‘முதலில் விக்ரம்; அப்புறம்தான் சூர்யா…’ ஹாரிஸ் ஜெயராஜ் முடிவு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்து வருடங்களுக்கு முன்பு டஜன் கணக்கில் படங்களை வைத்துக் கொண்டிருந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இவரது இசையில் வருடத்திற்கு ஓரிரு படங்களே வந்தன.

தற்போது விக்ரமின் இருமுகன், சூர்யாவின் சிங்கம் 3 (S3) ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த இரு படங்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், எந்த படத்தின் பாடல்கள் முதலில் வெளியாகும் என தெரிவித்துள்ளார் ஹாரிஸ்.

ஜுலையில் இருமுகன் பாடலையும் அதன்பின்னர் சிங்கம் 3 பாடலையும் கொடுக்கவிருக்கிறாராம்.

Ok. Here I am. Sharing the updates upon the request from my fans. Music of #IruMugan will be out by next month followed by #S3 .

— Harris Jayaraj (@Jharrisjayaraj) June 14, 2016

முதல்வருக்கு கடிதம் எழுதிய ‘ப்ரேமம்’ அல்போன்ஸ் புத்திரன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேரம் படத்தின் இயக்குனர் ஆனது முதல் அல்போன்ஸ் புத்திரனின் சினிமா நேரம் நன்றாகவே அமைந்தது.

இதனையடுத்து இவர் இயக்கிய பிரேமம் படம், கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் சக்கை போடு போட்டது.

தற்போது பிரேமம் என்ற பெயரில் தெலுங்கிலும் ரீமேக் ஆகி வருகிறது.

இந்நிலையில் இவர் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறாராம்.

அதில் “மெட்ரோ ரயில் திட்டத்தை கண்டித்து இவர் குறிப்பிட்டுள்ளாராம்.

மக்களின் அன்றாட தேவைக்கு சுத்தமான குடிநீர் இங்கு கிடைப்பதில்லை. அதுவே தற்போது அத்தியாவசிய தேவையாக உள்ளது.

இதனிடையில் ஆடம்பர மெட்ரோ ரயில் திட்டம் இப்போது அவசியமில்லை.” என்று தெரிவித்திருக்கிறாராம்.

இதனையறிந்த நெட்டீசன்கள் பலரும் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற சிலரோ இவரை கண்டித்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

தனுஷின் ஹிட் இயக்குனருடன் இணையும் விமல்-ஆனந்தி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘அட்ரா மச்சான் விசிலு’.

இப்படத்தை முதல் படமாக தயாரித்துள்ள அரசு பிலிம்ஸ், தனது இரண்டாவது படத்தையும் விரைவில் தொடங்கவுள்ளது.

‘மன்னர் வகையறா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார்.

இவர் தனுஷின் சூப்பர் ஹிட் படங்களான தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர்.

தற்போது இயக்கவுள்ள ‘மன்னர் வகையறா’ படத்தில் விமல், கயல் ஆனந்தி, பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சந்தானம் மற்றும் சூரியுடன் இதுநாள் வரை இணைந்த விமல் இப்படத்தின் மூலம் ரோபோ சங்கருடன் கைகோர்க்கிறார்.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜாக்ஸ் இசையமைக்கிறார்.

முதல் பிரதி அடிப்படையில் விமல் இப்படத்தை தயாரிக்கிறாராம்.

ஜூன் 20 முதல் இதன் சூட்டிங் சென்னையில் துவங்குகிறது.

‘அதெல்லாம் நம்பாதீங்க.. நானே சொல்றேன்..’ சூர்யா விளக்கம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100வது படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

சுந்தர் சி இயக்கவுள்ள இப்படமானது ரூ. 100 கோடி செலவில் தயாராகிறது.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாக்கவுள்ளனர்.

சரித்திர படமான இப்படத்தில் நாயகனாக சூர்யா நடிப்பார் என சமீபகாலமாக செய்திகள் வந்தன.

இதுகுறித்து சூர்யா தரப்பில் விசாரிக்கையில்…

“ஒரு படத்தில் கமிட் ஆவதற்கு முன்பு நிறைய விஷயங்களை ஆலோசிக்க வேண்டியுள்ளது.

அதிகாரப்பூர்வ செய்தி வரும் வரை எதையும் நம்பாதீர்கள்” என தெரிவித்திருக்கிறார்கள்.

சென்னை 28 இரண்டாம் பாகத்திலும் தான் நடிக்கவில்லை என சூர்யா அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இருமுகன் ரிலீஸ் தேதியை உறுதிசெய்த படக்குழு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐ என்ற பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரம் படங்கள் பெரிதாக பேசப்படவில்லை.

எனவே தற்போது நடித்துவரும் இருமுகன் படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் விக்ரம்.

ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது உறுதி செய்துள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிட இருக்கிறார்களாம்.

கபாலி யாரு? அஜித் பட புரொடியூசரிடம் விசாரித்த இத்தாலியர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெனிஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்கள் உலகெங்கிலும் நடந்து வருகிறது. இதில் கேன்ஸ் திரைப்பட விழா பிரபலமானது.

பிரான்ஸில் நடக்கும் இவ்விழாவில் கடந்த 15 வருடங்களாக கலந்துக் கொண்டு வருகிறார் ‘ஆனந்தா பிக்சர்ஸ்” சுரேஷ்.

இவர் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

இந்தியன் ஃபிலிம் பெடரேஷனின் முன்னாள் தலைவரான இவர், தற்போது இந்திய சினிமா ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக இருக்கிறார்.

இந்நிலையில் இந்தாண்டு கேன்ஸ் விழாவில் கலந்துக் கொண்ட இவருக்கு ஒரு புதிய அனுபவம் கிடைத்துள்ளதாம்.

இதுகுறித்து இவரின் சமீபத்திய பேட்டியில் இவர் கூறியதாவது….

ஞகேன்ஸ் திரைப்பட விழாவில் எல்லா நாட்டு மொழி திரைப்படங்களும் திரையிடப்படும்.

அப்போது ரிலீசாகவுள்ள 30 இந்தியப் படங்களின் டீஸரை திரையிட்டனர்.

ஒவ்வொன்றாக திரையிடப்பட்ட போது, திடீரென ‘நெருப்புடா’ என்ற வித்தியாசமான இசை விண்ணில் பறந்தது. ரஜினியின் ‘கபாலி’ டீஸர் திரையிடப்பட்டது.

எவரும் எதிர்பாரா வகையில், எல்லாரும் எழுந்து நின்று ஆரவாரம் செய்தார்கள்.

எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. ரஜினி பட டீஸருக்கு அங்கு இப்படி ஒரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை.

அப்போது இதனை கவனித்த இத்தாலிய சினிமாவைச் சேர்ந்த ஒரு பிரமுகர், ரஜினி குறித்து அங்கு விசாரிக்க, எனக்கு அவர் அறிமுகம் ஆனார்.

அவரது பெயர் மிஷெல் க்ராஷியோலா.

‘கபாலி’ படத்தை இத்தாலியில ரிலீஸ் செய்யனும். இது தொடர்பா நான் யாரை இந்தியாவில் தொடர்பு கொள்ளனும் என கேட்டார்.

நான் தயாரிப்பாளர் தாணுவின் தொலைபேசி எண்ணை கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியாக பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார்.

உலகளவில் தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு பெருமையா? என்பதை கண்டு வியந்தேன்.”

என நெகிழ்வோடு தெரிவித்துள்ளார் சுரேஷ்.

More Articles
Follows