சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரி ரீமேக்கில் நடிக்கும் ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வாரம் மலையாளத்தில், ‘சுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில்’ என்கிற படம் வெளியானது.

டினு பாப்பச்சன் என்பவர் இயக்கியிருந்த இப்படத்தில் ‘அங்கமாலி டைரீஸ்’ புகழ் ஆண்டனி வர்கீஸ்தான் நாயகனாக நடித்திருந்தார்.

தன் நண்பர்களுடன் இணைந்து ஜெயிலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனின் சாகச கதை இப்படத்தின் கதையாம்.

இந்தப்படத்தை பார்த்த நடிகர் ஜீவா படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.

தமிழிலும் டினு பாப்பச்சன்தான் இயக்கவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Jiiva plays lead role in Swathanthryam Ardharathriyil Malayalam remake

காலா பொலிக்டிக்கல் ஸ்டோரிதான்; கன்பார்ம் செய்தார் கதாநாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாகவே ரஜினிகாந்த் படங்களுக்கு எல்லா தரப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கும்.

அதுவும் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்த பின்னர் காலா திரைப்படம் வருவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

அண்மையில் காலா டீசர் வெளியாகி தமிழகத்தை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

இந்நிலையில் காலா படத்தில் நாயகியர்களில் ஒருவராக நடித்துள்ள அஞ்சலி பாட்டீல் தன் கேரக்டர் குறித்து கூறியுள்ளார்.

இவர் தாராவி பகுதியில் வாழும் தமிழ் பேசத் தெரிந்த மராத்திப் பெண்ணாக நடித்திருக்கிறாராம்.

அவர் கூறியதாவது…

ரஜினி சார் ரொம்ப எளிமையான மனிதர். அவரிடம் இருந்து மனிதத் தன்மையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

காலாவில் என் கேரக்டர் பெயர் ‘புயல் சாருமதி கெய்க்வாட்’.

இந்த படத்தில் ரஜினி சாரின் காதலியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார்.

எனக்கும் ஒரு முக்கியமான கேரக்டர் உள்ளது. கதையை நகர்த்திச் செல்லும். சிறப்பான பல காட்சிகளில் நான் இருப்பேன்.

காலா ஒரு அரசியல் படம்தான். அழுத்தமான அரசியல் கருத்துக்கள் படத்தில் இருக்கிறது.

படத்தின் பாதியை மகாராஷ்டிராவிலும், பாதியை தமிழ்நாட்டிலும் எடுத்திருக்கிறோம்.

படத்திலும் மராட்டியம் சம்பந்தமான பல விஷயங்கள் உண்டு. இந்த படத்தில் நான் நடிக்க அதுவும் ஒரு காரணம்.” என கூறினார் அஞ்சலி பாட்டீல்.

Kaala will be Action based political story says Anjali Patil

கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் ரெஜினா.; வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு திரு இயக்கும் படம் மிஸ்டர்.சந்திரமவுலி.

இதில் நவரச நாயகன் கார்த்திக் அவரது மகன் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர்களுடன் ரெஜினா கெசண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ், விஜி சந்திரசேகர், மைம்கோபி, அகத்தியன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்க, போப்டா மீடியா ஒர்க் சார்பில் தனஞ்செயன் தயாரித்து வருகிறார்.

அண்மையில் இதன் சூட்டிங்கை தாய்லாந்தில் முடித்துவிட்டு படக்குழு சென்னை திருமபியது.

தற்போது இப்படத்தில் இடம் பெற்ற ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து இளைஞர்களை சூடேற்றும் வகையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் ரெஜினா.

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியை அள்ளி வழங்கியிருக்கிறார்.

இப்போ சொல்லுங்க.. நாங்க வைச்ச டைட்டில் சரிதானே… கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் ரெஜினா

Actress Regina Cassandras hot stills goes viral

ஸ்டெர்லைட் போராட்ட முறையே தப்பு; நடிகர் பீச்சாங்கை கார்த்திக் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அங்குள்ள மக்கள் கடந்த 50 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக மக்களும் தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பீச்சாங்கை என்ற படத்தில் நடித்த கார்த்திக் என்பவர் இந்த போராட்டமே தேவையில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

மேலும் தமிழக மக்களிடம் ஒற்றுமையில்லை என்பதாலேயே இந்த போராட்டங்களில் தீர்வு இல்லை எனவும், அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

Ban Sterlite protest is wrong says Peechaankai fame Actor Karthik

அவரின் பேட்டி இதோ….

மீண்டும் இணையும் பிரபுதேவா-நயன்தாரா; விக்னேஷ்சிவன் கோவிச்சிக்கமாட்டரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வில்லு படத்தில் பணி புரிந்த போது டைரக்டர் பிரபுதேவாவுக்கும் நாயகி நயன்தாராவுக்கும் லவ் ஆனது.

அதன்பின்னர் நயன்தாராவை திருமணம் செய்ய தன் காதல் மனைவியை விவாகரத்தும் செய்தார் பிரபுதேவா.

அதன்பின்னர் என்ன ஆனதோ? இவர்களின் காதல் பிரேக் அப் ஆனது.

தற்போது விக்னேஷ் சிவனுடன் நெருக்கம் காட்டி வருகிறார் நயன்தாரா.

அவரை தன் வருங்கால கணவர் என்ற முறையிலேயே ஒரு பொது மேடையில் பேசினார்.

இந்நிலையில் விசுவாசம் படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள ஒரு படத்தை பிரபுதேவா இயக்கவிருக்கிறாராம்.

இது தொடர்பாக அஜித்தை அடிக்கடி பிரபுதேவா சந்தித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் நாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறதாம்.

ஒருவேளை இது உறுதியானால் இப்பட அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

சிம்பு உடன் காதல் முறிவுக்கு பின்னர் அவருடன் இணைந்து நடித்தார் நயன்தாரா.

எனவே பிரபுதேவா உடன் அவர் நிச்சயம் இணைந்து பணி புரிவார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அதெல்லாம் சரிதான். விக்னேஷ் சிவன் ஒத்துக் கொள்வாரா பாஸ்..?

Will Vignesh Shivan accept Prabudeva Nayanthara new project

ஒளிப்பதிவாளரை மணக்கிறார் ஜோக்கர் நாயகி காயத்ரி கிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜீமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் அனைத்து தரப்பினைரையும் கவர்ந்த படங்களில் ஒன்று.

இப்படத்தில் ரம்யா பாண்டியன் மற்றும் காயத்ரி கிருஷ்ணன் நாயகிகளாக நடித்திருந்தனர்.

தற்போது ஆண் தேவதை என்ற படத்தில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்.

மற்றொரு நாயகியான காயத்ரி கிருஷ்ணன் நிறைய மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கும் ஒளிப்பதிவாளர் ஜீவன்ராஜுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.

இவர்களின் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அடுத்தஆண்டு இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கவுள்ளதாம்.

Joker fame Gayathri Krishnan marriage news updates

More Articles
Follows