ரஜினி பட ரீமேக்கில் மகேஷ்பாபுவை இயக்க ஆசை.. ஏஆர்.முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் பிரித்தி சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஸ்பைடர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இதன் தமிழ் பதிப்பு இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

எனவே இதனை காண மகேஷ்பாபுவின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

அவ்விழாவில் ஏஆர். முருகதாஸ் பேசும்போது…

மகேஷ்பாபுவை இயக்கும்போது அவரிடம் உள்ள தொழில்பக்தியை பார்த்தேன்.

இது ஒரு ஸ்டைலிஷ் படம். இதன் டிரைலர் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும்.

மீண்டும் மகேஷ்பாபுவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் ரஜினிகாந்த் நடித்த மூன்றுமுகம் பட ரீமேக்கை இயக்க ஆசை.” என பேசினார்.

If I get chance to direct MaheshBabu again i will remake Rajinis Moondru Mugam says ARMurugadoss

சூரிக்கு-7; மொட்டை ராஜேந்திரனுக்கு-3… இதுதான் அவுங்க சம்பளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனவே சூரி மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் கால்ஷீட்க்கு பலத்த கிராக்கி உருவாகியுள்ளது.

சூரி ஒருநாளைக்கு 7 லட்சம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

பாலா இயக்கிய நான் கடவுள்’ படத்தில் கொடூரமான வில்லனாக நடித்த மொட்டை ராஜேந்திரன் தற்போது காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் ஒரு நாளைக்கு தன் சம்பளம் ரூ. 3 லட்சம் என கறாராக தன் கட்டை குரலில் சொல்லிவிடுகிறாராம்.

Soori and Mottai Rajendiran salary updates

விஜய்யை அடுத்து பிரபாஸை இயக்கும் ஏஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகேஷ்பாபு நடிப்பில் ஏஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ஸ்பைடர் படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது.

இந்த பணிகளை முடித்துவிட்டு விஜய் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் முருகதாஸ். அப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதனைத் தொடர்ந்து பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் முருகதாஸ்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் உருவாகும் என கூறப்படுகிறது.

Baahubali hero Prabhas teams up with AR Murugadoss for new project

இதுவரை சூர்யாதான் என் மகனுக்கு ஹீரோ; இனிமே நான்தான்… ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

36 வயதினிலே பட வெற்றியைத் தொடர்ந்து மகளிர் மட்டும் படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா.

பிரம்மா இயக்கியுள்ள இப்படத்தில் ஊர்வசி, சரண்யா, பானுப்பிரியா உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இப்படம் குறித்து நடிகை ஜோதிகா கூறியதாவது…

மருமகள் ஒருத்தி தன்னுடைய மாமியாரையும் அவருடைய தோழிகளை எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பதுதான் இப்பட கதை.

ஆனால் இப்படியான கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எனக்கு ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரோடு நடிக்கும்போது பயமாக இருந்தது.
என்னால் சரியாக வசனத்தை பேச கூட முடியவில்லை. பின்னர்தான் அவர்கள் ஒத்துழைப்பு மூலம் சரியானது.

ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.

நான் படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய காட்சி இருந்தது. எனவே சூர்யா 2 நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சியளித்தார்.

என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று டிராப் செய்தபோது அவளுக்கு பெருமையாக இருந்தது.

என் மகன் தேவ்வுக்கு சூர்யாதான் எப்போதும் ஹீரோ.

நாச்சியார் படம் வந்தபிறகு அவனுன்கு நான் ஹீரோவாக தெரிவேன் என நம்புகிறேன்.” என்றார்.

After Naachiyar release i will be hero for my son says Jothika

வேலைக்காரன் செய்த வேலையால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன்ராஜாவும், ரெமோ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும் இணைந்துள்ள படம் வேலைக்காரன்.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் பட்டைய கிளப்பிக் கொண்டிருப்பதால் இதன் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தமாதம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.

பின்னர் அந்த தேதி உறுதியில்லை என தகவல்கள் பறக்க, சில ஊடகங்கள் மெர்சல் படத்துடன் மோதும் என தெரிவித்தன.

எனவே சிவகார்த்திகயேன் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகாக காத்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்த பண்டிகை தினத்தை குறிவைக்க தொடங்கியது வேலைக்காரன் தயாரிப்பு நிறுவனமாக 24ஏஎம் ஸ்டூடியோஸ்.

அதன்படி இறுதியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இரண்டு முறை தேதியை மாற்றி வருடத்தின் இறுதிக்கு படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்துவிட்டதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வேதனையில் இருக்கிறார்களாம்.

Sivakarthikeyan fans disappointed because of Velaikkaran release postponed

மணிரத்னம்-விஜய்சேதுபதி-ஜோதிகா கூட்டணியில் ஐஸ்வர்யாராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காற்று வெளியிடை பட தோல்விக்கு பிறகு ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மணிரத்னம்.

எனவே இந்த முறை மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் களம் காணவிருக்கிறார்.

இவர் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி, அர்விந்த்சாமி, துல்கர்சல்மான், பகத்பாசில் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இதில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடிக்க, தற்போது ஐஸ்வர்யா ராஜேஷீம் இணைந்துள்ளார்.

இத்தகவலை ஐஸ்வர்யாவும் உறுதிசெய்துள்ளார்.

Aishwarya Rajesh teams up with Director ManiRatnam for First time

More Articles
Follows