ஜோ-ராதாமோகன் படத்தலைப்புக்கு போட்டி அறிவித்துவிட்டு இப்படி செய்யலாமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்யா பாலன் நடித்த பெரும் ஹிட்டான ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கை ராதா மோகன் இயக்குகிறார்.

இதன் நாயகனாக விதார்த் நடிக்க, கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்கவுள்ளார்.

இப்படத்தை போஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு குறித்த போட்டி அறிவிப்பு வெளியானது.
அதாவது…

1. தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது.

2. ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது.

3. மற்றுமொரு வார்த்தை எஃப்.எம்., ரேடியோவின் பெயர்.
என அறிவித்து இருந்தனர்.

படத்தின் தலைப்பை சரியாக சொன்னால் அவர்கள் சூட்டிங் ஸ்பாட் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் படத்தின் தலைப்பை காற்றின் மொழி என அறிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை மதன் கார்க்கி வெளியிட்டுள்ளார்.

போட்டி, வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் படத்தின் தலைப்பை ஒரு பிரபலம் அறிவிப்பார் என்று அதில் அறிவித்து இருந்தனர்.

ஆனால் இன்று ஏப்ரல் 19ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி அறிவிப்பு வெளியான செய்தி…

https://www.filmistreet.com/cinema-news/guess-jyothika-radha-mohan-film-title-and-be-their-vip-guest/

Jyothika Vidaarth Radha Mohan film titled Kaatrin Mozhi

கணவர் ராஜசேகருக்கு நடிகைகளை சப்ளை செய்தாரா ஜீவிதா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் பட உலகில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜீவிதா.

இவர் தெலுங்கு படங்களில் நடிக்கும்போது நடிகர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஜீவிதாவும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஸ்ரீரெட்டி மீதான பாலியல் புகார் குறித்து சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த டெலிவிஷன் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய சமூக ஆர்வலர் சந்தியா, இளம்பெண்களை கட்டாயப்படுத்தி, கணவர் ராஜசேகரின் படுக்கைக்கு ஜீவிதா அனுப்பியதாக குற்றம் சாட்டினார்.

இது பட உலகில் பரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதில் அளித்து ஜீவிதா கூறியதாவது…

“என்மீது சந்தியா கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை. திரையுலகினரை இழிவாக நினைக்கும் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்.

யாரையும் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைத்து செல்ல நடிகைகள் ஒன்றும் தெரியாத குழந்தைகள் இல்லை. எல்லா பெண்களுமே 20 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான்.

தெலுங்கு திரையுலகினரை நடிகை ஸ்ரீரெட்டி களங்கப்படுத்தி வருகிறார். பல ஆண்டுகளாக ஏமாறி வருவதாக கூறி வருகிறார்.

அவர் என்ன குழந்தையா..? ஒரு வீடியோவில் 24 மணிநேரமும் செக்ஸ் மூடிலேயே இருப்பதாக ஸ்ரீரெட்டி கூறியிருந்தார். இதற்கு என்ன அர்த்தம-

நடிகர் ராணாவின் தம்பியை முத்தமிட்டு போட்டோ எடுத்துள்ளார். அவர்கள் விரும்பியே முத்தமிட்டுள்ளனர்.

மூத்த நடிகைகள் ஸ்ரீரெட்டிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

அதிக முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் யாரை நடிக்க வைத்தால் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்று நினைக்கிறாரோ அவரைத்தான் ஹீரோயினாக நடிக்க வைப்பார்கள். இவருக்கு எப்படி சான்ஸ் தரமுடியும்.”

இவ்வாறு ஜீவிதா தெரிவித்துள்ளார்.

Activist Sandhya accuses Jeevitha Rajasekhar of sending girls to her husband

நயன்தாராவின் கல்யாண கணக்கு; கூட்டி கழிச்சி பாருங்க சரியா வரும்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2003ஆம் ஆண்டில் மலையாள படங்களில் அறிமுகமானாலும் அதன்பின்னர் தமிழில் நிலையான மார்கெட்டை பிடித்தார் நயன்தாரா.

இதனையடுத்து தெலுங்கு படங்களிலும் அதிகம் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.

இப்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் நயன்.

2010ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலேயே அதிகம் நடித்து வருகிறார்.

இடையில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளாராம்.

தமிழ், தெலுங்கு அளவுக்கு மலையாளத்தில் சம்பளம் கிடையாது என்றாலும் கதாநாயகிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல கேரக்டர்கள் அங்கு கிடைக்கும்.

தற்போது நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படத்தில் நடிக்கிறார்.

அடுத்து ‘கோட்டயம் குர்பானா’ என்ற மலையாள படத்திலும் நடிக்கவுள்ளார்.

அவரின் இந்த திடீர் மலையாள ஆர்வத்திற்கான காரணம் என்ன தெரியுமா..?

திருமணத்திற்கு பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்காது.

எனவே மலையாள படங்களில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவிட்டால் அது திருமணத்திற்கு பின்னர் கை கொடுக்கும் என்பதாலேயே இந்த முடிவாம்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதால் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இப்போ கூட்டி கழிச்சி பாருங்க.. நயன்தாரா கணக்கு சரியா வருமே..

Lady SuperStar Nayanthara plan to act after marriage

வெள்ளித்திரையிலும் கலக்க ஆசைப்படும் தெய்வ மகள் காயத்ரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரேகா கிருஷ்ணா தெய்வ மகள் நெடுந்தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான ஒரு நபர். இவங்க பேரு இப்போ காயத்ரி அப்டின்னு கூப்ட்றவங்க தான் அதிகம்.

ரேகா கிருஷணா பெங்களூரில் பிறந்தவர், கன்னடம், மலையாளம், தமிழ்-னு கிட்டதட்ட 12 வருடமாக 40 தொலைகாட்சி தொடரில் நடித்து கொண்டிருக்கிறார், அவங்க பண்ண எல்லா ரோலும் வில்லதனமானதுன்னு கூட சொல்லலாம் நடிப்பு மட்டும் இல்லாம இவங்க ஒரு நல்ல நடன கலைஞர் மற்றும் புகைப்பட கலைஞர்.

தமிழில் இவர் அறிமுகமான முதல் தொடர் விஜய் டிவி யில் வெளியான பாரிஜாதம்.

என்ன தான் பல தொடர்களில் இவர்கள் நடித்து இருந்தாலும் தெய்வ மகள் புகழின் உச்சம் என்றே சொல்லலாம்.

தனது நடிப்பு சின்ன திரையில் மட்டும் அல்லாது திரைப்படங்களிலும் இருக்க வேண்டும் என்ற ஆசையை அவர் கூறியுள்ளார்.

கன்னடத்தில் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழ் படங்களில் நடிப்பது தான் தன்னுடைய குறிக்கோள் எனவும் கூறியுள்ளார்.

நல்ல கதாபத்திரங்கள் வரும்போது அதனை தேர்வு செய்து நடிப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Deiva Magal serial fame Rekha krishna wish to act in Tamil movies

புதுப்படங்ளை ரிலீஸ் செய்ய வேண்டாமே..? உதயநிதி கருத்துக்கு எதிராக உயரும் குரல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதால் அந்த சமயத்தில் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த கூடாது என சிலர் தெரிவித்தனர்.

அதே சமயம் திரையுலகினரும் தங்கள் துறைக்காக வேலை நிறுத்தம் செய்து, புதுப்படங்களை வெளியிடாமல் க்யூப் டிஜிட்டல் கட்டணத்திற்கு எதிராக போராடி வந்தனர்.

தற்போது திரையுலகம் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான விசாரணை வழக்கு மே 3ஆம் தேதி வருகிறது.

இந்நிலையில் காவிரிக்காக தமிழ் திரைப்படங்களின் வெளியீடும் ஒத்திவைக்கப்படுமா..? என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ ஐபிஎல் போட்டிகள்போல் தமிழ்நாட்டில் தமிழ் திரைப்படங்கள் வெளியீடுகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை ஒத்திவைக்கப்படுமா.. ? செயல்படாத மத்திய மாநில அரசுகளின் கவனத்தை இன்னும் அதிகமாக ஈர்க்க உதவுமே..” என தெரிவித்துள்ளார்.

48 நாட்களாக புதுப்படங்கள் வெளியாகாமலும் பெப்சி தொழிலாளர்கள் வேலையிழந்தும் இருந்து வந்தனர்.

அப்போது தன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை ரி-ரிலீஸ் செய்தார். தற்போது ஸ்டிரைக் முடிவுக்கு வந்தபின் அவர் மீண்டும் இந்த பிரச்சினையை திசை திருப்ப பார்க்கிறார் என்ற கண்டனங்கள் எழுந்துள்ளன.

மேலும் ஐபிஎல் அணிகளில் ஒரு அணியை திமுக குடும்பத்தை சேர்ந்தவர்கள் வைத்துள்ளனர்.

அவர்கள் அந்த அணியை விளையாட விடாமல் செய்திருக்கலாம். அல்லது காவிரிக்காக தன் குடும்ப சேனல்களை நிறுத்தி வைத்திருக்கலாம்.

இப்படி எதையுமே செய்யாமல் மற்றவர்கள் குறை சொல்வதில் என்ன நியாயம்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

New Tamil movies release may postponed Udhayanidhi tweet made issue

தயாரிப்பாளர்கள் சங்க வெற்றியை கொண்டாட Mr சந்திரமெளலி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 01, 2018 முதல் தமிழ் திரைப்படங்கள் சம்மந்தமான பட ரிலீஸ், சூட்டிங், பத்திரிகையாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை.

கியூப் மற்றும் யூ.எப்.ஓ போன்ற டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்களின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது.

தற்போது கட்டண குறைப்புக்கு கியூப் நிறுவனம் இறங்கி வந்துள்ளதாலும் மற்ற திரையுலகின் மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளதாலும் வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா நிகழ்வுகள் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

இதன் முதல் கட்டமாக, நடிகர்கள் கார்த்திக் மற்றும் அவருடைய மகன் கவுதம் கார்த்திக் மற்றும் ரெஜினா கசண்டரா நடிப்பில் திரு இயக்க ஜி.தனஞ்செயன் தயாரித்துவரும் “Mr.சந்திரமெளலி” திரைப்படத்தின் இசை வெளியீடு, ஸ்ட்ரைக்குப் பின் நடைபெறும் முதல் பெரிய நிகழ்ச்சியாகும்.

சத்யம் சினிமாஸ் திரையரங்கில் ஏப்ரல் 25 புதன்கிழமை அன்று நடைபெறவிருக்கும் “Mr.சந்திரமெளலி” திரைப்படத்தின் இசை இசை வெளியீட்டு விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தின் குழுவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் பங்குபெறுகிறார். இது அவருக்கான பாராட்டு விழாவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Mr Chandramouli team plan to celebrate TFPC strike success

More Articles
Follows