கோயில் பிரசாதங்களுக்கு அனுமதியில்லை… இளையராஜாவுக்கு ஏற்பட்ட சோதனை..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார் இளையராஜா.

அப்போது அவர் கைவசம் தேங்காய், விபூதி உள்ளிட்ட கோயில் பிரசாதப் பொருட்கள் இருந்துள்ளன.

விமான நிலைய அதிகாரிகள் இளையராஜாவை சோதனையிட்ட போது இந்த பிரசாத பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

மேலும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரது குடும்பத்தாரை காத்திருக்க வைத்துள்ளனர்.

இதன் கார்த்திக் ராஜா இந்த நிகழ்வை போட்டோ எடுத்துள்ளார்.

அதன்பின்னர் ஏற்பட்ட சில பரபரப்புகளுக்கு பின்னர் பிரசாதப் பொருட்களை எடுத்து செல்ல போலீசார் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

‘ரஜினி பாதுகாப்பு… நாங்களும் பெரிய ஆளுதான்..’ தனுஷ் பன்ச்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ், கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ள படம் தொடரி.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இதுநாள் வரை மென்மையான காதலை சொன்ன பிரபு சாலமன் இதில், ஆக்ஷன் கலந்த காதலை ஓடும் ரயிலில் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.

இப்படத்தின் ட்ரைலரில் தனுஷ் பேசுவதாக ஒரு பன்ச் இடம்பெற்றுள்ளது. அதில்….

“தளபதி படம் பாத்திருக்கீங்களா. அதுல மெகா ஸ்டார் மம்மூட்டிக்கே எங்க சூப்பர் ஸ்டார் ரஜினிதாங்க பாதுகாப்பு. நாங்களும் பெரிய ஆளுதான்.” என்று சொல்வதாக உள்ளது.

தற்போது இந்த டயலாக்கை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் இவர்களது ரசிகர்கள்.

‘தல ரசிகன்தான்… ஆனா தளபதிக்கு என்னை தெரியும்..’ சிம்பு ஓபன் டாக்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட வருடங்களுக்கு பிறகு இது நம்ம ஆளு வெளியானாலும் எதிர்பார்த்ததை விட நன்றாவே கல்லா கட்டி வருகிறது.

இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் தன் நண்பர்களுடன் இந்த மகிழ்ச்சியை கொண்டாடியும் வருகிறாராம்.

இந்நிலையில் இவரது சமீபத்திய உரையாடலில் ரசிகர் ஒருவர் விஜய் அண்ணா பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த சிம்பு…. ‘விஜய், என் அண்ணனைப் போன்றவர். நான் அஜித் ரசிகன் என்பதால், ஏதோ எனக்கு விஜய்யை பிடிக்காது என்று நினைக்கிறார்கள்.

நான் யார் என்பது விஜய் அண்ணாவிற்கு நன்றாகவே தெரியும்.

தெறி படம் பார்த்தேன். படம் சூப்பர்.

ஒரு மாஸ் ஹீரோவுக்கு உரிய அனைத்தையும் செமையாக காட்டியிருந்தார் டைரக்டர் அட்லி”’ என சிம்பு பதிலளித்தார்.

மீண்டும் உதயமானது பிரபல திரையரங்கம்… ரசிகர்கள் ஹாப்பி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறை ஒரு பக்கம் சரிவை சந்தித்து வருவதால், தமிழகத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டு வருகின்றன.

ஆனால் ஒரு சில அரங்குகளோ, புத்தம் புது பொலிவுடன் மீண்டும் உதயமாகி வருகிறது.

இந்நிலையில், சென்னை போரூரில் உள்ள கோபால கிருஷ்ணா திரையரங்கம் சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது.

தற்போது இரண்டு அரங்குகள் வசதிகளுடன் புதிததாக திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரூபன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“நிறைய இருக்கை வசதிகள் மற்றும் கார் பார்க்கிங் வசதிகளுடன் இந்த புதிய அரங்கை திறந்துள்ளோம்.

டால்பி தொழில்நுட்பத்துடன் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. உணவு வசதிகள் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களும் அமைக்கப்படவுள்ளன” என்று தெரிவித்தார்.

தற்போது இறைவி மற்றும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆகிய இரண்டு படங்கள் திரையிடப்பட்டுள்ளது.

அட… இந்த விஷயத்திலும் ரஜினி-விஜய்யும் ஒண்ணா இருக்காங்களே..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

இவர்கள் இருவரையும் சுற்றி அடிக்கடி அரசியல் நிகழ்வுகள் பற்றிய பேச்சுக்கள் எழும்.

இருவரும் அடிக்கடி ரசிகர்களை சந்திப்பதை வழக்கமான வைத்துள்ளனர்.

இருவரும் தற்போது தயாரிப்பாளரின் தாணு படத்தில் நடித்துள்ளனர்.

இவையில்லாமல் இவர்கள் இருவருக்குமிடையே உணவு பழக்கத்திலும் ஒரு ஒற்றுமை உள்ளதாம்.

அதாவது இருவருக்கும் கடல் மீன் உணவு வகைகள் மிகவும் பிடிக்குமாம். அதுபோல் சிக்கன் ஐட்டங்களையும் இருவரும் விட்டு வைப்பதில்லையாம்.

மட்டன் வகைகளை விஜய் அறவே தொட மாட்டாராம். மட்டன் கொழுப்பு என்பதால் அவை தவிர்த்து வருகிறாராம்.

ஜாக்கெட் ஜானகிராமனை பாராட்டிய புஷ்பா புருசன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜீன் 3ஆம் தேதி எழில் இயக்கத்தில் உருவான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படம் வெளியானது.

விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, ரோபா சங்கர், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்த இப்படம் ரசிகர்களின் சிரிப்பலையில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு முழுமையான காமெடி படத்தை பார்த்த திருப்தி உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வெற்றிக் குறித்து சூரி கூறியதாவது…

“படம் பெரிய வெற்றி அடைந்துள்ளது. என்னை பார்க்கும் சின்ன பசங்க கூட புஷ்பா புருசன் போறாரு பாருடா சொல்றாங்க.

அந்த அளவு என் கேரக்டர் ரீச் ஆகியுள்ளது. அதற்காக டைரக்டர் எழில் சாருக்கு நன்றி.

இதில் ரோபா சங்கரின் காமெடியும் நன்றாக பேசப்பட்டுள்ளது. அவருக்கும் என் வாழ்த்துக்கள்” என்றார்.

இப்படத்தில் ஜாக்கெட் ஜானகிராமன் கேரக்டரில் ரோபா சங்கர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows