கதையை கேட்காமல் ரஜினி படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா மற்றும் 2.0 படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதுகுறித்து விஜய்சேதுபதி கூறுகையில்…

ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்று கார்த்திக் சுப்பராஜ் சொன்னார். அதைக்கேட்டதுமே ஓகே சொல்லிட்டேன்.

காரணம் கார்த்திக் சுப்பராஜ் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. அதனால் எனது கேரக்டர் பற்றி கேட்காமல் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டேன்.” என்றார் விஜய் சேதுபதி.

I dont know about my character and story line in Rajini movie says Vijay Sethupathi

விரைவில் சிம்பு பாடிய பெரியார் குத்து பாடல் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் பிரபல நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார் சிம்பு.

இதனிடையில் ஓவியா நடிக்கும் ஒரு படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், ‘பெரியார் குத்து…’ என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்த குத்து பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி என்பவர் இசையமைக்க மதன் கார்க்கி பாடலை எழுதியுள்ளார்.

தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளனர்.

இது குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

விரைவில் இந்த பாடல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Simbu Next Single Periyar Kuthu song Coming Soon

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; தமிழர்கள் கிட்ட மோதாதே என சீறும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடிகர் சிம்புவும் வீடியோ வடிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், ‘தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில். தலைவர்களும், பிரபங்களும் இரங்கல் மட்டும் தெரிவித்து வருகிறார்கள்.

அதனால், ஒரு புரோஜனமும் இல்லை. இதனால், இறந்தவர்கள் திரும்பி வரவா போகிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மனசு வலிக்கிறது.

மொழி தான் பிரச்சனையா.. நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். பிரச்சனைக்கு தீர்வு என்னிடம் உள்ளது. என் கிட்ட.. தமிழர்கள் கிட்ட மோதாதே’ என அவேசமாக பேசியுள்ளார்.

Dont mess with us Tamilians Simbu reaction on anti Sterlite protest

நயன்தாராவுடன் யோகிபாபு டூயட்; விஜய் பாராட்டிட்டார்.? அஜித் என்ன சொல்வார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு இணைந்து நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்திலுள்ள கல்யாண வயசு என்ற பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். இந்த பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்பாடல் குறித்து நடிகர் யோகிபாபு கூறியுள்ளதாவது…

‘நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் மளிகைக் கடைக்காரராக நடித்துள்ளேன். படம் முழுக்க நயன்தாராவை சைட் அடித்துக் கொண்டே இருப்பேன்.

முன்பு ஒரு நடிகையுடன் பேருந்தில் ஆடி பாடுவது போல எடுத்தபோது அந்த நடிகை என்னை தொட்டு நடிக்க மறுத்துவிட்டார்.

ஆனால் நயன்தாராவுக்கு பெரிய மனசுங்க.” என்று கூறியுள்ளார்.

யோகிபாபு தற்போது விஜய் மற்றும் அஜித் படங்களில் நடித்து வருகிறார். சூட்டிங்கின் போது யோகிபாபுவை விஜய்யை பாராட்டியுள்ளாராம்.

விரைவில் அஜித்திடம் பாடலை காண்பிக்க உள்ளார் யோகிபாபு. அவர் என்ன சொல்வாரோ? என காத்திருக்கிறாராம் யோகி பாபு.

Vijay praises Yogi babu for his romance with Nayanthara

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்த நடிகை மீது போலீஸ் வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 100 நாட்களாக அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

போராட்டத்தின் 100-வது நாளில் நடந்த போலீசின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும் இந்த அராஜக செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் கடை அடைப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டிவி நடிகை நிலானி, உண்மையில் தூத்துக்குடியில் நடப்பது திட்டமிட்ட படுகொலை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இறந்தவர்களில் 8 பேர் போராட்டத்திற்காக முன்நின்றவர்கள். அவர்களை திட்டமிட்டே கொன்றுள்ளனர்.

அந்த வீடியோவில் அவர் போலீஸ் உடை அணிந்திருந்தார்.

இந்த உடையை அணிவதற்கே ரொம்ப கேவலமாக இருக்கிறது. படப்பிடிப்பில் இருப்பதால் என்னால் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. என பேசியிருந்தார்.

எனவே நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Actress Nilani facing arrest over her controversial video on Tuticorin police violence

ஹாலிவுட்டில் கலக்கும் தமிழ் இசையமைப்பாளர் பிரித்விக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுவீடனில் ரோபோடிக்ஸில் மேற்கலை பட்டப்படிப்பை முடித்த பிரித்விக் இசையின் வசீகரத்திற்கு உள்ளாகி இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கிறார்.

தனிப்பட்ட பாடல்களின் மூலம் தனது இசை பயணத்தை அவரது நண்பர் ௮க்‌ஷயுடன் கல்லூரி நாட்களில் தொடங்கிய பிரித்விக், இப்பயணத்தை தொடர்ந்து, தனித்துவமான தனது இசையால் பலரை கவர்ந்துவருகிறார். அக்‌ஷய் இப்போது ஒரு சார்ட்டர்ட் அக்கௌடண்ட் .

சமையல் மந்திரம் (தமிழ் இணையதள படம்), சுவீடிஷ் மொழி படம், அமெரிக்க வெப் சீரியஸ் என பிசியாக இருக்கும் ப்ரித்விக் “ஓன் 23” எனும் ஹாலிவுட் டாக்குமென்ட்ரி படத்திற்கு சமீபத்தில் இசையமைத்துள்ளார்.

ஏப்ரல் 4, 2018 வெளியான இந்த டாக்குமென்ட்ரியின் ஒரிஜினல் சவுண்ட் டிராக் பலரின் பாராட்டை பெற்று வருகிறது. அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற 30 திரைப்பட விழாக்களில் இந்த படமும், படத்தின் இசையும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெர்லினில் நடைபெற்ற அரவுண்ட் தி வேர்ல்ட் பிலிம் பெஸ்டிவல் விழாவில் சிறந்த டாக்குமென்ட்ரி படத்திற்கான விருதுக்கு பரிந்துரை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபல பின்னணி பாடகர்கள் கார்த்திக், ஹரிசரண்,ஆலப் ராஜு மற்றும் புதிய இளம் பாடகர்கள் ஸ்ருதிலயா, தீ தேவன் ஆகியோர் பாடிய இசை ஆல்பத்தை விரைவில் பிரபல இசை கம்பெனியின் மூலம் வெளியிடவுள்ளார். ப்ரித்விக்கும் பாடியுள்ளார் .

இவர் முறையே கர்நாடக சங்கீதம் Dr.ஹரீஷ்யிடம், மேற்கத்திய இசை தியரி திரு . அகஸ்டின் பால், பியானோ, ம்யூசி ம்யூசிக்கல்ஸ் திரு.கிரீஷிடமும் பயில்கிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த பிரித்விக் உலக அளிவில் மேன்மேலும் பல உயர்தர இசையை மக்களுக்கு அளித்து இசைக்கும், தனது நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என்கிறார்.

Young Tamil Music Composer Prithvik enters in Hollywood

More Articles
Follows