விஷாலை கிண்டலடித்த கேமியோ பிலிம்ஸின் இமைக்கா நொடிகள் என்னாச்சு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வா, நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இமைக்கா நொடிகள்.

டிமான்டி காலனி புகழ் அஜய்ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இப்படம் வெளியாவதற்கு முன்பே அதாவது 4 நாட்களுக்கு முன்பே இப்படத்தை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காண்பிப்பதாக தயாரிப்பாளர் இதன் பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

மேலும் பேசும்போது… விஷால் தன் இரும்புத் திரை படத்தை முதலில் திரையிடும் போது பாதி படம்தான் காண்பித்தார். ஆனால் முழுப்படத்தை ஆகஸ்ட் 26ஆம் தேதியே திரையிடுவோம் என பேசியிருந்தார்.

ஆனால் இமைக்கா நொடிகள் படத்தை இதுவரை திரையிடவில்லை.

ஒருவேளை நாளை திரையிட முடிவி செய்துவிட்டார்களோ? என்னவோ?

சொன்ன வாக்கு என்னாச்சு சார்..?

சீமராஜா & 96 படங்களுடன் மோத தயாராகும் நரகாசூரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘துருவங்கள் 16’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’.

இதில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ரோன் இதான் யோகன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு தேதி பல முறை அறிவிக்கப்பட்டு அடிக்கடி தள்ளிக் கொண்டு போனது.

தற்போது இறுதியாக செப்டம்பர் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’, விஜய்சேதுபதி நடித்துள்ள ‘96’, சமந்தா நடித்துள்ள ‘யு டர்ன்’ ஆகிய படங்களும் இதே நாளில் ரிலீசாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Naragasooran release pushed to 13th September 2018

மக்கள் நல இயக்கத்தை தொடங்கிய விஷால்; திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் என பன் முகம் கொண்ட நடிகர் விஷால் இன்று தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இவர் தயாரித்து நடித்த இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

அதில் இயக்குனர் மித்ரன், அர்ஜீன், சமந்தா, ரோபோ சங்கர் ஆகியோருடன் பல திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இவர்களுடன் டைரக்டர் எஸ்ஏ. சந்திரசேகர், லிங்குசாமி, ஆர். கே. செல்வமணி, தயாரிப்பாளர் பிடி. செல்வகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு விஷாலை வாழ்த்தினர்.

இவ்விழாவில் விஷால் பேசும்போது…

இரும்புத் திரை சூட்டிங்கின் போது நான் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சித்தேன். ஆனால் அதில் நான் போட்டியிடக் கூடாது என இயக்குநர் மித்ரன் வேண்டிக் கொண்டார்.

அவருடைய வேண்டுதல் நிறைவேறி விட்டது.

விரைவில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரவுள்ளது. அதில் நான் போட்டியிட வாய்புள்ளது என்றார்.

மேலும் இன்று தன் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கி தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார் விஷால்.

`அணி சேர்வோம், அன்பை விதைப்போம்’ என்ற வாசகத்துடன் கூடிய கொடியையும் இந்தக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

மேலும் அவர் பேசியதாவது…

மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதே அரசியலாகும். நான் வணங்கும் இரண்டு தெய்வங்கள் அன்னை தெரசா, அப்துல்கலாம்.

அப்துல் கலாமை பார்க்கும்போது அறிவு ஞாபகம் வரும். அன்னை தெரசாவைப் பார்க்கும்போது அன்பு நினைவுக்கு வரும்.

வீதியில் நடக்கும் பிரச்னையைப் பார்த்து கேள்விகேட்காவிட்டால் பிணத்துக்குச் சமம். நம் நாட்டில் கொத்தடிமைகள் இன்னும் உள்ளார்கள்.

சோதனைகளைத் தாண்டி சாதனைகள் செய்யும்போது சந்தோஷம் ஏற்படும். என்னுடைய சந்தோஷத்தையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளவே வேண்டும்.

அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் இடமாக மாறிவிட்டது. நடிகனாக சம்பாதித்துவிட்டு குடும்பத்துடன் இருக்க முடியாது.

நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகளே. அரசியல் என்பது மக்கள் பிரச்னையைத் தீர்ப்பதுதான். எனக்குச் சொந்தமாக இருப்பதெல்லாம் ரசிகர்களாகிய நீங்கள்தான்.” என்று ரசிகர்கள் முன்னிலையில் பரபரப்பாக பேசினார்.

Actor Vishal convert his fans club into Makkal Nala Iyakkam

விஜய் படத்திற்காக வாட்ச் மேனாக மாறிய ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்து படங்களை ஒப்புக் கொண்டு ஒவ்வொன்றாக நடித்து வருகிறார் ஜீ.வி.பிரகாஷ்.

‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாள மயம்’, ஜெயில் ஆகிய படங்கள் தற்போது ஜீ.வி.பிரகாஷ் கைவசம் உள்ளன.

இவையில்லாமல் விஜய் இயக்கத்திலும் ஒரு படத்திலும் நடித்து வந்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘செம’.

இந்நிலையில், விஜய் இயக்கிவரும் படத்தின் தலைப்பு ‘வாட்ச்மேன்’ என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இதில் நாயகன் ஜிவி. பிரகாஷ் வாட்ச் மேனாக நடிக்கிறாரா? அல்லது வேறு ஒரு பாத்திரமா? என்பது குறித்த தகவல் இல்லை.

Vijay and GV Prakash teams up for Watch Man movie

ஆகஸ்ட் 31ஆம் தேதி 6 படங்கள் ரிலீஸ்; தயாரிப்பாளர் சங்க விதி என்னாச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தியேட்டர் பற்றாக்குறை, ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸ் ஆகிய பிரச்சினைகளால் இனி வாரத்திற்கு 3 அல்லது 4 படங்களை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்தது.

ஆனால் அவற்றை மீறி வாரத்திற்கு குறைந்தது 5 படங்களாவது ரிலீஸ் ஆகிறது.

இந்த வாரம் ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் இதுவரை 6 படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படம் ஆகஸ்ட் 30ல் வெளியாகிறது.
மற்ற படங்கள் ஆகஸ்ட் 31ல் வெளியாகவுள்ளது.

பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம்பிரபு நடித்துள்ள ‘60 வயது மாநிறம்’ பா.விஜய் நடித்துள்ள ‘ஆருத்ரா’, அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா நடித்துள்ள ‘நரகாசூரன்’, சோமசுந்தரம் நடித்துள்ள ‘வஞ்சகர் உலகம்’, தினேஷ், மஹிமா நம்பியார் நடித்துள்ள ‘அண்ணணுக்கு ஜே’ ஆகிய படங்களும் களத்தில் உள்ளன.

இதில் நரகாசூரன் படம் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. அதை செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Six Tamil movies plans to release on 31st August 2018

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கிலும் இயக்கும் சந்தோஷ் பி ஜெயக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் ராஜா இயக்கத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

அடல்ட் ஹாரர் காமெடிப் படமாக இது உருவாக்கப்பட்டது.

இதில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷா ரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் பல கிடைத்தாலும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

ஆதித் அருண் என்பவர் இதில் நாயகனாக நடிக்கிறாராம்.

More Articles
Follows