பெருமாள்’ (PARIYERUM PERUMAL) என்ற படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்

இயக்குநர் ராமின் உதவியாளர் மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கவிருக்கிறார்.

‘கிருமி’ பட நாயகன் கதிர் நாயகனாக நடிக்க, ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறாராம்.

ஜனவரி மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

படப்பிடிப்பு முழுவதும் நெல்லையில் நடைபெறுவதால் அந்த மாவட்ட மக்களை நடிக்க வைப்பதிற்கான தேர்வு இப்பொழுது நடைபெற்று வருகிறது.

விஷால் ஆதரவுடன் தேர்தலில் குஷ்பூ போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி எஸ் தாணு தலைமையிலான குழு தயாரிப்பாளர் சங்கம் கடந்த 2015 ஆம் பதவி ஏற்றது.

இதில் அம்மா கிரியேஷன் T.சிவா, பைவ் ஸ்டார் கதிரேசன், P.L.. தேனப்பன் ராதா கிருஷ்ணன், ஆகியோர் முக்கிய நிர்வாக பொறுப்பில் இருந்து வந்தனர்.

பழைய நிர்வாகத்தின் பதவி காலம் முடிவடைந்து தற்போது வருகிற பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டும் பலர் தனி தனி குழுக்களாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகிறார்கள்.

சமீபத்தில் விஷால் தலைமையிலான கூட்டம் நடைபெற்றது.

இதன் முதல் முயற்சியாக விஷால் தலைமையிலான அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு குஷ்பூ சுந்தர் அவர்கள் போட்டியிடவுள்ளார் என்றும் மற்ற நிர்வாகிகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.

விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறினார் விஷால்.

Vishal support Khushboo for producer council election

தன் பிறந்த நாளில் ரஜினி-தனுஷுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 2017 புத்தாண்டு பிறந்த தினம்.

இதே நாளில்தான் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் நம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஒரு தமிழரின் சாதனையை படமாக்கவிருக்கிறாராம் ஐஸ்வர்யா.

இதுநாள் வரை இதுபோன்ற விளையாட்டு வீர்ர்களின் படங்கள் படமாக்கப்பட்டாலும் தமிழக வீரர்களின் சாதனைகள் படமாகவில்லை.

இதன்மூலம் தமிழகத்திற்கும் தன் குடும்பத்திற்கு பெருமை சேர்க்க உள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

அண்மையில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் தமிழகத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றைத்தான் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவுள்ளார்.

தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு சீன்ரோல்டன் இசையமைக்கவுள்ளார்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா எடிட்டிங் செய்யவிருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று ஷாரூக்கான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரியப்பன் கேரக்டரில் நடிப்பது யார்? என்ற தகவல் வெளியாகவில்லை.

Aishwarya R. Dhanush’s next a biopic on Mariyappan Thangavelu

மோடிக்கு ஆதரவளித்த ரஜினி இதை கண்டுக் கொள்ளவில்லையே?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைகாலமாக ரஜினியும் தன்னுடைய கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.

மோடியின் கருப்பு பணம் ஒழிப்பு திட்டத்திற்கு ஆதரவளித்த புதிய இந்தியா பிறந்தது என்றார்.

ஆனால் சமீபகாலமாக ஜல்லிக்கட்டு பற்றி, பலரும் விவாதித்து வருகின்றனர்.

ஆனால் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி இதுவரை ரஜினி வாய்திறக்கவில்லை.

இது ஏன்? என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

புத்தாண்டை கொண்டாட மனமில்லை… விரக்தியில் நடிகர் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை 2017ஆம் புத்தாண்டு பிறக்கிறது.

பலரும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகிவரும் நிலையில், இதனை கொண்டாட மனம் இல்லை என நடிகர் விவேக் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில்…

“முதல்வர் மறைந்ததால் மனப் புழுக்கம்.

முடியவில்லை நடக்கவில்லை பணப் புழக்கம்;

புயல் அடித்து மரம் ஒடித்து வெயில் கொளுத்தும்;

இந்த வேளையில் எங்கிருந்து புத்தாண்டு முழக்கம்?” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அவர்.

அஜித் ரசிகர்களின் புத்தாண்டு ஆசையை நிறைவேற்றுவாரா சிவா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை 2017ஆம் ஆண்டின் பிறப்பை முன்னிட்டு, விஜய், தனுஷ், சிம்பு ஆகிய நடிகர்கள் தங்களின் படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவைகளை புத்தாண்டு விருந்தை அளித்து வருகின்றனர்.

ஆனால் வேதாளம் படத்திற்கு பிறகு அஜித்தின் தல 57 படம் தொடர்பாக எந்த ஒரு பர்ஸ்ட் லுக்கோ, டீசரோ எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று தல தல தான் என்று ரசிகர் மன்றத்தினர் இயக்குநர் சிவாவுக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

அதில்…

“வேதாளம் படத்திற்கு பிறகு எங்களை வெகு மாதங்களாக காத்திருக்க வைக்கிறீர்கள்.

ரசிகர்கள் அனைவரும் இந்த நியூ இயர் தல படத்தின் முதல் பார்வையோடு கொண்டாட விரும்புகிறோம்.

தயவு செய்து எங்களின் கோரிக்கையை ஏற்று தல 57 firstlook அல்லது படத்தின் தலைப்பையாவது வெளியிடுங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

அஜித் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா சிவா? என்பதை இன்று வரை காத்திருந்து பார்ப்போம்.

More Articles
Follows