என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் இது; பாலிவுட்டில் நுழையும் ஜீவா பரவசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் நடிகர்களில் திறமை வாய்ந்தவர் என்ற பெயர் பெற்றவர் நடிகர் ஜீவா…

எண்ணிக்கையை விட என்ன படம் செய்கிறோம் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி , கலகலப்பு 2 என வெற்றிப் படங்கள் அமைந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது.

சமீபத்தில் அவரை சந்தித்து பேசிய போது….

அவரது முதல் ஹிந்தி பிரவேசத்திற்கு வாழ்த்து சொல்லி ஆரம்பித்தோம்.  இந்த 2019 உங்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும் அல்லவா..

* நிச்சயமாக…2018 லேயே எனக்கு அந்த நம்பிக்கை ஏற்பட்டது…

சங்கிலி புங்கிலி படமும் கலகலப்பு 2 படமும் வெற்றி பெற்று எனக்கு உற்சாகத்தை கொடுத்தது… அதற்கு பிறகு நிறைய கதைகள் கேட்டேன்.

அதில் சிறந்ததாக கொரில்லா, ஜிப்ஸி என இரண்டை மட்டும் தேர்வு செய்தேன்….இந்த இரண்டு படங்களும் ரொம்ப சிறப்பாக வந்திருக்கு.

தற்போது மொத்தம் ஆறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.. இப்போ சூப்பர்குட் பிலிம்ஸ் 90 வது படமாக SGF 90 படத்தில் நானும் அருள் நிதியும் சேர்ந்து நடிக்க சூட்டிங் விறு விறுப்பா போயிட்டிருக்கு.. .டைட்டில் கூடிய சீக்கிரம் சொல்வோம்…ஜாலியான படமா இருக்கும்..

மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கீங்க…எப்படி செலக்ட் செய்றீங்க…

முதல்ல கதை…அதற்கப்புறம் கேரக்டர்…இரண்டும் பிடிச்சிருந்தா ஓ.கே சொல்வேன்…நல்ல டீம் அமைஞ்சா நடிக்க தயாராயிடுவேன்…அப்படி நடிச்சி ஹிட்டான படம் தான் கலகலப்பு 2..

முதல் முதலா ஹிந்தி படத்துல நடிக்கிறீங்க…அது பற்றி சொல்ல முடியுமா…

· நிச்சயமா…”1983 வேர்ல்ட் கப் ” என்ற படத்துல நடிக்கிறேன்…ரன்வீர் சிங் நடிக்கிறார். மல்டி ஸ்டார் மூவி…பாகுபலி எப்படி ஸ்கிரீன்ல பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்துச்சோ. அது மாதிரி இந்த படமும் இருக்கும்…100 கோடிக்கு மேல செலவு செய்து எடுக்குற படம்…

நான் கிரிக்கெட்ல ரொம்ப ஆர்வம் உள்ளவன்…நிறைய கிரிக்கெட் மேட்ச்ல ஜாயின் பண்ணி இருக்கேன்..ஜெயிச்சிருக்கேன். அப்படிப் பட்ட எனக்கு கிடைச்ச முதல் ஹிந்திப் படமே கிரிக்கெட் சம்மந்தப் படம்னு சொல்லும் போது எப்போ காமிரா முன்னாடி நிப்போம்னு ஆர்வமா இருக்கேன்…

1983 ல இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிச்சி பெருமை தேடிக் கொடுத்த அந்த சம்பவங்கள் தான் கதைக்களம்…

கிட்டத்த 100 நாள் லண்டன்ல ஷுட்டிங்…அதுக்கு இப்பவே தயாராயிட்டு இருக்கோம்..அப்போ அந்த டீம்ல இருந்த நல்ல கிரிக்கெட்டர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சார். அவரது கதாபாத்திரத்தில் நடிக்கிறது எனக்கு பெருமை தானே…தமிழ் நாட்டு வீரர்கள்ன்னு எடுத்துக்கிட்டா நாலு பேர் தானே…

அந்த கேரக்டர் எனக்கு கிடைச்சது பெருமையான விஷயம் தானே…

மே மாசம் ஷுட்டிங் லண்டன்ல ஆரம்பிக்குது…

மிகப் பிரபலமான பெளலரான சந்து வீட்டுக்கே வந்து கோச் கொடுத்துட்டு இருக்கார்…இப்பவே அந்த படத்துக்கு தயாராயிட்டு இருக்கோம்..

லகான் , M.S.டோனி படங்கள் வரிசையில் 1983 வேர்ல்ட் கப் படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு எகிறி கிடக்கு…

இனிமே யானை மாதிரி நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும் பதியற மாதிரி இருக்கும்..2019 எனக்கு மட்டுமில்ல…சினிமாவுக்கே நல்லது நிறைய நடக்கும்னு நிறைய நம்பிக்கை இருக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.

சினிமாவுக்கு நல்ல வழி கிடைக்க வேண்டும்… அனைவருக்கும் தை பொங்கல் வாழ்த்துகள்…. உழவு தொழில் சிறக்கட்டும்.. உயரிய நிலை அடையட்டும்…என்றார் ஜீவா..

அமெரிக்காவை அலற விட்ட பேட்ட; ஒரு மில்லியன் வசூலை அள்ளிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்த ‘பேட்ட’ படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் வெளியானது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சென்னை வசூலில் முதல் இடத்தில் உள்ளது பேட்ட. ஆனால் மற்ற ஏரியாக்களில் படத்தின் நீளம் காரணத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் விஸ்வாசம் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் ‘பேட்ட’ படம் மூன்று நாட்களில் 1 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

அதாவது ஜனவரி 9ம் தேதியன்றே பிரிமியர் காட்சிகள் திரையிடப்பட்டன. அதில் மட்டும், 5,62,000 யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளதாம்.

மேலும் 10 மற்றும் 11ம் தேதிகளில் கிடைத்த வசூலையும் சேர்த்து தற்போது 1 மில்லியன் யுஎஸ் டாலர்களைக் கடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இன்னும் சில தினங்களில் ‘பேட்ட’ படத்தின் வசூல் 2 மில்லியனை எளிதில் கடந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

இதற்கு முன்பு ரஜினி நடித்த “எந்திரன், காலா, கபாலி, 2.0” ஆகிய படங்கள் 1 மில்லியன் டாலர் வசூலைக் கடந்துள்ளன.

இதில் ‘2.0’ படம் மட்டும் 5 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

அதையும் பேட்ட முறியடிக்குமா? என்பது சந்தேகம் தான்.

Rajinikanths Petta collected 1 Million dollars in US

இசைஞானி இளையராஜா இசையில் பாடகியான 9 கல்லூரி மாணவிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா.

அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன் அவரது இசையில் தாங்கள் பாடவும் விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.

இது இசைஞானி இளையராஜாவின் எண்ணத்தில் அலையடித்திருக்கிறது. அதன் விளைவாக இப்போது இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை வைத்து இருக்கிறார் இசைஞானி. அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளைத் தேர்வு செய்து இருக்கிறார்.

இந்த ஒன்பது பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகிவுள்ளனர். இசைஞானி மூலம் தங்கள் கனவு நினைவானதில் அந்த 9 மாணவிகளும் பூரிப்பில் உள்ளனர்.

விஷால் திருமணம்; தவறான செய்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷாலின் திருமணம் பற்றி இந்த படத்திலிருக்கும் பெண்மணியின் புகைப்படத்துடன் விஷாலின் மணமகள் என்று வெளி வந்து பரவி கொண்டிருக்கும் செய்தி முற்றிலும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும்.

முறைப்படி அறிவிப்பு வெளியாகும்.மேலும் திருமணம் பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு அளிக்கப்பட்ட பின் செய்திகளை வெளியிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கழுகு 2 படத்திற்காக சகலகலா வள்ளியாக மாறிய யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகும் வரிசையில் சில வருடங்களுக்கு முன் கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்து வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் கழுகு-2. கிருஷ்ணா – பிந்துமாதவி ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்தப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான நாய்கள் வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிருஷ்ணா.

இந்த படத்தில் இன்னும் ஒரு முக்கியமான சிறப்பம்சமாக நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நன்கு அறிமுகமாகியுள்ளார்.

எனவே அவரை ஒரு பாடலுக்கு ஆடவைக்க முடிவு செய்து அவரிடம் கூறியபோது, பாடலின் முக்கியத்துவத்தை உணர்ந்து சந்தோஷத்துடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் யாஷிகா..

‘சகலகலா வள்ளி’ எனும் இந்தப்பாடல் கிட்டதட்ட 300 நடன கலைஞர்களுடன் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல நடன இயக்குனர் தீனா இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

கழுகு 2 படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக அமையும் இந்த பாடல் இன்று வெளியானது.

‘யு’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படம் விரைவில் வெளிவரும்.

என்னை உசுப்பேத்தியே கார்த்திக் சுப்பராஜ் நடிக்க வைச்சுட்டார். : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட பட பாடல்களை வெளியீட்டுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக கடந்த டிசம்பர் 22ந்தேதி அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்.

மூன்று வாரங்கள் ஓய்விற்கு பிறகு சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் ‘பேட்ட’ திரைப்பட ரிலீசை ரசிகர்கள் கொண்டாடி வருவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

20 வருடங்களுக்கு முன்பு பார்த்த ரஜினியை திரையில் பார்த்ததாக கூறுகிறார்களே அது குறித்து உங்கள் கருந்து என்ன? என்றும் கேட்டனர்.

‘பேட்ட ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம்.

ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே எனது வேலை.

பேட்ட திரைப்படம் சிறப்பாக வந்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்தான் காரணம். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி நடிக்க வைத்தார்கள்.” என்றார்.

Rajinikanth reaction towards Petta release and fans response

More Articles
Follows