பார்த்திபனுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி கடிதம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெற்று மீண்டும் முதல் அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

எனவே பாரத பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரபலங்கள் பலரும் முதல்வருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இவர்களுடன் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் முதல்வருக்கு வாழ்த்து செய்தியை அனுப்பியிருந்தார்.

எனவே, தனக்கு வாழ்த்து தெரிவித்த பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தினை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

இத்துடன் தனது பாணியில் சில வரிகளையும் வெளியிட்டுள்ளார்.

அந்த வரிகள் இதோ…

“கபால்-ன்னு ஒரு மகிழ்ச்சி தபால் கண்டதும் குழந்தை கடத்தல் தடுக்கப்பட்ட என்ற நற்செய்தியும் வரும் என்பது நம்பிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.

 

‘சூர்யாவுக்கு அது முக்கியமான படமாக இருக்கும்..’ – ரஞ்சித்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படம் ரிலீஸ் தேதியை நெருங்குவதால் படத்தின் புரமோசன் பணிகளில் ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர் பிஸியாக இருக்கின்றனர்.

இதனிடையில் கபாலி படத்தின் தெலுங்கு பதிப்பின் பத்திரிகையாளர் சந்திப்பில் ரஞ்சித் கலந்து கொண்டார்.

அப்போது கபாலி படம் குறித்தும் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அவர் பேசியதாவது…

“அடுத்து சூர்யா படத்தை இயக்கவிருக்கிறேன். அது நிச்சயம் சூர்யாவின் கேரியரில் மிகமுக்கியமான படமாக இருக்கும்.

மாஸ் ஹீரோயிசம் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும்.” என்றார்.

ரஜினி ரசிகர்களால் கபாலி குழுவினருக்கு ஏற்பட்ட சங்கடம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில், இந்தி நடிகர் இர்பான் கான் மும்பையில் நடைபெற்ற ‘மடாரி’ பட புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது ‘கபாலி’ படத்தின் போஸ்டர் டிசைனும் ‘மடாரி’ படத்தின் போஸ்டர் டிசைனும் ஒன்றாக இருப்பதை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்… “கபாலி குழுவினர் எங்களது போஸ்டரை அபகரித்துக் கொண்டார்கள். நாங்கள் எடுத்திருப்பது ஒரு சின்ன படம்தான்.

போஸ்டர் டிசைன் ஒன்றும் பெரிய விஷயமில்லை. இரண்டு படத்தையும் நீங்கள் பாருங்கள்” என்று பதிலளித்தார்.

ஆனால் ‘மடாரி’ டிசைனர் உருவாக்கிய போஸ்டர்தான் ஒரிஜினல். கபாலி பட போஸ்டர் ஆனது ரஜினி ரசிகர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கபாலி குழுவினருக்கு சற்று சங்கடம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

‘கபாலி’ மற்றும் ‘மடாரி’ ஆகிய இந்த இரண்டு படங்களும் ஜூலை 15ம் தேதி வெளியாகவுள்ளது.

கபாலி ரிலீஸ் தேதியில் ரஜினிக்கு மெடிக்கல் செக்கப்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் உடல் நலம் பெற வேண்டியும், உலக அமைதிக்காகவும் அவரது அண்ணன் சத்யநாராயணா தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்.

கும்பகோணம், திருநாகேஸ்வரம் மற்றும் தஞ்சை கோயில்களில் அவர் வருகை தந்தபோது சத்யநாராயணா அளித்த பேட்டியை நாம் முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் கபாலி வெளியாகும் என கூறப்படும் ஜூலை 15ம் தேதியில்தான் மீண்டும் பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவிருக்கிறாராம்.

இதுகுறித்து சத்யநாராயணா கூறியதாவது….

“உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

மீண்டும் பரிசோதனை செய்வதற்கு ஜூலை 15ம் தேதி அப்பாயிண்மெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.

விரைவில் அவர் திரும்பி வருவார். மக்கள் ரஜினியின் வருகையை எதிர் நோக்கி காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவருக்காக உயிரை கொடுக்கவும் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். ரஜினியை வாழ வைத்து கொண்டிருப்பது தமிழக மக்கள்தான்.

அதற்கு ரஜினி எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்டதற்கு…

“அரசியலுக்கு வருவதை பற்றி ரஜினிகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும்”. என்று தெரிவித்தார்.

விஜய்-அஜித் பட இயக்குனருக்கு ‘அழுகிய தேங்காய் விருது’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா கலைஞர்களை கௌரப்படுத்தவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால் சமீபகாலமாக மோசனமான படங்களுக்கு விருது வழங்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.

கேரளாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று இதுபோன்ற விருதுகளை மோசமான மலையாள படங்களுக்கும் மட்டும் வழங்கி வருகிறது.

ராட்டன் கோகனட் அவார்டு எனப்படும் அட அதாங்க ‘அழுகிய தேங்காய் விருது’ என்கிற பெயரில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதை கூட யாராச்சும் வாங்க வருவாங்களா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இந்த விருதுகள் அறிவிக்கப்படுமே தவிர வழங்கப்பட மாட்டாது.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டிற்கான மிகச்சிறந்த மோசமான விருது ‘சாம்ராஜ்யம்-2’ படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பேரரசு இயக்கிய இப்படத்தில் உன்னி முகுந்தன் நடித்திருந்தார்.

விஜய்யின் திருப்பாச்சி, சிவகாசி மற்றும் அஜித்தின் திருப்பதி படங்களை இயக்கியவர் பேரரசு என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

பல வருடங்களுக்கு முன் மம்மூட்டி நடிப்பில் ‘சாம்ராஜ்யம்’ முதல் பாகம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

‘கபாலி’க்கு பிறகுதான் கன்பார்ம் பன்னுவோம்… தனுஷ் வெயிட்டிங்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி முதலில் ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் அப்படம் தள்ளிப்போனதால் அன்றைய தினத்தில் ஜாக்சன் துரை, அப்பா, பைசா உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகிறது.

தற்போது ஜூலை 15ஆம் தேதி கபாலி ரிலீஸ் என கூறப்பட்டுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பிரபல நட்சத்திரங்களும் தயாரிப்பாளர்களும் பெரிதும் எதிர்நோக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்து தங்கள் படங்களை வெளியிட இருக்கிறார்களாம்.

இதில் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகிய தனுஷின் தொடரி படமும் காத்திருக்கிறது.

இவை மட்டுமின்றி நிறைய படங்களும் கபாலியை கன்பார்ம் செய்த பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

எனவே எந்த போட்டியும் இன்றி ‘கபாலி’சிங்கம் சிங்கிளாதான் வரும் போல

More Articles
Follows