தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் ரஞ்சித் தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’.
இந்த படம் பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்களை பட குழுவினர் சந்தித்து வருகின்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாரி செல்வராஜ் பேசும்போது…
“நல்ல இயக்குனர்கள் யாராக இருந்தாலும் யோகி பாபுவுக்காக நிச்சயம் ஒரு கதையை யோசிப்பார்கள்.
அவரின் முகம் எளிய மனிதர்களுக்கான முகம்.. நான் கர்ணன் படம் இயக்கும்போது யோகி பாபுவை கவனித்துக் கொண்டே இருப்பேன்.
அவருக்காக ஒரு கதை தயாராகிக் கொண்டிருக்கிறது.. விரைவில் அவரை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க உள்ளேன்.
எளிய மனிதர்களின் கதையை வந்து மக்களுக்கு கொடுக்கணும்னு ஆசைப்படக்கூடிய எல்லா இயக்குனர்களுக்குமே யோகிபாகி முகம் வந்து போகும். அது ஒரு பரிச்சயமான முகம்.
இந்த முகத்துக்குள்ள இருந்து கதையை அடாப் பண்ணி கொண்டு வந்து எப்படி இருக்கும் அப்படின்னு எல்லாத்துக்கும் ஆசை.. எனக்கு தெரிஞ்சு அப்படி எனக்கும் ஆசை இருக்கு” நன்றி.
இவ்வாறு இயக்குனர் மாரி செல்வராஜ் பேசினார்.
I will direct yogi babu soon says mari selvaraj